மண்ணில் தோன்றிய வைரம் 37

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
ஐந்து மணிநேர சிகிச்சையின் பின் இருதய சத்திரசிகிச்சை வெற்றியடைந்தது என்ற செய்தியுடன் ஆப்ரேஷன் தியட்டரில் இருந்து வெளியே வந்தார் சர்ஜன்.... அங்கு ஆப்பரேஷன் தியேட்டருக்கு வெளியே அச்செய்திக்கென காத்திருந்த அனைவருக்கும் அச்செய்தியை தெரியப்படுத்த அங்கிருந்த அனைவருக்கும் இதுவரை இருந்த கலக்கம் நீங்கப்பெற்றது..... சித்ராவோ அந்த டாக்டரை கையெடுத்து கும்பிட்டு தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினர்...... பின் டாக்கர் தன்னை வந்து தனது அறையில் பார்க்குமாறு அஸ்வினிடம் கூறிச்சென்றார்..... அவர் அங்கிருந்து சென்றதும் வீட்டிற்கு அழைத்து பாட்டியிடம் அச்செய்தியை பகிர்ந்து கொண்டான் அஸ்வின். பின் டாக்டர் அறைக்கு செல்ல தயாரானவனுடன் தானும் சென்றார் தனசேகரன். அவரை அழைத்து செல்ல விருபப்பமில்லாத போதிலும் அவரிடம் வேண்டாம் என்று கூறி இப்போதிருக்கும் சுமூக நிலையை கெடுக்க வேண்டாம் என்று எண்ணி அவரையும் தன்னுடன் அழைத்துசென்றான் அஸ்வின்.. அவர்களிருவரும் அங்கிருந்து அகன்றதும் சஞ்சுவையும் வருணையும் அங்கிருக்கச் சொல்லிவிட்டு அருகிலிருந்த கோவிலுக்கு சாருவை துணைக்கு அழைத்துக்கொண்டு சென்றார் சித்ரா...
ஆஸ்பத்திரிக்கு அருகில் இருந்த அந்த அம்மன் கோவிலினுள் சென்று வணங்கிய சாரு மற்றும் சித்ரா அங்கிருந்த படிக்கட்டில் சிறிது நேரம் அமர்ந்திருக்க முடிவு செய்தனர்....
அப்போது ஒரு வித அமைதி அவர்களை சூழ்ந்து கொண்டது.... கிருஷ்ணருக்கு எதுவுமில்லை என்று கூறிய பின்பும் சித்ராவின் முகம் ஏதோவொரு கலக்கத்தை குத்தகைக்கு எடுத்ததிருந்தது போல் இருந்தது.....
“ஏன்மா இன்னும் ஒருமாதிரி இருக்கீங்க......??? அதான் அப்பாக்கு எதும் இல்லைனு சொல்லிட்டாங்களே...... அப்புறம் எது மா உங்க மனசை கஷ்டப்படுத்துது???”
“அஸ்வின்.....”
“அஸ்வினிற்கு என்னாமா??”
“அஸ்வின் அவங்க அப்பா கூட ஏதும் பிரச்சனை பண்ணுவானோனு பயமா இருக்கு....”
“என்னாமா சொல்லுறீங்க நீங்க சொல்லுறது எதுவும் எனக்கு புரியலை...”
“உனக்கு முழுசா சொன்னா தான் புரியும்.... அஸ்வின் அவங்க அம்மா அதாவது என்னோட அக்காவுக்கும் அஸ்வின் சித்தப்பாவோட அண்ணா தனசேகரன் மாமாவுக்கும் ஒரே பையன்.... அவங்க ரெண்டு பேரும் யூ.எஸ் இல் தான் இருந்தாங்க..... மாமாவுக்கு எப்பவும் தன்னோட பிசினஸ் பற்றி தான் நினைப்பு... ஏதோ கடமைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி அஸ்வின் அம்மாவோட ஒரு ஒட்டுதல் இல்லாம வாழ்ந்தாரு.. அஸ்வின் அப்பாவுக்கு பணம் இருந்தா எதையும் விலைக்கு வாங்கலாம்னு எண்ணம்..... ஆனா அஸ்வினோட அம்மா அதற்கு நேர் எதிர்... ரொம்ப அன்பானவங்க..அவங்க ரொம்ப சாப்ட் டைப்..... அவங்க பேசும் விதத்திலே எல்லோரையும் கவர்ந்திழுத்திருவாங்க.....
அவங்க எப்படி தான் மாமவோட செயல்களை சகிச்சிக்கிட்டு எட்டு வருஷம் வாழ்ந்தாங்கனு எனக்கு இன்னும் வரைக்கும் ஆச்சரியம் தான்.....
