Indhumathi Veeramakali
Active Member
வீர மார்த்தாண்ட பூபதியின் கெட்ட குணம் ஜாதி வெறி பிடித்தவர்.தன் வீட்டிற்கு வேலைக்கு வரும் ஆண்கள் பெண்கள் காலில் செருப்பு இருக்கக் கூடாது.துண்டு இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும்.இல்லைனா அவர் பெல்ட் அல்லது சட்டை அவர்கள் முதுகைப் பதம் பார்க்கும்.அதனால் கீழ் குடி மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.அத்து மீறி மேல் ஜாதி பையனோ பெண்ணோ கீழ் ஜாதியினரை விரும்பினால் கீழ் ஜாதி குடும்பத்தின் குடும்பத்தையே தீ வைத்துக் கொளுத்தி விடுவார்.அதற்குப் பயந்தே கீழ் ஜாதியினர் மேல் குலத்தவரிடம் ஒதுங்கியே இருப்பார்கள்.
அவருக்குப் பத்தொன்பதாவது வயதில் தன் மாமன் மகளையே திருமணம் செய்து கொண்டார்.அவர் பெயர் மனோரஞ்சிதம்.மிகவும் அன்பானவர்.தன் கொழுந்தனையும் நாத்தியையும் தன் குழந்தைகளாகவே ஏற்றுக் கொண்டார்.ஏற்கனவே தன் அத்தை வீட்டிற்கு வந்து போனதாலும் தாயும் தகப்பனும் நிறைய புத்திமதிகள் சொல்லிக் கொடுத்ததாலும் குடும்பப் பொருப்பை வெகு விரைவில் கற்றுக் கொண்டார்.
தன் வீட்டில் பணி புரியும் வேலைக்காரர்களையும் தன் குழந்தைகள் போலவே கவனித்துக் கொண்டார்.உறவினர்கள் கணவரின் நண்பர்கள் அனைவரது குணங்களையும் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டார்.ஆனால் கணவரிடம் பிடிக்காத குணம் இந்த ஜாதி வெறி.இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.இந்த நிலையில் காஞ்சன மாலா பூப்பெய்தினாள்.அவளைத் ஒரு தாய் தாங்குவது போல் கவனித்துக் கொண்டார்.
காஞ்சன மாலா பெரியவளானதும் பள்ளிப் படிப்பை நிறுத்தச் சொல்லி விட்டார் வீர மார்த்தாண்டார்.விஜயன் தன் பிடிவாதத்தினால் வெளியூரில் தங்கி கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார்.விஜயன் கல்லூரிக்கு செல்லும் முன் வீர மார்த்தாண்டர் ஆயிரம் அறிவுரை கூறிவிட்டார்.படிக்கப் போற இடத்தில் எவளையாவது காதலிக்கிறேன்.இவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கிறேனு சொன்னால் உன்னை விட்டுடுவேன்.அந்தக் குடும்பத்தை அழிச்சிடுவேனு மிரட்டித் தான் அனுப்பி வைத்தார்.
விஜயனும் சரி சரினு சொல்லிட்டுப் போனார்.காஞ்சன மாலாவுக்கு சமையல் வீட்டு வேலை வீட்டைப் பராமரிப்பது எப்படினு கற்றுக் கொடுத்தார் மனோ ரஞ்சிதம்.ஒரு நாள் அடுப்பங்கரையில் காஞ்சனாவுக்கு எதையோ கற்றுக் கொடுக்கும் போது மயக்கம் போட்டு விழவும் காஞ்சனா பயந்து போனாள்.கிராமத்து மருத்துவச்சி வந்து சோதித்துப் பார்த்து விட்டு கரு உண்டாகி இருக்குனு சொல்லவும் மார்த்தாண்டருக்கு ஒரே சந்தோசம்.இந்த விசயம் தெரிந்த மனோ ரஞ்சிதத்தின் அப்பாவும் அம்மாவுக்கும் மிகுந்த சந்தோசத்துடன் மகளைப் பார்க்க வந்தனர்.
மகளுக்குப் பிடித்ததெல்லாம் சமைத்துக் கொடுத்தார்.கல்லூரியில் படிக்கச் சென்ற விஜயன் தன் கல்லூரியில் படித்த நண்பனும் உயிர்த் தோழனுமான சங்கரின் வீட்டிற்குச் சென்றான்.அங்கே சங்கரின் தங்கையான ஜானகியைப் பார்த்ததும் அவள் அழகில் மயங்கிப் போகிறான்.அவளின் அமைதியான குணமும் பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோரிடமும் பழகும் குணமும் அவனைப் படாதபாடு படுத்தியது.தன் அண்ணண் சொன்ன அறிவுரையும் அவரின் குணத்தையும் மறந்து அடிக்கடி சங்கரின் வீட்டுக்கு வருகிறான்.
