S
semao
Guest
கண்ணன்:
என்றன் மண் வேண்டாம் அங்கே நீ இருப்பதால்
உன் குடும்பம் வேண்டாம் உன்னுடன் சேர்ந்தவராதலால்
உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம்
என்னால் வந்த நம் வாரிசு இதுவரை வேண்டாம்
என்றன் தந்தையும் வேண்டாம் நின்னை ஆதரிப்பதால்
என்றன் தாயும் வேண்டாம் நின்னை வெறுப்பதால்
என்றன் சுற்றமும் வேண்டாம் நின்புகழ் பாடுவதால்
சுந்தரி :
மணம் செய்வித்தது தந்தையின் தவறு
பிழையென பேசியது உன் தாயின் தவறு
மங்கையை ஆண்டது உன் தவறு
மரபை கூறாதது சுற்றத்தின் தவறு
இதில் என் பிழை எங்கே
தந்தை சொல் கேட்டது தவறா
கல்வியை நிறுத்தியதா
கட்டியவன் விருப்பத்தை மதித்தது தவறா
எங்கே சறுக்கியது என் வாழ்க்கை
என் மண்ணை விட்டால் மண வாழ்வு வருமா
மண்ணை விட்டு பொன்னை தேட சொன்னாயே
அந்த பொன்னே இந்த மண்ணில் தான் இருக்கிறது
என்றன் மண் வேண்டாம் அங்கே நீ இருப்பதால்
உன் குடும்பம் வேண்டாம் உன்னுடன் சேர்ந்தவராதலால்
உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம்
என்னால் வந்த நம் வாரிசு இதுவரை வேண்டாம்
என்றன் தந்தையும் வேண்டாம் நின்னை ஆதரிப்பதால்
என்றன் தாயும் வேண்டாம் நின்னை வெறுப்பதால்
என்றன் சுற்றமும் வேண்டாம் நின்புகழ் பாடுவதால்
சுந்தரி :
மணம் செய்வித்தது தந்தையின் தவறு
பிழையென பேசியது உன் தாயின் தவறு
மங்கையை ஆண்டது உன் தவறு
மரபை கூறாதது சுற்றத்தின் தவறு
இதில் என் பிழை எங்கே
தந்தை சொல் கேட்டது தவறா
கல்வியை நிறுத்தியதா
கட்டியவன் விருப்பத்தை மதித்தது தவறா
எங்கே சறுக்கியது என் வாழ்க்கை
என் மண்ணை விட்டால் மண வாழ்வு வருமா
மண்ணை விட்டு பொன்னை தேட சொன்னாயே
அந்த பொன்னே இந்த மண்ணில் தான் இருக்கிறது