Kaathal Sindhum Thooral - Precap 3

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hii frnds..

“ம்மா ம்மா...” என்று இருவரும் பின்னேயே சுற்ற, அவரோ காதே கேளாதது போல் அல்லாடிக்கொண்டு இருந்தார்.

“எல்லாம் உன்னால தான்..” என்று நிவின் அதிரூபனை முறைக்க,

“டேய் நான் என்னடா பண்ணேன்..” என்று அவனும் அம்மா பின்னாடி சுற்ற,

“பின்ன பாக்குற எல்லா பொண்ணையும் வேணாம் வேணாம் சொன்னா யாருக்குத்தான் கோவம் வராது.. இப்போ உன்னால அம்மா என்கிட்டவும் பேசலை...” என்று நிவின் முகத்தினை தூக்கினான்.

“டேய் டேய்.. அம்மா இப்போவே உன்னையும் ட்ரைன் பண்ணுதுடா..” என்று அதிரூபன் சொல்லவும்,
-------------------------------------------------------
“என்ன பண்ணல.. சரி இதுக்கு முன்னாடி பார்த்த பொண்ணுங்கல வேணாம் சொன்ன, நானும் சரின்னு வேற வேற பார்த்தேன்.. இப்போ செலெக்ட் பண்ணிருக்க ரெண்டு பொண்ணுக்கும் என்னடா குறைச்சல்.. அதுல ஒண்ணு உனக்கு ஓகே சொல்ல முடியாதா???” என்றவரை,


‘இதெல்லாம் உனக்கே நியாயமா...’ என்றுதான் பார்த்தான் அதிரூபன்..

“என்னடா பாக்குற... இந்த ரெண்டு பொண்ணுல ஏதாவது ஒரு பொண்ணுக்கு சரின்னு சொல்ற.. வேணும்னா நாளைக்கு வர டைம் எடுத்துக்கோ..” என்றவரை இப்போது அதிரூபன் முறைக்க,

“இங்க பார் நாங்களா பேசி முடிவு பண்ணிட்டு ஒன்னும் உன்கிட்ட சொல்லலை.. முடிவு உன்னைத்தான் எடுக்க சொல்றேன்.. ஆனா அது நல்லதா இருக்கனும்..” என்றவர் நிவினையும் சேர்த்து முறைத்துவிட்டு செல்ல,

--------------------------------------------------------------------------------

அதிரூபன் இவர்களை கடந்து செல்லவுமே கண்மணி அவனை கவனித்துவிட, திடீரென்று தெரிந்தவர்களை பார்த்தால் முகத்தினில் ஒரு பாவனை வருமே அவதுவே அவளின் முகத்தில்..

ஆனால் அது சில வினாடிகளே.. அவன் வேலையாய் இருப்பதுபோல் இருக்கவும், இவளும் வந்த வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.. கடை ஆளுடன் பேசுவதுபோல் பாவனை செய்தவன், எதிரிலிருந்த கண்ணாடி வழிய பின்னே இருக்கும் கண்மணியைத் தான் பார்த்தான்.. என்ன செய்கிறாள் என்று..

அவளது முகத்தினில் தோன்றிய மறைந்த அந்த சிறு மாற்றம் அவனின் விழிகளில் தவறாமல் விட, ‘இப்போ என்ன செய்யலாம்... போய் பேசலாமா....’ என்று கேள்வி எழ,

--------------------------------------------------------

ஆனால் இரண்டு நிமிடங்களுக்கும் மேலாக, அதிரூபன் திரும்ப வந்து “என்ன சொன்னீங்க...” என்று திரும்ப கேட்கும்போதே,

“வாட்ச்.. வாட்ச் பத்தி அண்ணா முன்னாடி சொல்லிடவேணாம்..” என்று தலையை மறுப்பாய் அசைத்து கண்மணி சொல்ல, அதிரூபனின் மொத்த பார்வையும் மென்மையாய் அசைந்து அதனினும் மெல்லமாய் சத்தம் எழுப்பிய அவளின் இதழின் மீது தழுவிப் போக,

அவனையும் அறியாமலேயே “ம்ம்ஹும் சொல்லமாட்டேன்...” என்று அவளைப் போலவே மெதுவாய் சொல்ல,

இவர்கள் இருவரும் இப்படி ரகசியம் பேசுவது சட்டையை போட்டு பார்த்துவிட்டு வந்த கண்ணனின் கண்களில் விழுந்தது..
 

Devi29

Well-Known Member
கண்மணியே பேசு மௌனம் என்ன தூது..a sis
 

Joher

Well-Known Member
Ty சரயு.....
விடா கண்டன் அம்மா.....
நீ ஒரு முடிவெடுத்துதாண்டா ஆகணும்.....
அவ அண்ணன் வேற பார்த்துட்டான்......
அவனுக்கு அவன் loveக்கு கூட்டணி கிடைச்சிடுச்சி.....

கடிகாரத்தை காட்டி கண்மணியை வளைச்சிட்ட போல....
நீ love உன் ஆளுக்கு சொல்றதுக்கு முன்னாடி மற்றவர்களுக்கெல்லாம் தெரியும் போலவே......

சவாலே சமாளி.....:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top