காலப் போக்கில் இருவரும் ஒருவர் இல்லையேல் ஒருவர் இல்லை என்னும் அளவுக்கு தீவிரமாக விரும்ப ஆரம்பித்தனர்.இதை மனோ ரஞ்சிதத்துடைய அப்பாவின் வீட்டு வேலையாள் பார்த்து விட்டு வந்து மனோ ரஞ்சிதத்திடம் சொல்லி விட்டார்.
மனோ ரஞ்சிதம் அவரிடம் இந்த விசயத்தை உன்னைத் தவிர வேறு யாரிடமும் சொல்லக் கூடாது என சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்.அவனும் தாய் நீங்க போட்ட உப்பைத் தின்னவன்.நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் தாய்.ஆனால் சீக்கிரமா சின்ன எஜமானைக் காப்பாத்திடுங்க தாய்.அந்தப் பொண்ணும் நல்ல குணவதியாத் தான் இருக்குனு சொன்னான்.சரி நான் பார்த்துக்கிறேனு சொல்லிட்டு இரண்டு புடவை வேட்டி கையிலே காசையும் கொடுத்து அனுப்பி வைச்சா.
இந்த சூழ்நிலையில் மனோ ரஞ்சிதத்திற்கு வளைகாப்பு நடத்தனும்னு மனோவின் அப்பாவும் அம்மாவும் சொல்ல சரினு சொல்லி ஒரு நல்ல நாள் பார்த்து ஏற்பாடு செய்றாங்க.அதுக்கு விஜயனையும் வரச் சொல்ல அவனும் வருகிறான்.சங்கரின் குடும்பத்தையும் கூட்டிட்டு வருகிறான்.இவன் வீட்டைப் பார்த்தே சங்கரன் குடும்பத்துக்கு பிரமிப்பா இருக்கு.வீர மார்த்தாண்டனின் உருவம் அந்த வீட்டின் செல்வச் செழிப்பு ஏவுற வேலையைச் செய்ய தயாரா நிற்கிற வேலை ஆட்களைப் பார்த்து மயக்கம் வராத குறை தான் சங்கரின் குடும்பத்திற்கு.
அனைவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் விஜயன்.அப்போது அங்கேயே நில் என்று அதிகாரக் குரல் ஒலிக்கவும் சங்கரன் குடும்பமோ பயந்து நடுங்கி விட்டனர்.ஜானகியின் நிலையைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.விஜயன் ஊர் மக்கள் விஜயனுக்குக் கொடுத்த மரியாதை வீடு வேலையாட்கள் இவர்களைப் பார்த்தே மிரண்டவளுக்கு இந்த அதிகாரக் குரலில் அவள் சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது.மார்த்தாண்டம் விஜயா யார் இவுகல்லாம்னு கேட்டார்.அப்போ தான் விஜயனுக்கு ஐயோ இதை எப்படி மறந்தோம்னுங்கிற நினைப்பே வந்தது.
அண்ணா இவன் பேர் சங்கர்.என் ஒரே நண்பன்.இவுங்க இவனோட அப்பா அம்மா தங்கச்சி.இவுங்களும் நல்ல வசதியானவங்க தாண்ணானு சொன்னவுடன் என்ன ஜாதினு கேட்டவுடன் சங்கரனின் அப்பா கோபத்துடனும் அருவெறுப்புடனும் விஜயனைப் பார்த்து விட்டு தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.ஜானகியின் கண்களில் இருந்து கண்ணீர் எப்போ வரும்னு சொல்ல முடியாத நிலையில் இருந்தாள்.
என்ன ஜாதினு சொல்லிட்டுப் போங்க என்று அதே மிடுக்குடன் மார்த்தாண்டன் கேட்க மனுச ஜாதினு வெடுக்கென சொல்லி விட்டு தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்று விட்டார் ஜானகியின் அப்பா கதிரவன்.மனோ வந்து மாமா வந்தவங்களை இப்படி வாசப்படியிலே நிக்க வைச்சுப் பேசியா அனுப்புவாங்கனு கேட்டாள்.எனக்கு என் ஜாதி தான் முக்கியம். என் ஜாதி சனத்தைத் தவிர வேற எந்த ஜாதியும் என் வீட்டுக்குள்ளே நுழையக் கூடாதுனு தெரியும்ல உனக்குனு கத்தினார்.
