மண்ணில் தோன்றிய வைரம் 21

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
இரண்டு மணி நேர பயணத்தின் பின் திருமணம் நடைபெறும் கோயிலின் வாசலில் நின்றது சாருவ் கார். சாரு மற்றும் அஸ்வின் காரிலிருந்து இறங்க சாருவின் தோழி மித்ரா வந்து சாருவை கோயிலினுள் அழைத்து செல்ல அஸ்வின் காரினருகே இருப்பதை கண்ட யாதவ் அவனருகே வந்தான். அஸ்வினை ஆரத்தழுவிய யாதவ் “மச்சி எப்படிடா இருக்க?? பார்த்து எவ்வளோ நாளாச்சி??? “
“நான் நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்க ?? “
“ நீ வருவனு நான் நினைக்கவே இல்லை.. நீ காலேஜ் முடிந்தவுடனே அவுஸ்ரேலியா பறந்திட்ட.. அதற்கு பின் இன்னைக்கு தான் பார்க்கிறேன். ஏன்டா நாடுவிட்டு நாடு போனா எங்களை மறந்திருவீங்களாடா?”
“ஹாஹா அப்படி எல்லாம் இல்லை... அப்படியே பிசி ஆகிட்டேன் அதான் எல்லோருடைய காண்டாக்கும் விட்டுப் போய்விட்டது.”
“சும்மா எடுத்துவிடாத.. இன்னும் உன்கூடவே சுத்திட்டு இருப்பானே அந்த வருண் கூட கண்டாக்கில் தானே இருக்க..அவன் வரட்டும் அவனுக்கு இருக்கு... பயபுள்ள வாட்சப் குரூப்பில் கூட உன்னை பற்றி மூச்சுவிடவில்லை”
“இல்லைடா வருண் ஒன்றும் பண்ணலடா... அவனை நான் இங்கே வருவதற்கு முன்தான் கான்டக் பண்ணேன். அதுக்கே அவன் என் கன்னாபின்னானு திட்டிட்டான்.. நீ இதை கேட்டா மறுபடியும் எனக்கு தான் டோஸ் விழும்... மீ பாவம்..” என்று அப்பாவியாய் அஸ்வின் கூற அவனது பாவனையில் சிரித்த யாதவ்
“அவன் ஒருத்தனுக்காவது பயப்படுறியே..அது போதும். சரி வருண் வரவில்லையா??” என்று வருணை பற்றி விசாரிக்க
“இல்லடா.. அவன் ரிசப்ஷனுக்கு வரேனு சொன்னான். நானும் சரினு டிரைவர் வேலை பார்க்க சொல்லிட்டு வந்திருக்கேன்” என்று அஸ்வின் கூற அவனது பதிலிற்கான அர்த்தம் புரியாத யாதவ் அவனை பார்க்க அஸ்வின் தன் சித்தப்பாவின் நிலையையும் அதற்காக வருணை துணைக்கு நிறுத்திவிட்டு வந்ததையும் கூறினான். அதன்பின் யாதவ் கிருஷ்ணன் பற்றி விசாரித்து முடியும் வேளையில் அவனது மற்ற நண்பர் கூட்டம் அவ்விடத்திற்கு வந்து அவனை மணமகன் அறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மணமகன் அறையினுள் நுழைந்த நண்பர் பட்டாளத்தை வரவேற்றான் ராக்கேஷ்.
“வாங்கடா.. உங்களை ஒரு இடத்தில் சேர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு” என்று ராக்கேஷ் கூற அக்கூட்டத்தில் இருந்த குணா
“இப்போ சேர்த்ததற்காக கஷ்டப்பட போற” என்று கூற அக்கூட்டமே கலகலத்தது.
