Indhumathi Veeramakali
Active Member
வீர மார்த்தாண்டனும் தங்கவேலுவும் பேசியதைக் கேட்ட அந்த உருவம் உடம்பெல்லாம் நடுங்க அங்கிருந்து ஓடி வந்து தன் அறைக்குள் புகுந்து கொண்டது.அது வேறு யாருமல்ல.வீர மார்த்தாண்டனின் தங்கை காஞ்சன மாலாதான்.தன் அண்ணண் இப்படிப்பட்டவரா என்று நினைத்து மருகினாள்.எவ்வளவு பெரிய விசயத்தை இப்படி செய்ய மனம் வந்தது.ஒரு குடும்பத்தையே கொழுத்துவது என்றால் அது எவ்வளவு பெரிய மகா பாவம் என்று நினைத்து அழுதாள்.
தன் ஊர் மட்டுமல்லாது சுத்துபட்டிலே இருக்கிற கிராமங்களில் இருப்பவர்கள் என்ன உதவி கேட்டாலும் செய்பவர்.எத்தனை ஊரில் கோவில்கள் பள்ளிக் கூடங்கள் குளம் கண்மாய் என்று தூர் வாரிக் கொடுத்து எத்தனை விவசாயக் குடும்பங்களைக் காப்பாத்தியிருக்கார்.தன் வீட்டிலும் காட்டிலும் வேலை செய்யும் ஆட்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து திருமணம் செய்து சீர் வரிசை நகைனு கொடுத்து தன் பிள்ளைகள் போலப் பார்க்கிறவரா இந்த கொடூறமான செயலைச் செய்கிறார்.இதோ போன வாரம் கூட சுற்றுப் பட்டியிலும் ஆஸ்பத்திரி இல்லாமல் அவசரம் ஆத்திரத்திற்கு நூறு மைல் தாண்டிப் போக வேண்டி இருக்குயா.அங்கே போறதுக்குள்ளே நிறைய உசிரு போயிடுது ஐயானு எல்லா ஊர் மக்களும் புலம்புவதைக் கேட்டு உடனே ஆஸ்பத்திரி கட்டச் சொன்ன அண்ணணா இவரு.
அடுத்து நல்லாப் படிக்கக் கூடிய பிள்ளைகளை டாக்டருக்கும் நர்ஸுக்கும் படிக்க ஏற்பாடு பண்ணி அவர்களுக்கு எல்லா விதமான உதவிகளையும் செய்த அண்ணணா இப்படிச் செய்வது.ஒரு வேலை நான் கேட்டது உண்மை இல்லையோனு நினைச்சுப் பார்த்துட்டு சே சே நாம தான் கேட்டோமே. அது உண்மை தானு நினைச்சு அழுதாள்.இன்னும் தன் அண்ணணை அப்படி நினைத்துப் பார்க்க முடியவில்லை அவளால்.
நேற்றுக் கூட தன் வீட்டில் வேலை பார்க்கும் சின்னாவுடைய பொண்டாட்டி வயித்துப் பிள்ளையோட வேலைக்கு வந்தவளை ஏம்மா வள்ளி நீ எதுக்கு வேலைக்கு வந்தேனு திட்டி இனிமேல் நீ வேலைக்கு வர வேணாம்.குழந்தை பிறந்து ஆறு மாசம் கழிச்சு வேலைக்கு வந்தாப் போதும்னு சொன்னதோடு நிற்காமல் அண்ணியிடமும் ஏன் மனோ அந்தப் புள்ளைக்குத் தான் அப்பன் ஆத்தா இல்லைல.அவளுக்கு என்ன பிடிக்குதோ செஞ்சு குடு.அதோட அவளுக்கு எத்தனை மாதம்னு கேட்டு நம்மளே வளைகாப்பு செய்யலாம்னு சொன்னாரே.
அவள் புருசனையும் இனிமேல் இராத்திரி வேலைக்கு வர வேணாம்டா.புள்ளைத்தாச்சிப் புள்ளைக்கு ஏதாவது ஆசைப்பட்டா வாங்கிக் கொடுடானு அம்மாகிட்டே பணம் வாங்கிட்டுப் போடானாரே.அவனும் அண்ணிகிட்டே வந்து ஐயா சொன்னாரு அம்மானான்.அண்ணியும் வீட்டில் இருந்த பலகாரம் புதுப் புடவை பூ பழம் பணம்லாம் கொடுத்து அனுப்பினாரே.