மாமா எப்பவும் எந்த ஒரு இன்ப துன்பத்திலும் அவங்களுக்கு பக்க துணையா இருந்தது இல்லை... அவங்க அஸ்வின் கிடைக்க இருந்தப்போ ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க...
அவங்க கஷ்டத்தை வெளியில சொல்லவும் மாட்டாங்க.... அவங்க பிரண்டு ஒருத்தவங்க தான் கால் பண்ணி எங்களுக்கு அவங்க கஷ்டப்படுறதா தெரியப்படுத்துனாங்க.... உடனே அம்மா கிளம்பி போய்ட்டாங்க.... பிரசவம் முடிந்து ஆறு மாதம் வரைக்கும் அங்க தான் இருந்து பார்த்துக்கிட்டாங்க.... அஸ்வின் பிறந்தப்போ என்ன குழந்தைனு கேட்டுட்டு ஆஸ்பிடல் பில்லிற்கு பணத்தை குடுத்திட்டு மாமா கிளம்பிட்டாங்கனு அம்மா சொன்னாங்க.....
இப்படி அவங்க வாழ்க்கை போயிட்டிருக்க அஸ்வினிற்கு எட்டு வயதா இருக்கும் போது மறுபடியும் அவங்க கன்சீவ் ஆனாங்க....அப்போ டெலிவரி டைம் ரொம்ப பிளட் லாஸ் ஆகி அக்கா இறந்துட்டாங்க...... அதோடு பிறந்த குழந்தையும் இறந்து போயிருச்சி. அவங்க இறந்த பிறகு அஸ்வினை அவங்க அப்பா எங்கிட்ட விட்டுட்டு பிசினசை பார்க்க போறேனு கிளம்பிட்டாரு......
அந்த எட்டு வயசு சின்னப்பையனுக்கு என்ன தெரியும் சொல்லு???? அவரு கிளம்பும் போது அவரை கட்டிக்கொண்டு அழுத அஸ்வினை பார்த்து அவர் இனிமே நீ இங்க தான் இருக்கப்போற..... சோ சும்மா சின்னப்பிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்காம உன் வாழ்க்கையை நீ வாழ கத்துக்கோனு சொல்லிட்டு போயிட்டாரு .... அம்மாவை இழந்த பையனுக்கு ஆதரவா இருக்காம அவர் அப்படி சொல்லிட்டு போனது அஸ்வின் மனதில் காயத்தை உண்டு பண்ணி இன்று வரை மறையாத வடுவாக இருக்கு.......
நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம் அவங்க உறவை சீர்படுத்த.. ஆனா அஸ்வின் மாறவே மாட்டேனு பிடிவாதமாக இருக்கான்...
மாமா இங்க வரும் ஒவ்வொரு முறையும் அவருக்கும் அஸ்வினிற்கும் ஏதாவது ஒரு மோதல் வரும்....
அவன் தன் மேல்படிப்பை யூ.எஸ் இல் தான் தொடரனும்னு அவனோட அப்பா அழைச்சிட்டு போக வந்தாரு.....
முடியவே முடியாதுனு அடம் பண்ணி இங்கயே ஆரா காலேஜில் சேர்ந்துட்டான். இரண்டாவது முறை அவரது கம்பனியை டேக் ஓவர் பண்ண சொன்னப்போ முடியாதுனு முரண்டு பண்ணான்....நானும் அவனது சித்தப்பாவும் அதை பற்றி பேச அவன் எனக்கு நீங்க தான் அம்மா அப்பா..... உங்க சொத்து தான் என் சொத்து எனக்கு அவரு சம்பாதிச்சதோ சேர்த்ததோ எதுவும் வேண்டாம். பீளீஸ் என்னை போஸ் பண்ணாதீங்கனு சொல்லிட்டான்.. அதற்கு பிறகு அவங்க அப்பாவுக்கு தன்னோட எதிர்ப்பை காட்ட மாஸ்டர்ஸ் செய்ய அவுஸ்ரேலியா போய்ட்டான்.... இப்படி எப்போ அவங்க அப்பா வரும்போதும் அவனோடு பேசும் போதும் எதாவது பிரச்சனை தான் கிளம்புது. அதான் பயமா இருக்கு.....”
“ பயப்படாதீங்க அம்மா அப்படி எதுவும் நடக்காது.....
அஸ்வினோட அப்பா தன் தவறை உணர்ந்து திருந்தி இந்த முறை வந்திருப்பாரோனு எனக்கு தோணுது மா...... நாம நல்லதே நினைப்போம் எல்லாம் நல்லதாவே நடக்கும்.... நீங்க இதை பற்றி யோசிச்சி உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க மா...”
