மண்ணில் தோன்றிய வைரம் 27

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சித்ராவின் தரமான ஒருவார கவனிப்பால் இருவாரங்கள் கழித்து கழற்றமாறு அறிவுறுத்தப்பட்ட பாண்டேஜ் ஒரே வாரத்தில் கழற்றப்பட்டது. பாண்டேஜ் நீக்கப்பட்டதும் சித்ராவிற்கு இன்னும் தொல்லை கொடுக்கலாகாது என்று எண்ணி தன் இல்லம் திரும்பினாள் சாரு. அவள் புறப்படுவதாக கூறியதும் அதை மறுத்த அஸ்வினின் குடும்பத்தாரை சமாதானப்படுத்துவதற்குள் அவளுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. ஆனால் அஸ்வினின் பங்கு இல்லாததே அவளை பெரிதும் வாட்டியது. அவள் புறப்படுவதாக கூறியதும் கார்சாவியை எடுத்து வந்து நின்றவனை கண்டதும் சாருவிற்கு உள்ளுக்குள் குபு குபு என்று எறியத்தொடங்கியது. மைன்ட் வாய்சிலேயே அவனை காய்ச்சி எடுக்கத்தொடங்கினாள் சாரு.
“கொஞ்சமாவது மண்டையில ஏதாவது இருக்கா அவனுக்கு. நான் போறேனு சொல்லுறேன். ஒரு பேச்சுக்கு சரி இருங்கனு சொல்லுறானா பாரு. நீ போனால் போதும் என்ற ரீதியில் ஆளுக்கு முதல் கார் சாவியோட வந்து நிற்கிறான். இந்த வீட்டுல இருக்கவங்களுக்கு உள்ள பாசம் கூட இந்த வளர்ந்து கெட்டவனுக்கு இல்லை. இவனை சைட் அடிக்க நான் இங்க தங்க ஓகே சொன்னா இந்த கிறுக்கு நான் எப்போடா கிளம்புவேன்னு பார்த்துட்டு இருந்திருக்கு... ஆண்டவா எதுக்கு இவனை என் கண்ணுல காட்டுன??? இந்த தத்தியை பார்த்து எதுக்கு எனக்கு லவ் வரவச்ச??? இப்படி எதையும் வெளிப்படுத்தாம இருக்க இவனை பற்றி தினம் தினம் யோசிச்சே எனக்கு பைத்தியம் பிடிச்சிரும் போல... இப்பவே இப்படினா இவனை கல்யாணம் பண்ண பிறகு என்னோட பாடு... நினைக்கவே கண்ணை கட்டுதே... சாரு நீ எல்லாம் பிசினஸ் வுமன்னு வெளியில சொல்லிறாதா.....இவனை சமாளிக்க நீ முக்கி முணங்குவது வெளியில தெரிந்தது பொளப்பு நாறிரும்.”என்று தன் மைண்ட் வாயிசில் அவளை அர்ச்சித்தது மட்டுமல்லாமல் தன்னையும் சேர்த்து வசை பாடினாள்.
அவள் தன் இல்லம் திரும்பிய இரு நாட்களுக்கு பின் அலுவலகத்தில் இருந்த போது சஞ்சய் அவளை அழைத்தான்.
“என்ன சஞ்சு போன வேலை முடியலையா??”
“இல்லை சாரு இங்க இழுத்தடிக்கிறாய்ங்க... இங்க வா காண்டிரக்ட் சைன் பண்ணலாம்னு சொல்லிட்டு அந்தாளு பிஸ்னர் டூர் போயிட்டாராம். ஆல்ரெடி இன்பார்ம் பண்ணலைனு கேட்டதுக்கு நாங்க பண்ணிட்டோம். உங்களுக்கு இன்பர்மேஷன் வரலையானு என்கிட்டேயே திருப்பி கேட்குறாய்க... ஒரு சின்ன பிராபிட்டுக்கு ஆசைப்பட்டு இவங்க பண்ணுற அட்டூழியத்தெல்லாம் பார்த்துட்டு இருக்க வேண்டி இருக்கு..”
“அப்போ கிளம்பி வந்துரு சஞ்சு..”
“வரத்தான் சாரு டிக்கட் எல்லாம் போட்டேன். இப்போ கால் பண்ணி அவங்க பாஸ் வந்துட்டாராம். நாளைக்கு வந்தா கண்ராக்ட் சைன் பண்ணலாம்னு சொன்னாங்க. சரி மறுபடியும் அலைய வேண்டாமேனு டிக்கட்டை கான்சல் பண்ணிட்டேன்.”
“அதுவும் சரி தான். அந்த காண்ரக்ட் நாமக்கு பிராபிட்டை மட்டும் தராது. அதோட அடிஷனலா நம்மளோட பிஸ்னசை வேல்ட் லெவலில் எக்ஸ்பான்ட் பண்ண இது ஒரு ஆப்பர்சுனிட்டியா இருக்கு. இந்த காண்டரக்ட் சைன் பண்ணி நாம சக்கஸ்புல்லா கம்பிளீட் பண்ணி குடுத்தோம்னா நிறைய வேல்ட் லெவள் கம்பனிஸ் நமக்கு டென்டர் குடுப்பாங்க.. இதோட இம்பார்ட்டன்ஸ் என்னை விட உனக்கு தான் நல்லா தெரியும்..”
