பூவினுள் தேன்
கொட்டிக்கிடந்தால்
வண்டிற்கு மகிழ்ச்சி....
வானம் இருட்டத்தொடங்கினால்
வயலில் முளைத்திருக்கும்
பயிர்களுக்கு மகிழ்ச்சி....
சூரியனின் வருகை
தாமரைக்கு மகிழ்ச்சி...
கடலலைகளின் வருகை
கரையில் காத்து நிற்கும்
கடல் மண்ணிற்கு மகிழ்ச்சி...
நிலவின் வருகை
நட்சத்திரங்களிற்கு மகிழ்ச்சி...
மீனவனின் வருகை
இரவு பகலாய் பயத்தோடு
காத்திருக்கும் அவன்
குடும்பத்திற்கு மகிழ்ச்சி...
இவற்றை கண்டு களிப்பது
என் கண்களுக்கு
மகிழ்ச்சி...
இந்நிகழ்வுகளுக்கு
கவியுருவம் கொடுப்பது
என் மனதிற்கு
மகிழ்ச்சி.......
கொட்டிக்கிடந்தால்
வண்டிற்கு மகிழ்ச்சி....
வானம் இருட்டத்தொடங்கினால்
வயலில் முளைத்திருக்கும்
பயிர்களுக்கு மகிழ்ச்சி....
சூரியனின் வருகை
தாமரைக்கு மகிழ்ச்சி...
கடலலைகளின் வருகை
கரையில் காத்து நிற்கும்
கடல் மண்ணிற்கு மகிழ்ச்சி...
நிலவின் வருகை
நட்சத்திரங்களிற்கு மகிழ்ச்சி...
மீனவனின் வருகை
இரவு பகலாய் பயத்தோடு
காத்திருக்கும் அவன்
குடும்பத்திற்கு மகிழ்ச்சி...
இவற்றை கண்டு களிப்பது
என் கண்களுக்கு
மகிழ்ச்சி...
இந்நிகழ்வுகளுக்கு
கவியுருவம் கொடுப்பது
என் மனதிற்கு
மகிழ்ச்சி.......