“நீ சொல்லுற மாதிரி எல்லாம் சரியா நடந்தா சரி தான் சாரு.... எல்லாம் அந்த ஆண்டவன் கையில் தான் இருக்கு... சரி வா நேரமாச்சு நாம கிளம்பலாம்” என்று சாரு மற்றும் சித்ரா கோயிலிலிருந்து கிளம்பினர்.......
ஒரு வார ஆஸ்பிடல் வாசம் முடிந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் கிருஷ்ணர்......
அன்று அவரை வீட்டில் விட்டு சென்ற சாருவால் வேலைப்பலு காரணமாக அஸ்வின் வீட்டிற்கு செல்ல முடியவில்லை... தினமும் அலைபேசியில் அழைத்து கிருஷ்ணரை நலம் விசாரித்ததோடு ஆபிசில் அஸ்வினிடமும் கிருஷ்ணரின் உடல் நலம் பற்றி கேட்டு அறிந்து கொள்வாள்...
அன்று அஸ்வின் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தான்.... என்வென்று விசாரிக்க அழைத்த போது அவனது அழைபேசி அணைக்கப்பட்டிருந்தது.... அவனது வீட்டிற்கு அழைத்த போது அழைப்பை எடுத்த கவி சாருவின் குரலை கேட்டதும் அழத்தொடங்கினாள்....
அவளிடம் என்னவென்று விசாரிக்க அஸ்வினது சித்தப்பாவிற்கு நெஞ்சுவலி வந்து ஆஸ்பிடலில் சேர்த்திருப்பதாக கூறினாள். அவளிடம் எந்த ஆஸ்பிடல் என்று விசாரித்து விட்டு போனை அணைத்த சாரு சஞ்சுவை அழைத்து விஷயத்தை கூறிவிட்டு ஆஸ்பிடலிற்கு சென்றாள்.....
அங்கு அவளை கண்டதும் அவளை கட்டிக்கொண்டு அழுத சித்ராவை சமாதானப்படுத்தும் வலி தெரியாது தடுமாறினாள். ஏனெனில் நிலைமையின் வீரியத்தன்மையை அவள் அறிவாள்.... சர்ஜரி முடிந்து ஒரு வாரமே ஆகியிருந்த நிலையில் இப்படி நிகழ்வது உயிரை பறிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும்.... இதை சித்ரா அறிந்தால் அவரை சமாதானப்படுத்துவது யாராலும் முடியாத காரியம்.... எனவே அவரை சமாதானப்படுத்துவதற்காக இல்லாத ஒரு நட்பை பற்றி கூறி அவளது இல்லாத தந்தைக்கு இப்படி நடந்ததாகவும் அவரின் உயிருக்கு ஏதும் நடவாது டாக்டர்ஸ் காப்பாற்றியதாகவும் கதையளந்தாள்.... அதை உண்மை என்று நம்பிய சித்ரா சிறிது சமாதானம் அடைந்தார்.... அவரை அமைதிப்படுத்திய சாரு அஸ்வினை தேட அவனோ சித்ராவை விட மோசமான நிலையில் இருந்தான்....... சிலையாய் உணர்வற்று சமைந்து நின்றவனை சாரு தன் தொடுகையால் உணர்வு கொடுக்க எதுவும் கூறாது அவ்விடத்திலிருந்து சென்றான்.. அவனது செயல் விசித்திரமாக இருந்தாலும் அவன் ஏனோ அவன் துக்கத்தை தாங்க முடியாது அவ்வாறு நடந்துகொள்கின்றான் என்று சாரு தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு சித்ராவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.....
சிறிது நேரத்தில் அறையிலிருந்து வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணரின் உயிரிற்கு ஆபத்தில்லை என்று கூறிவிட்டு அஸ்வினை தன்னறைக்கு வருமாறு பணித்தார். அஸ்வின் அங்கிருந்து நகன்றதும் சாரு நடந்ததை விசாரிக்கத் தொடங்கினாள்....... அதை சித்ரா கூற கேட்டதும் சாருவிற்கு தனக்கு மட்டும் ஏன் எதுவும் சரிவர நடப்பதில்லையென்ற கழிவிரக்கம் எழுந்தது..... அவளால் தன்னிலை எண்ணி அழுவதா மகிழ்வதா இல்லை ஏன் பிறந்தோம் என்று நினைப்பதா என்று தெரியவில்லை..... வாழ்வின் முதன் முறை தன்னை ஒரு தாழ்மையான படைப்பாக எண்ணினாள்..... தன்னை படைத்ததற்கு பதில் அந்த கடவுள் வேறோரு ஜீவனை படைத்திருக்கலாம் என்று கடவுளை வசை பாடினாள்...... சாருவை கொந்தளிக்கச்செய்யும் வகையில் சித்ரா கூறியது என்ன???? இனி சாரு என்ன செய்ய போகிறாள்??? அதற்கு அஸ்வினின் பிரதிபலிப்பு என்ன???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top