“அது தெரிந்ததால் தான் அவங்க இவ்வளவு அலைக்கழித்தும் ஒன்றும் சொல்லாம இருக்கேன்.ஆனா பயபுள்ள என்னைக்காவது என்கிட்ட மாட்டுவான். அன்னைக்கு இருக்குடி அவனுக்கு”
“யாரு சஞ்சு அந்த பயபுள்ள??”
“வேற யாரு அந்த பிஏ தான். ரொம்ப ஓவரா தான் பண்ணுறான். என்னைப்பற்றி சரியா தெரியலை அவனுக்கு.... நான் பார்க்க பழம் மாதிரி இருக்கதால பச்சைப்புள்ளனு நினைச்சிட்டான் போல..எனக்கு கோபம் வந்தா கெட்ட வார்த்தை எல்லா மொழியிலும் தாறுமாறா வரும்னு பயபுள்ளைக்கு தெரியலை.. அதான் புள்ள ரொம்ப துள்ளுது”
“சரி கோபப்படாத.. இன்னைக்கு மட்டும் தானே அவனை சகிச்சிக்கோ...”
“ஓகே சாரு. நான் எதுக்கு கால் பண்ணேண்ணா இன்னைக்கு அந்த ரேகா இன்டஸ்ரிஸ் மானேஜரோட நமக்கு மீட்டிங் பிக்ஸ் ஆகியிருக்கு. நான் இன்னைக்கு வந்திருவேனு நினைச்சி இன்னைக்கு பிக்ஸ் பண்ணேன். பட் என்னால வரமுடியலை. சோ நீயும் அஸ்வினும் போய் அதை அட்டென்ட் பண்ணுங்க. அந்த டிடெய்ல்ஸ் எல்லாம் அஸ்வின் கிட்ட தான் இருக்கு. அவர்கிட்ட கேட்டு வாங்கிக்கோ.. அப்புறம் மீட்டிங் ஜெட்விங் ஹோட்டலில் ஈவினிங் செவன் ஓர் க்ளோக் பிக்ஸ் ஆகியிருக்கு... நீ அங்க டைமிற்கு போயிரு...”
“ஓகே சஞ்சு.. ஆனா ஏன் அந்த ஹோட்டலில் மீட்டிங் பிக்ஸ் பண்ணியிருக்க?? அது மோஸ்ட்லி லவர்ஸ் போகிற ரெஸ்டாரண்ட் ஆச்சே... அங்க இந்த மீட்டிங் கண்டாக்ட் பண்ண வசதிப்படுமா??”
“ஹாஹா... நான் அந்த இடத்தை பிக்ஸ் பண்ணலை சாரு.. அந்த மானேஜர் தான் பிக்ஸ் பண்ணார்.. நீ அவரிடம் போய் உன் சந்தேகத்தை கேளு..”
“சரி சரி நான் பார்த்துக்கிறேன். நீ உன் வேலையை முடித்துவிட்டு சீக்கிரம் வந்து சேரு.. உன்கிட்ட நான் நிறைய டிஸ்கஸ் பண்ண இருக்கு...”
“ஓகே சாரு... ஆனா இனிமே உனக்கு என்கிட்ட டிஸ்கஸ் பண்ண வேண்டிய தேவை இருக்காதுனு எனக்கு தோணுது..” என்று சஞ்சய் பொடிவைத்து பேச
“என்ன சஞ்சய் சொல்லுற?? நீ சொல்லுறது எனக்கு புரியவில்லை..”
“ஆ... ஒன்றும் இல்லை நான் வந்து பேசிக்கிறேன். பாய்” என்றுவிட்டு சஞ்சய் போனை அணைக்க அவனது பேச்சில் குழம்பிய சாரு என்னவென்று புரியாது யோசிக்க அவளது யோசனை அடுத்து வந்த அழைப்பினால் பின்தள்ளப்பட்டது. பின் அஸ்வினை அழைத்து அன்று அட்டன்ட் பண்ண வேண்டிய மீட்டிங் பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொண்டு அவள் போனை அணைக்க அஸ்வின் ஒரு விஷமப் புன்னகையுடன் போனை வைத்தவன் இரவு செல்லவேண்டிய மீட்டிங்கிற்கான வேலைகளை கவனிக்க தொடங்கினான்.
மாலை ஆறரை மணியளவில் அஸ்வினுடன் வந்த சாரு ஹோட்டலினுள் செல்ல அவளுடன் வந்த அஸ்வினை அழைபேசி அழைக்க அவளை முன் செல்லுமாறு கூறிவிட்டு தன் அழைப்பினை அவன் தொடர சாரு ஹோட்டலினுள் சென்றாள்.... உள்ளே சென்று அமர்ந்திருந்தவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி....... அது அதிர்ச்சியா இல்லை...?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top