அப்புறம் ஒரு தடவை பக்கத்து ஊர்க்காரன் இந்த ஊர்ப் பொண்ணை விரும்ப அதுக்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் சொல்லாம சண்டை போட அந்தப் பையனும் பொண்ணும் வீட்டை விட்டு ஓடி வந்து அண்ணணிடம் முறையிட இரண்டு வீட்டாரையும் கூப்பிட்டுப் பேசி சமாதானம் செய்து இவரே கூரைப் புடவை வேட்டி சட்டை தாலிலாம் வைச்சுக் கொடுத்து அனுப்பினாரேனு மண்டையைப் போட்டு குடைஞ்சுக்கிட்டு இருந்தா.
அப்புறம் ஒரு தடவை ஒருத்தன் ஒரு பொண்ணைப் பலாத்காரம் பண்ணப் பார்க்க அந்த வழியா வந்த தன் அண்ணண் இரண்டு பேரையும் கூட்டிட்டு வந்து என்ன நடந்ததுனு அந்தப் பொண்ணுகிட்டே கேக்க அந்தப் பொண்ணு இவன் என்கிட்டே ரொம்ப நாளா தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்கான்யா.நான் எவ்வளவோ ஒதுங்கி போனேன் ஐயா.
என் அப்பா அம்மாகிட்டே கூடச் சொன்னேன்.ஆனால் அவுக அவுகல்லாம் பெரிய இடம் தாயீ.நாம தான் ஒதுங்கிப் போகனும்னு சொல்லிட்டாக.நானும் அப்படித் தான்யா செஞ்சேன்.ஆனால் இன்னிக்கு எக்குத் தப்பா மாட்டிக்கிட்டேன்யானு அழுதா.அண்ணண் ஏன்டா பரதேசி நாயே நம்மகிட்டே வேலை பாக்குறாங்கன்றதுக்காக பெண்டால நினைக்கலாமா.
அவுங்க நம்ம குழந்தைங்க மாதிரி.வேலியே பயிரை மேயலாமானு தன் பெல்ட்டை உருவி அடி பின்னி எடுத்துட்டாரே.அப்படிப்பட்டவரா இப்படி ஒரு குடும்பத்தை தீ வைச்சுக் கொழுத்தச் சொல்றாறுனு அழுது அழுது கண்கள் சிவந்து கன்னமெல்லாம் வீங்கிப் போய் இருந்தாள்.அப்போ நம்ம பண்ணிணது தெரிஞ்சா என்ன செய்வாரோனு வேறு நினைச்சு அழுதாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்கவும் திடுக்கிட்டுப் போய் போர்வையை இழுத்து மூடிக்கிட்டு தூங்குறது போல நடித்தாள்.
அடுத்து என்ன நடக்கும்னு பார்ப்போம்.
தன் ஊர் மட்டுமல்லாது சுத்துபட்டிலே இருக்கிற கிராமங்களில் இருப்பவர்கள் என்ன உதவி கேட்டாலும் செய்பவர்.எத்தனை ஊரில் கோவில்கள் பள்ளிக் கூடங்கள் குளம் கண்மாய் என்று தூர் வாரிக் கொடுத்து எத்தனை விவசாயக் குடும்பங்களைக் காப்பாத்தியிருக்கார்.தன் வீட்டிலும் காட்டிலும் வேலை செய்யும் ஆட்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து திருமணம் செய்து சீர் வரிசை நகைனு கொடுத்து தன் பிள்ளைகள் போலப் பார்க்கிறவரா இந்த கொடூறமான செயலைச் செய்கிறார்.இதோ போன வாரம் கூட சுற்றுப் பட்டியிலும் ஆஸ்பத்திரி இல்லாமல் அவசரம் ஆத்திரத்திற்கு நூறு மைல் தாண்டிப் போக வேண்டி இருக்குயா.அங்கே போறதுக்குள்ளே நிறைய உசிரு போயிடுது ஐயானு எல்லா ஊர் மக்களும் புலம்புவதைக் கேட்டு உடனே ஆஸ்பத்திரி கட்டச் சொன்ன அண்ணணா இவரு.
அடுத்து நல்லாப் படிக்கக் கூடிய பிள்ளைகளை டாக்டருக்கும் நர்ஸுக்கும் படிக்க ஏற்பாடு பண்ணி அவர்களுக்கு எல்லா விதமான உதவிகளையும் செய்த அண்ணணா இப்படிச் செய்வது.ஒரு வேலை நான் கேட்டது உண்மை இல்லையோனு நினைச்சுப் பார்த்துட்டு சே சே நாம தான் கேட்டோமே. அது உண்மை தானு நினைச்சு அழுதாள்.இன்னும் தன் அண்ணணை அப்படி நினைத்துப் பார்க்க முடியவில்லை அவளால்.