விஜய் நீ வெளியிலே என்னவேனாலும் பண்ணிக்கோ.ஆனால் வீட்டுக்குள்ளே யாரையும் கூட்டிட்டு வருகிற வேலைலாம் வைச்சுக்காதே.என்னடா ஏதாவது காதல் கீதல்னு இருக்கானு கேட்டவுடனே மனோ இடையில் புகுந்து வந்த புள்ளையை வாசல்லேயே நிக்க வைச்சு பேசிக்கிட்டிருக்கீக.போப்பா போ போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுனு அனுப்பி வைச்சிட்டா.
ஆனால் வீர மார்த்தாண்டருக்கு தம்பி மேல் சந்தேகம் வர ஆரம்பிச்சது.அவர் மூளை வேகமாக யோசிக்க ஆரம்பித்தது.வீடு வரைக்கும் ஒரு வயசுப் பொண்ணையும் குடும்பத்தோடு கூட்டிட்டு வரணும்னா ஏதோ ஒன்னு சரியில்லையே.ம்ம் அந்தக் குடும்பத்தை மனக் கண் முன் கொண்டு வந்து நினைத்துப் பார்த்தார்.
ஆகா அந்தப் பொண்ணு அழுதுகிட்டேல போச்சு.அப்போ இவனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் இடையிலே ஏதோ ஒன்னு இருக்கு.டேய் தங்கவேலுனு கூப்பிட்டார்.இவன் தான் வீர மார்த்தாண்டனுக்கு வலது இடதுகைலாம்.டேய் சின்ன எஜமான் காலேஜுக்குப் போன பிறகு அவன் பின்னாலேயே போய் அவனுடைய நடவடிக்கைகளைக் கவனிச்சுட்டு வந்து சொல்லு சரியா.சரிங்க எஜமான்னான் அவன்.அப்படி ஏதாவது தப்பா இருந்தா என்ன செய்யனும்னு தெரியும்ல.அப்படி மட்டும் இருக்கட்டும் ஐயா.குடும்பத்தோடு கொளுத்திட மாட்டேன்.ம்ம் இது யாருக்கும் தெரியக் கூடாது சரியா.அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் ஐயா.கவலைப்படாதீங்க.இதை ஒரு உருவம் மறைஞ்சு இருந்து கவனிச்சுட்டு இருந்தது.அவர்கள் பேசியதைக் கேட்டதும் வேகமாக ஓடிப் போய் தன்அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டது.
அடுத்த அத்தியாயம் தொடரும்..
அவருக்குப் பத்தொன்பதாவது வயதில் தன் மாமன் மகளையே திருமணம் செய்து கொண்டார்.அவர் பெயர் மனோரஞ்சிதம்.மிகவும் அன்பானவர்.தன் கொழுந்தனையும் நாத்தியையும் தன் குழந்தைகளாகவே ஏற்றுக் கொண்டார்.ஏற்கனவே தன் அத்தை வீட்டிற்கு வந்து போனதாலும் தாயும் தகப்பனும் நிறைய புத்திமதிகள் சொல்லிக் கொடுத்ததாலும் குடும்பப் பொருப்பை வெகு விரைவில் கற்றுக் கொண்டார்.
தன் வீட்டில் பணி புரியும் வேலைக்காரர்களையும் தன் குழந்தைகள் போலவே கவனித்துக் கொண்டார்.உறவினர்கள் கணவரின் நண்பர்கள் அனைவரது குணங்களையும் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டார்.ஆனால் கணவரிடம் பிடிக்காத குணம் இந்த ஜாதி வெறி.இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.இந்த நிலையில் காஞ்சன மாலா பூப்பெய்தினாள்.அவளைத் ஒரு தாய் தாங்குவது போல் கவனித்துக் கொண்டார்.
காஞ்சன மாலா பெரியவளானதும் பள்ளிப் படிப்பை நிறுத்தச் சொல்லி விட்டார் வீர மார்த்தாண்டார்.விஜயன் தன் பிடிவாதத்தினால் வெளியூரில் தங்கி கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார்.விஜயன் கல்லூரிக்கு செல்லும் முன் வீர மார்த்தாண்டர் ஆயிரம் அறிவுரை கூறிவிட்டார்.படிக்கப் போற இடத்தில் எவளையாவது காதலிக்கிறேன்.இவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கிறேனு சொன்னால் உன்னை விட்டுடுவேன்.அந்தக் குடும்பத்தை அழிச்சிடுவேனு மிரட்டித் தான் அனுப்பி வைத்தார்.
