இனிய வணக்கம் தோழிகளே!
புது மஞ்சள் வாசத்தில்,
புது வண்ணக் கோலத்தில்,
புது மாவிலை தோரணத்தில்,
பொங்கல் பூவின் சிலிர்ப்போடு
புது அரிசி பாலெடுத்து
புது வெல்லம் சேர்த்து வைத்து
பொங்கி வரும் பொங்கலுக்கு
பொங்கலோ பொங்கல் என்று
குலவையோசை மெட்டிசைக்க
மங்கையரும் பாட்டிசைக்க
சின்னவரும் கேட்டிருக்க
மன்னவரும் மகிழ்ந்திருக்க
புத்தாடை, பூக்களுடன்
சொந்தமெல்லாம் சூழ்ந்திருக்க
அம்மன் அவள் திருவுருவை
தரிசிக்கும் அக்கணமே
திக்கெல்லாம் துலங்கிடுமே!
நல் வாழ்வும் மலர்ந்திடுமே!
அனைவருக்கும் அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.