முள்ளோடு நீ ரோஜா-??

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ் முள்ளோடு நீ ரோஜா படிக்கிற நிறைய பேர் என்ன அண்ணன் தங்கச்சி என்று சொல்லுறீங்க அதே நேரம் அவங்க ஒருத்தர ஒருத்தர் விரும்புறதா வேற சொல்லுறீங்க கடுப்பா இருக்கு. ஒத்துக்க முடியாது என்று கேட்க ஆரம்பிச்சிட்டீங்க.

ஹீரோ யதுநாத். ஹீரோயின் யாழினி என்று சொல்லியே இந்த கதையை ஆரம்பிச்சதற்கான காரணமே உங்க எதிர்ப்புகளை சமாளிக்கத்தான். இவங்கதான் ஜோடி என்றால் நிச்சயமாக இவங்க அண்ணன் தங்கச்சியாக இருக்க முடியாது.

இந்த கதையை எழுதவா? வேணாமா என்று நானே ரொம்ப யோசிச்சேன். தனி மனிதனோட சுயநலம், தனி மனிதன் செய்யும் தவறு எத்தனை பேரோட வாழ்க்கையை பாதிக்கும் என்பதுதான் கதைக் கருவே.

சினிமால காமெடியா இந்த டாபிக் பார்த்திருப்பீங்க. கவுண்டமணி செந்தில் காமடி ஒன்னு வரும் கவுண்டமணிக்கு பொண்ணு பார்க்க போற இடமெல்லாம் பொண்ணோட அம்மா செந்திலோட எக்ஸ் லவராக இருப்பாங்க. காமடி என்று வரும் பொழுது சிரிப்போம், மறந்துடுவோம்.

இதே விசயத்த காதல், வலி, வேதனை, எமோஷனோட சொன்னா எப்படி இருக்கும்? சமூகத்துல இப்படி நடக்குறதுக்கு வாய்ப்பு குறைவு தான். கதைலதான் நடக்கும் என்றால் எழுதுறேன். with twists

ஹீரோ வாழ்க்கைல என்ன நடந்தது என்று நமக்கு இன்னும் தெரியாது. ஹீரோயின் சைட்ல இருந்து கதை நகருது. காதல் இருந்தும் இப்படியொரு சிட்டுவேஷன் உருவானதால் அவங்க மனப்போராட்டம் என்ன? என்ன மாதிரியான பிரச்சினைகள்? கடந்த காலத்துல என்ன நடந்தது? எல்லா உண்மையும் தெரியிறப்போ உங்க கோபம் போகும்.

அண்ட் ஒரு அத்தியாத்துல யது யாழியோட அண்ணனு சொன்னா அடுத்த அத்தியாயத்துலையே இல்லனு சொல்லி இருப்பேன். ஆமா, இல்ல. ஆமாவா? இல்லையா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் உங்களுக்கே தெரியும் அது எப்படி என்றுதான் நான் சொல்லணும்.

மத்த writer சொல்லுறது போல பிடிக்காதவங்க படிக்காதீங்க என்று சொல்ல மாட்டேன். கதையை என்ஜோய் பண்ணி படீங்க என்றுதான் கேட்டுக்கொள்கிறேன்.

இன்னும் ஏதாவது?
 
Last edited:

amuthasakthi

Well-Known Member
அவ அண்ணனா இருக்குமோனு கிஸ் பண்றப்ப நினைக்கும் போது கஷ்டமா தான் இருக்கு...அப்புறம் இது மாதிரி அண்ணன் தங்கை முறைல இருக்கவங்க லவ் பண்றாங்கனு சிலதில படிச்சிருக்கேன்...கதைல நிச்சயம் அவங்க சகோதர முறைல இல்லனு தெரியுது...அவங்களுக்கு தெரியுற வரை குழப்பம் தான்...உண்மை தெரிந்து இதை கடந்து அவங்கள எப்படி சேர்த்து வைக்கப் போறீங்கனு ஆர்வம்:)
 

RIYAA

Well-Known Member
கண்டிப்பா அவங்க அண்ணன் தங்கை இல்லன்னு தெரியும்... கல்பனாவுக்கும் ஈஸ்வர்க்கும் எப்படி பழக்கம் ன்னு தான் குழப்பம்.... அத எப்படி நல்லபடியா முடிச்சு வைக்கப்போறீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலோட வெயிட்டிங்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ippothan padikalamnu eduthu iruken naalaiku mudichiduven appuram comments enaku therinda alavil
நெகட்டிவ் அண்ட் பொசிட்டி இரண்டுக்காகவும் வைட்டிங்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top