விஜயனும் சரி சரினு சொல்லிட்டுப் போனார்.காஞ்சன மாலாவுக்கு சமையல் வீட்டு வேலை வீட்டைப் பராமரிப்பது எப்படினு கற்றுக் கொடுத்தார் மனோ ரஞ்சிதம்.ஒரு நாள் அடுப்பங்கரையில் காஞ்சனாவுக்கு எதையோ கற்றுக் கொடுக்கும் போது மயக்கம் போட்டு விழவும் காஞ்சனா பயந்து போனாள்.கிராமத்து மருத்துவச்சி வந்து சோதித்துப் பார்த்து விட்டு கரு உண்டாகி இருக்குனு சொல்லவும் மார்த்தாண்டருக்கு ஒரே சந்தோசம்.இந்த விசயம் தெரிந்த மனோ ரஞ்சிதத்தின் அப்பாவும் அம்மாவுக்கும் மிகுந்த சந்தோசத்துடன் மகளைப் பார்க்க வந்தனர்.
மகளுக்குப் பிடித்ததெல்லாம் சமைத்துக் கொடுத்தார்.கல்லூரியில் படிக்கச் சென்ற விஜயன் தன் கல்லூரியில் படித்த நண்பனும் உயிர்த் தோழனுமான சங்கரின் வீட்டிற்குச் சென்றான்.அங்கே சங்கரின் தங்கையான ஜானகியைப் பார்த்ததும் அவள் அழகில் மயங்கிப் போகிறான்.அவளின் அமைதியான குணமும் பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோரிடமும் பழகும் குணமும் அவனைப் படாதபாடு படுத்தியது.தன் அண்ணண் சொன்ன அறிவுரையும் அவரின் குணத்தையும் மறந்து அடிக்கடி சங்கரின் வீட்டுக்கு வருகிறான்.
காலப் போக்கில் இருவரும் ஒருவர் இல்லையேல் ஒருவர் இல்லை என்னும் அளவுக்கு தீவிரமாக விரும்ப ஆரம்பித்தனர்.இதை மனோ ரஞ்சிதத்துடைய அப்பாவின் வீட்டு வேலையாள் பார்த்து விட்டு வந்து மனோ ரஞ்சிதத்திடம் சொல்லி விட்டார்.
மனோ ரஞ்சிதம் அவரிடம் இந்த விசயத்தை உன்னைத் தவிர வேறு யாரிடமும் சொல்லக் கூடாது என சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்.அவனும் தாய் நீங்க போட்ட உப்பைத் தின்னவன்.நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் தாய்.ஆனால் சீக்கிரமா சின்ன எஜமானைக் காப்பாத்திடுங்க தாய்.அந்தப் பொண்ணும் நல்ல குணவதியாத் தான் இருக்குனு சொன்னான்.சரி நான் பார்த்துக்கிறேனு சொல்லிட்டு இரண்டு புடவை வேட்டி கையிலே காசையும் கொடுத்து அனுப்பி வைச்சா.
இந்த சூழ்நிலையில் மனோ ரஞ்சிதத்திற்கு வளைகாப்பு நடத்தனும்னு மனோவின் அப்பாவும் அம்மாவும் சொல்ல சரினு சொல்லி ஒரு நல்ல நாள் பார்த்து ஏற்பாடு செய்றாங்க.அதுக்கு விஜயனையும் வரச் சொல்ல அவனும் வருகிறான்.சங்கரின் குடும்பத்தையும் கூட்டிட்டு வருகிறான்.இவன் வீட்டைப் பார்த்தே சங்கரன் குடும்பத்துக்கு பிரமிப்பா இருக்கு.வீர மார்த்தாண்டனின் உருவம் அந்த வீட்டின் செல்வச் செழிப்பு ஏவுற வேலையைச் செய்ய தயாரா நிற்கிற வேலை ஆட்களைப் பார்த்து மயக்கம் வராத குறை தான் சங்கரின் குடும்பத்திற்கு.
அனைவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் விஜயன்.அப்போது அங்கேயே நில் என்று அதிகாரக் குரல் ஒலிக்கவும் சங்கரன் குடும்பமோ பயந்து நடுங்கி விட்டனர்.ஜானகியின் நிலையைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.விஜயன் ஊர் மக்கள் விஜயனுக்குக் கொடுத்த மரியாதை வீடு வேலையாட்கள் இவர்களைப் பார்த்தே மிரண்டவளுக்கு இந்த அதிகாரக் குரலில் அவள் சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது.மார்த்தாண்டம் விஜயா யார் இவுகல்லாம்னு கேட்டார்.அப்போ தான் விஜயனுக்கு ஐயோ இதை எப்படி மறந்தோம்னுங்கிற நினைப்பே வந்தது.
அண்ணா இவன் பேர் சங்கர்.என் ஒரே நண்பன்.இவுங்க இவனோட அப்பா அம்மா தங்கச்சி.இவுங்களும் நல்ல வசதியானவங்க தாண்ணானு சொன்னவுடன் என்ன ஜாதினு கேட்டவுடன் சங்கரனின் அப்பா கோபத்துடனும் அருவெறுப்புடனும் விஜயனைப் பார்த்து விட்டு தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.ஜானகியின் கண்களில் இருந்து கண்ணீர் எப்போ வரும்னு சொல்ல முடியாத நிலையில் இருந்தாள்.
என்ன ஜாதினு சொல்லிட்டுப் போங்க என்று அதே மிடுக்குடன் மார்த்தாண்டன் கேட்க மனுச ஜாதினு வெடுக்கென சொல்லி விட்டு தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்று விட்டார் ஜானகியின் அப்பா கதிரவன்.மனோ வந்து மாமா வந்தவங்களை இப்படி வாசப்படியிலே நிக்க வைச்சுப் பேசியா அனுப்புவாங்கனு கேட்டாள்.எனக்கு என் ஜாதி தான் முக்கியம். என் ஜாதி சனத்தைத் தவிர வேற எந்த ஜாதியும் என் வீட்டுக்குள்ளே நுழையக் கூடாதுனு தெரியும்ல உனக்குனு கத்தினார்.
விஜய் நீ வெளியிலே என்னவேனாலும் பண்ணிக்கோ.ஆனால் வீட்டுக்குள்ளே யாரையும் கூட்டிட்டு வருகிற வேலைலாம் வைச்சுக்காதே.என்னடா ஏதாவது காதல் கீதல்னு இருக்கானு கேட்டவுடனே மனோ இடையில் புகுந்து வந்த புள்ளையை வாசல்லேயே நிக்க வைச்சு பேசிக்கிட்டிருக்கீக.போப்பா போ போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுனு அனுப்பி வைச்சிட்டா.
ஆனால் வீர மார்த்தாண்டருக்கு தம்பி மேல் சந்தேகம் வர ஆரம்பிச்சது.அவர் மூளை வேகமாக யோசிக்க ஆரம்பித்தது.வீடு வரைக்கும் ஒரு வயசுப் பொண்ணையும் குடும்பத்தோடு கூட்டிட்டு வரணும்னா ஏதோ ஒன்னு சரியில்லையே.ம்ம் அந்தக் குடும்பத்தை மனக் கண் முன் கொண்டு வந்து நினைத்துப் பார்த்தார்.
ஆகா அந்தப் பொண்ணு அழுதுகிட்டேல போச்சு.அப்போ இவனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் இடையிலே ஏதோ ஒன்னு இருக்கு.டேய் தங்கவேலுனு கூப்பிட்டார்.இவன் தான் வீர மார்த்தாண்டனுக்கு வலது இடதுகைலாம்.டேய் சின்ன எஜமான் காலேஜுக்குப் போன பிறகு அவன் பின்னாலேயே போய் அவனுடைய நடவடிக்கைகளைக் கவனிச்சுட்டு வந்து சொல்லு சரியா.சரிங்க எஜமான்னான் அவன்.அப்படி ஏதாவது தப்பா இருந்தா என்ன செய்யனும்னு தெரியும்ல.அப்படி மட்டும் இருக்கட்டும் ஐயா.குடும்பத்தோடு கொளுத்திட மாட்டேன்.ம்ம் இது யாருக்கும் தெரியக் கூடாது சரியா.அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் ஐயா.கவலைப்படாதீங்க.இதை ஒரு உருவம் மறைஞ்சு இருந்து கவனிச்சுட்டு இருந்தது.அவர்கள் பேசியதைக் கேட்டதும் வேகமாக ஓடிப் போய் தன்அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டது.
அடுத்த அத்தியாயம் தொடரும்..