“ஏன்டா சொல்ல மாட்ட ஷாலுவை கழட்டிவிட்டுட்டு வந்த நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலேயும் பேசுவ” என்று கூற ஷாலு என்ற பெயரை கேட்டதும் பம்மிய குணா
“ஏன்டா நான் ஒரு நாள் சந்தோஷமா இருப்பது உனக்கு பிடிக்கலையா?? அடிக்கடி அவ பெயரை சொல்லி ஏன் பீதியை கிளப்புற” என்று குணா அலற
“ஆமாடா குணா ஷாலுவினால் தான் நான் தப்பித்தேன். இல்லனா என் பொண்டாட்டியும் வந்து என்னை அவளுக்கும் அவ பிள்ளைக்கும் சேவகம் பண்ண வைத்திருப்பாள்”என்று ரவி தன் வீட்டு சமாச்சாரங்களை எடுத்துரைக்க என்று அவ்வறையே கேலியும் கிண்டலுமாய் இருந்தது.
“போதும்டா டேய். மாப்பிள்ளையை பார்க்க வந்தீங்களா இல்லாட்டி கல்யாணமே வேணாம்.இப்படியே எந்திரிச்சி ஓடிருங்கனு சொல்ல வந்தீங்களா “ என்று ராக்கேஷ் எகிற
“டேய் ராக்கேஷ் இதுவும் நல்லா ஐடியாவா தான் இருக்கு என்றுவிட்டு மாப்பிள்ளை ஆனந்திடம் வந்த குணா
“பிரதர் சூப்பர் சான்ஸ் கிடைத்திருக்கு. இப்படியே பின்வாசல் கதவு வழியா மண்டபத்தை விட்டு ஓடிடுங்க.. என் கல்யாணத்தப்போ இப்படி யாராவது சொல்லியிருந்தாங்கனா அன்னைக்கே இந்த ஊரை விட்டே ஓடியிருப்பேன். இந்த பய ரவி கூட அப்போ ஒரு வார்த்தை சொல்லியிருந்தானா நான் இன்னேரம் ஜாலியா கல்யாணத்திற்கு வந்த பொண்ணுங்களை சைட் அடிச்சிக்கிட்டு பேச்சுலராகவே இருந்திருப்பேன்.... இப்படி எல்லோரும் சேர்ந்து குழியில தள்ளி விட்டுட்டாய்ங்க. ஆனா இந்த கொடுமை உங்களுக்கு வராமல் நான் காப்பாற்றுகின்றேன்.. “ என்று ஆனந்திடம் சீரியஸாக கூற அவனோ
“ப்ரோ நான் இங்க இருந்து எங்க ஓடினாலும் அபி என்னை தேடி வந்து நல்லா மொத்திட்டு கல்யாணம் பண்ணிக்கோனு தாலியை நீட்டுவா.. எப்படியும் எனக்கு சங்கு கன்பார்ம் ..சோ அப்படி தர்ம அடி வாங்கி தாலி கட்டுவதை விட நான் இப்போவே மேடையில் சமத்தாம போய் இருந்துவிட்டால் எனக்கு அடி மிச்சம் “ என்று ஒரு மாடிலேஷனுடன் ஆனந் கூற அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
“என்ன பிரதர் பலமான அனுபவம் இருக்கு போல இருக்கே “ என்று குணா ஓட்ட அங்கு மீண்டும் ஒரு சிரிப்பலை எழுந்தது. இப்படி ஒருவர் மாறி ஒருவர் மாப்பிள்ளை ஆனந்தை வம்பிழுத்துக் கொண்டிருக்க மாப்பிள்ளையை ஐயர் அழைக்கிறார் என்ற குரலுக்கிணங்க அனைவரும் அறையை விட்டு வெளியேறினர். வெளியேறிய நண்பர் பட்டாளம் மணமேடைக்கு முன் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து தம் வம்படிகளை தொடர்ந்த வண்ணம் இருந்தது. அப்போது அஸ்வினின் போன் ஒலிக்க அதனை எடுத்து பார்த்த அஸ்வின் ஏதோ மெசேஜ் அலர்ட் என்று எண்ணி இன்பாக்ஸை திறந்து பார்க்க அதில்
“ஓய் ரௌடி பேபி இன்னைக்கு ரொம்ப ஹேன்சமா இருக்கடா.. அப்படியே நச்சினு ஒன்னு குடுக்கலாம் போல இருக்கு” என்றிருக்க அஸ்வினிற்கு யார்டா இது என்று இருக்க
