Chitrasaraswathi
Well-Known Member
க்ஷிப்ராவின் மதிப்பு எனது பார்வையில். ஆதவன் பல பொருட்களை விற்பனை செய்து தரும் தரகர் அல்லது நடுவர் பணி செய்வதால் மென்பொறியாளர் பணியில் இருக்கும் தம்பி உதயனை விட பல படிகள் கீழே இருப்பதாக உணரும் பெற்றோர் மற்றும் உறவுகள். தம்பி உதயனுடன் இருப்பது கௌரவம் என்று நினைக்கும் பெற்றோர் உதயன் வீட்டு புதுமனை புகும் விழாவில் ஆதவன் மற்றும் அவனது மனைவி அருந்ததியை உதாசீனம் செய்கிறார்கள். ஒருவருடைய மதிப்பை அவர்கள் தான் நிர்ணயம் செய்ய வேண்டும் மற்றவர்கள் அல்ல என்று நினைக்கும் ஆதவன். தன் மதிப்பை மற்றவர்களுக்கு உணர்த்தும் கதையை தனது அழகான தனி எழுத்து நடையில் தந்திருக்கிறார் க்ஷிப்ரா. நல்ல குறுங்கதை. மதிப்பான கதையை காத்திருந்து படித்தேன் மா.