நேற்றுக் கூட தன் வீட்டில் வேலை பார்க்கும் சின்னாவுடைய பொண்டாட்டி வயித்துப் பிள்ளையோட வேலைக்கு வந்தவளை ஏம்மா வள்ளி நீ எதுக்கு வேலைக்கு வந்தேனு திட்டி இனிமேல் நீ வேலைக்கு வர வேணாம்.குழந்தை பிறந்து ஆறு மாசம் கழிச்சு வேலைக்கு வந்தாப் போதும்னு சொன்னதோடு நிற்காமல் அண்ணியிடமும் ஏன் மனோ அந்தப் புள்ளைக்குத் தான் அப்பன் ஆத்தா இல்லைல.அவளுக்கு என்ன பிடிக்குதோ செஞ்சு குடு.அதோட அவளுக்கு எத்தனை மாதம்னு கேட்டு நம்மளே வளைகாப்பு செய்யலாம்னு சொன்னாரே.
அவள் புருசனையும் இனிமேல் இராத்திரி வேலைக்கு வர வேணாம்டா.புள்ளைத்தாச்சிப் புள்ளைக்கு ஏதாவது ஆசைப்பட்டா வாங்கிக் கொடுடானு அம்மாகிட்டே பணம் வாங்கிட்டுப் போடானாரே.அவனும் அண்ணிகிட்டே வந்து ஐயா சொன்னாரு அம்மானான்.அண்ணியும் வீட்டில் இருந்த பலகாரம் புதுப் புடவை பூ பழம் பணம்லாம் கொடுத்து அனுப்பினாரே.
அப்புறம் ஒரு தடவை பக்கத்து ஊர்க்காரன் இந்த ஊர்ப் பொண்ணை விரும்ப அதுக்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் சொல்லாம சண்டை போட அந்தப் பையனும் பொண்ணும் வீட்டை விட்டு ஓடி வந்து அண்ணணிடம் முறையிட இரண்டு வீட்டாரையும் கூப்பிட்டுப் பேசி சமாதானம் செய்து இவரே கூரைப் புடவை வேட்டி சட்டை தாலிலாம் வைச்சுக் கொடுத்து அனுப்பினாரேனு மண்டையைப் போட்டு குடைஞ்சுக்கிட்டு இருந்தா.
அப்புறம் ஒரு தடவை ஒருத்தன் ஒரு பொண்ணைப் பலாத்காரம் பண்ணப் பார்க்க அந்த வழியா வந்த தன் அண்ணண் இரண்டு பேரையும் கூட்டிட்டு வந்து என்ன நடந்ததுனு அந்தப் பொண்ணுகிட்டே கேக்க அந்தப் பொண்ணு இவன் என்கிட்டே ரொம்ப நாளா தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்கான்யா.நான் எவ்வளவோ ஒதுங்கி போனேன் ஐயா.
என் அப்பா அம்மாகிட்டே கூடச் சொன்னேன்.ஆனால் அவுக அவுகல்லாம் பெரிய இடம் தாயீ.நாம தான் ஒதுங்கிப் போகனும்னு சொல்லிட்டாக.நானும் அப்படித் தான்யா செஞ்சேன்.ஆனால் இன்னிக்கு எக்குத் தப்பா மாட்டிக்கிட்டேன்யானு அழுதா.அண்ணண் ஏன்டா பரதேசி நாயே நம்மகிட்டே வேலை பாக்குறாங்கன்றதுக்காக பெண்டால நினைக்கலாமா.
அவுங்க நம்ம குழந்தைங்க மாதிரி.வேலியே பயிரை மேயலாமானு தன் பெல்ட்டை உருவி அடி பின்னி எடுத்துட்டாரே.அப்படிப்பட்டவரா இப்படி ஒரு குடும்பத்தை தீ வைச்சுக் கொழுத்தச் சொல்றாறுனு அழுது அழுது கண்கள் சிவந்து கன்னமெல்லாம் வீங்கிப் போய் இருந்தாள்.அப்போ நம்ம பண்ணிணது தெரிஞ்சா என்ன செய்வாரோனு வேறு நினைச்சு அழுதாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்கவும் திடுக்கிட்டுப் போய் போர்வையை இழுத்து மூடிக்கிட்டு தூங்குறது போல நடித்தாள்.
அடுத்து என்ன நடக்கும்னு பார்ப்போம்.