தவிர்க்க முடியாமல் தேவா
action-ல இறங்கிட்டா.
இது தான் சேஷா அவகிட்ட எதிர்பார்த்ததா?
சினிமாவுல மீசை வெச்சு ஒருத்தன் வைக்காத அதே ஒருத்தன் - இருவரையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதுன்னு ஒரு ஜோக் வருமே. அது மாதிரியே இருக்கு ராதா தன் புருஷன் இத்தனை நாளா வில்லனா தான் இருந்தாருங்கிறதை புரிஞ்சுக்கற scene.
அவர் நாலு வருஷத்திற்கு முன்னாடி அமிர்தாவை எப்படி அடித்தார். அப்ப கூடவா புரியலை ராதாக்கு ஆத்மாவோட கேடுகெட்ட குணம்.
இளா entry ஆத்மிகா வாழ்க்கைக்குள்ளும் இருக்குமோ?
டேய் நிவாஸ், உனக்கு வாய்ச்ச நண்பனைப் பார்த்தியா. அவன் மட்டும் அவன் லவ்வரோட
living-together ரேஞ்சுக்கு வாழ்ந்து love life-ஐ enjoy பண்ணினான். இப்பவும் டிவோர்ஸ்க்கு sign வாங்கிட்டு, அம்முன்னு கொஞ்சி kiss பண்ணிட்டு இருக்கான் அவனோட பொண்டாட்டியை.
ஆனால் தினமும் அவன் இழுத்து வைக்கற பிரச்சனையால, நீ உன் மலரை பார்க்கறதென்ன நினைக்கக் கூட முடியாத அளவுக்கு உன்னை 24×7 டென்ஷன்லயே வெச்சுருக்கான். இதுல மட்டுமே அவன் பொண்டாட்டியும் அவனை மாதிரியே இருக்கா.
ஆத்மா என்ன counter reaction கொடுப்பாரோ? முதலில் தேவசேனாவுக்கா இல்லை சேஷனுக்கா?