பார்த்தவரெல்லாம் மயங்கி என்ன பயன் மயக்கம் கொல்ல வேண்டியவனை அது பாதிக்க வில்லை எனும் போதும் எல்லாம் வீனே…..
யாருக்கும் நிம்மதி இல்லா இந்த கல்யாணம் எதற்காக என்று தான் புரியவில்லை…
ஒழுக்கமான மகனை வளர்க்கத் தோற்றுவிட்ட பார்வை. இதை வன்மையாக எதிர்க்கிறேன் ஷோபா அவர்களே.. இத்தனை வருடங்கள் அவனுடன் வாழ்ந்து சுசிலா புரிந்து கொண்டது என்ன… அவன் நினைவு தப்பவில்லை என்றால் அவரால் இப்படி பேசி இருப்பாரா…
இப்போது கூட இரண்டு பெண்களின் வாழ்க்கை நாயகமாக கூடாது என்று தான் வேண்டுகிறான்….
சுசிலாவும் சூழ்நிலை கைதி ஒரு நிச்சயத்தை நிறுத்தி இவனுக்காக பேசிய பின் வேண்டாம் என்றால் பாவம் என்னதான் செய்வான்…
அவளுக்கு பிடித்தவனுடன் அவ வாழ்க்கையை வாழ போட்டா என்ன ஒரு அபத்தம் தெளிவாக தெரியாமல் கூறுவது தவறு என்று புரியாதவரா சுசிலா….
கொஞ்ச நேரம் புகை தரும் கண்ணெரிச்சலை தாங்காது பிருந்தா வாழ்க்கையே எரிச்சல் என்றால் தாங்குவாளா….
அசோக் எதையும் மறைக்காமல் பிருந்தவிடம் கூறியது மகிழ்ச்சி ஆனால் அதனால் பயன்???
நல்ல கணவனாக நல்ல தகப்பனாக நல்ல காதலன்?? கடமையாக செய்யும் எதிலும் உயிர்ப்பு இருக்காது…
மனதை முழுவதும் சுதா ஆக்ரமித்து விட்டால் என்றபின் யாருடனோ உயிரற்று வாழ்வதற்கு அதை இவனுடனே வாழ்ந்தால் என்ன என்று முடிவெடுத்து விட்டால் பாவம் கண்ணெதிரே தோழியின் வாழ்வை பார்த்த பின்பும்…
“மீனாட்சியம்மாளின் இரணங்களின் விளைவால் சுதாவின் இதயம் சுக்குநூறாய் போகப் போவது என்று நான் மட்டுமே அறிந்த இரகசியம்” இது மட்டுமா எல்லா இரகசியங்களும் நீங்கள் மட்டுமே அறிந்தது…
சும்மா பேசாதிங்க இப்படி பேசி பேசியே அனுப்பி விட்டீரா என்று உண்மையை அவனே அறியாமல் கேட்டு விட்டான்..
சுதா புகைப்படம் கூட தர மறுக்கும் மீனாட்சி பாட்டி இக்கதையின் சகுனி…
எல்லாருக்கும் ஜானு போல் வாழ்க்கை அமைந்து விடுமா என்ன…
உலகத்தில் கொடியது தனது உடமை தன் கண் எதிரே மற்றவருக்கு உரிமையாவது.. உடமைக்கே அப்படி என்றால் உயிர் காதல் உணந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் வலி & இழப்பும்….
மனைவியர் எப்படி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள் என்பதற்கு ஜானு டேனி உதாரணம்…..
மேடை எதிரே வீற்றிருக்கும் ஜீவன் பேசி பழகி ஏற்பட்டது அல்ல அவன் காதல் நீ மாற்றானுக்கு மனைவி ஆகும் வரை உனையே காதலிப்பேன் அதன் பிறகு வேறொருவரை மனயேன் இது எப்படி பட்ட காதல். சுதாவின் காதலுக்கும் இனையாக கூறலாம் தவறில்லை….
இப்பொழுது பிருந்தாவிற்கு தன் வாழ்வை விட அசோக் வாழ்வு முதன்மையாய் தோன்றியது என்ன செய்ய போகிறாள் அதற்கு..
ஜீவன் இல்லா வாழ்க்கை அசோக்குடன் வாழ போகிறாலா அல்லது ஜீவனோடு வாழ போகிறாளா அவள் வாழ்க்கை அவள் கையில்..
தான் காதலித்தவர் நலனுக்காக எதையும் தாங்கும் ஆம் இங்கு சுதா செய்வது. ஜீவன் செய்வது இதையே பிருந்தா செய்வாளா…
இதோ கெட்டிமேள சத்தம் கேட்டு தனது சப்பதமும் ஒடுங்கி கால் இடரி வீழ்ந்து விட்டாள் அவள் தமையன் காலடியில்…
ஆம் பிருந்தா திருமணம் முடிந்து விட்டது ஆனால் யாருடன்???? அசோக்/ஜீவன்….
எப்படி மக்கள் அடுத்து என்ன ஆப்பு மத்திய அரசு வைக்குமோ என்று பயத்துடனும் பதட்டத்துடனும் வைத்து இருக்கின்றதோ அது போலவே நீங்களும் எங்களை வைத்துள்ளீர்கள் என்றால் மிகையாகாது….
வலியை கூட ரசித்து அனுபவிக்கும் படி வரிகளை அமைத்த உங்களுக்கு நன்றி….
அடுத்த வெடிக்காக ஆவலுடன்..
achoooo.. unga comment avalavu azhaga irukku
mudhala enaku dhan thitonu konjam bayandhutaen
konjam ulkuthum iruka dhan seiyudhu... but nice
எப்படி மக்கள் அடுத்து என்ன ஆப்பு மத்திய அரசு வைக்குமோ என்று பயத்துடனும் பதட்டத்துடனும் வைத்து இருக்கின்றதோ அது போலவே நீங்களும் எங்களை வைத்துள்ளீர்கள் என்றால் மிகையாகாது…. enna pana vetrimathi sir... enna ninaichalum epadi dhan ezhudha varudhu...
அடுத்த வெடிக்காக ஆவலுடன்..
apadi ellam paesa koodadhu. nala epiya seekrama thursday varaen
thx for ur wonderful loooong comment. enjoyed reading it