ஒரு நல்ல கதை படித்த உணர்வு, இல்லை இல்லை கவிதையாய் ஒரு காதல் கதை படித்த உணர்வு. சில சமயங்களில், இந்த கதையின் இடையில் உங்களின் பதில்களை படிக்கும் போது, ஐய்யோ நிஜமாகவே பிருந்தாவும் கண்ணனும் திருமணம் பண்ணி விடுவார்களோ, அப்படி நடந்தால் எவ்வளவு கொடுமையான வாழ்வின் பாதையில் மூவரும் பயணிக்க வேண்டிவரும். அப்படி பயணிப்பதால் இந்த இருவரும் உண்மையான சந்தோசத்தோடு வாழ்ந்து இருப்பார்களா?? சந்தோசமே செத்த பின்பு சந்தோசமாய், மகிழ்ச்சியாய் எப்படி வாழமுடியும். கடமையாய் ஒரு வாழ்க்கை தேவை தானா?? இப்படி யோசித்து யோசித்து மனம் வலித்த நாட்கள், கண்ணீர் சிந்திய நாட்கள் ஏராளம். இதோ இப்பொழுதோ, ஒரு வழியாய் எங்கள் கண்ணன் எங்கள் சுதாவோடு, காதலாய், காமமாய், அன்பாய் ஈருடல் ஓருயிராய் மனம் ஒன்றி வாழும் இந்த வாழ்க்கை எவ்வளவு சுகம், நிஜமாக மனம் நிறைந்து விட்டது ஷோபா. இது ஏதோ எங்கள் வீட்டில் நடந்த சம்பவம் போல் வாய் எல்லாம் பல்லாக, உங்களின் அடுத்த கதையின் ஆரம்பத்தை எதிர்நோக்கி ஆவலாய் காத்திருக்கும் உங்களின் வாசகி...