“ஹூ ஸ் திஸ்” என்று பதில் அனுப்பிவிட்டு போனை சைலண்ட் மோடில் போட்டு விட்டான். அந்த மெசேஜை அனுப்பிய சாருவோ அவனை மேடைக்கு பின் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்…
போனை சைலண்டில் போட்டவன் வைப்ரேட் மோடை மாற்ற மறந்ததால் மீண்டும் போன் அதிர்ந்தது. மேசேஜ் இன்பாக்ஸை திறந்து பார்த்தவன்
“ஓய் பேபி உன்னை மூன்று வருடத்திற்கு பிறகு பார்க்கிறேன் டா.. காலேஜ் டைமிலே சும்மா தாறு மாறா இருப்ப.. இப்போ வெளிநாடெல்லாம் போய்ட்டு வந்து சும்மா போலிவுட் ஹீரோ மாதிரி அட்டகாசமா இருக்கடா.. சும்மாவே நான் பிளாட்டு.. இப்போ உன்னை இந்த வேஷ்டி சட்டையில் பார்த்த பிறகு டோட்டல் பிளாட்டு... எப்படிடா இவ்வளவு ஸ்மாட்டா இருக்க??” என்று இருக்க கடுப்பான அஸ்வின் சுற்றும் முற்றும் யார்டா அது என்று தேட பதிலோ பூச்சியம் தான். இதற்கு இப்போதே முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய அஸ்வின் தன் மொபைலுடன் மண்டபத்தை விட்டு வெளியே வந்த அஸ்வின் அவ்விலக்கத்திற்கு அழைக்க எதிர்ப்பக்கம் எடுக்கப்பட்ட அடுத்த நொடி
“ஹலோ யாருங்க நீங்க... இப்படி தப்பு தப்பா மெசேஜ் அனுப்பிக்கிட்டு இருக்கீங்க.. ஏதும் பேசனும்னா நேரடியா வந்து பேசுங்க.. இப்படி எல்லாமா மெசேஜ் பண்ணி கடுப்படிக்காதிங்க...” என்று பொறிய ஆரம்பிக்க எதிர்ப்புறம் வாய்ஸ் சேன்ஜர் ஆப் மூலம் பேச ஆரம்பித்தாள் சாரு.
“என்ன ரௌடி பேபி இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க?? நான் உங்ககிட்ட நேரடியா வந்து பேசவில்லைனு கோபமா?? நான் பேச வரும்போது எல்லாம் நீங்க என்னை கண்டுக்காம போய்ட்டீங்க. அதுனால் தான் இப்போ போனில் பேசுறேன். என்னை கண்டுக்காம போனதற்கு இப்போ உங்களுக்கு ஒரு பனிஷ்மண்ட்... பனிஷ்மண்ட் என்னனா நான் யாருனு நீங்க தான் கண்டுபிடிக்கனும். அதுவரைக்கும் இப்படி போன் பண்ணி லவ் டாச்சர் குடுத்திட்டு தான் இருப்பேன். ஓகே பாய் தாலி கட்டுற நேரம் நெருங்கிருச்சி. நைட் பேசுறேன்” என்று ஒரு முத்தத்துடன் அவ்வழைப்பு துண்டிக்கப்பட்டது. அஸ்வினிக்கு சிறிது நேரம் ஏதும் விளங்கவில்லை. போனில் பேசிய பெண் கடைசியாக கொடுத்த முத்தமே அவனது சித்தத்தை கலங்க வைத்தது. என்னடா இது சோதனை என்று அஸ்வினின் மனம் சஞ்சலமடைந்தது. ஒருபுறம் சாருவின் புறம் சாயும் மனது மறுபுறம் இரு நிமிடங்களே அவனுடன் உரையாடிய அப் பெண்ணின் பேச்சில் சிக்கித்தவித்தது...இவ்வாறு ஊஞ்சலாடிய அவனது மனம் மண்டபத்தினுள் ஒளித்த மேளச்சத்தத்தில் தான் யோசிப்பதற்கு இடைவெளி விடுமாறு பணிக்க இச்சிக்கலை தற்காலிகமாக கிடப்பில் போட்டுவிட்டு மண்டபத்தினுள் சென்றான் அஸ்வின்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top