வணக்கம் நட்புக்களே....
ஒரு விளக்கம் கேட்கவே இந்த போஸ்ட்....
கடந்த சில நாட்களாக ஒரு கேள்வி என்னிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது... அது பற்றி பல விளக்கங்களை தேடிய பொழுதும் அது என் குழப்பத்தை தீர்க்காமல் இன்னும் சில முரணான கருத்துக்களை கேள்வியாக என் முன்னால் எழுந்து நிற்குது....
அது என்ன கேள்வினா பெண்ணியம் என்றால் என்ன??? பெண் சுதந்திரம் என்றால் என்ன??? இந்த வார்த்தைகளூடாக எதை விளக்க முற்படுகிறார்கள்???
இது தான் என்னோட கேள்வி....
பல கட்டுரைகள் விளக்கங்களை வாசிச்சப்போ ஆண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கு வழங்கப்படுவது என்ற மையப்பொருள் தான் எல்லா கட்டுரைகளிலும் இருந்தது... ஆனா உரிமைகள் அப்படிங்கிற வார்த்தையில எவை உள்ளடங்குகிறது?? எல்லாம் அப்படினா பிள்ளைகளின் பெயரின் surname இல் அப்பா பெயரை மட்டும் போடாமல் அம்மா பெயரையும் சேர்த்து போடலாமே..... பிள்ளையை பத்து மாதம் சுமப்பவளுக்கு அந்த உரிமையை கொடுப்பதில் என்ன தவறு???
இப்படி சில முரணான கருத்துக்கள் என் மனதில் எழுந்து குழப்பத்தை கிளப்பியுள்ளது.....
ஆண்கள் செய்யும் அனைத்தையும் செய்வது என்ற கருத்தும் இப்போது சமூகத்தில் நிலவி வருகின்றது.... அந்த கருத்து வேலை, சமூகப்பங்கெடுப்பு ஆகிய நிலைகளில் இருந்து பார்க்கும் போது சிறப்பானதாக தோன்றினாலும் சில கேளிக்கைகள், கொண்டாட்டங்களில் சம உரிமை பற்றி எடுத்துரைப்பது சரியா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.....
ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்களால் செய்யமுடியாது... பெண்களால் செய்ய முடிந்த அனைத்தையும் ஆண்களால் செய்ய முடியாது... முடியாது என்று கூறுவதை விட செய்தால் சமூகம் சீரழிவுகள் மற்றும் குழப்பநிலைகள் உண்டாவது நிச்சயம்..... இப்படி சம உரிமை என்ற வார்த்தை பல முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றது... என்னுடைய கேள்வி என்னவென்றால் சம உரிமையில் எந்தெந்த உரிமைகள் அடக்கம்??? அதனை எவ்வாறு அறிவது என்பதே.....
இது என்னுள் எழுந்த சந்தேகமே ஒழிய வேறு எந்த எண்ணமும் இல்லை... .எதை செய்யும் முன்னும் ஏன் செய்கிறோம் என்று ஆராய்ந்து அதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ளும் பழக்கம் என்னிடம் உண்டு... சமூகத்தில் நிலவும் சில கருத்துகளுக்கு சரியான விளக்கங்கள் கிடைக்காதலால் அதை நான் ஆதரிக்காத சந்தர்ப்பங்களும் உண்டு.... இதுவும் அது போன்ற ஒன்றே... நானும் பெண் என்பதால் சில கட்டுப்பாடுகளுடனேயே வளர்க்கப்பட்டேன்... ஆனால் சமூகத்தில் பிறர் நடந்துகொள்வதை பார்க்கும் போது நமது எண்ணங்கள் சரிதானா என்ற எண்ணமே தோன்றுகிறது..... அதற்காகவே இந்த கேள்வி.... இது என் சந்தேகம் என்பதை மீண்டும் கூறிக்கொள்கின்றேன்.....
உங்கள் பதில்கள் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் என்று நம்புகின்றேன்...
ஒரு விளக்கம் கேட்கவே இந்த போஸ்ட்....
கடந்த சில நாட்களாக ஒரு கேள்வி என்னிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது... அது பற்றி பல விளக்கங்களை தேடிய பொழுதும் அது என் குழப்பத்தை தீர்க்காமல் இன்னும் சில முரணான கருத்துக்களை கேள்வியாக என் முன்னால் எழுந்து நிற்குது....
அது என்ன கேள்வினா பெண்ணியம் என்றால் என்ன??? பெண் சுதந்திரம் என்றால் என்ன??? இந்த வார்த்தைகளூடாக எதை விளக்க முற்படுகிறார்கள்???
இது தான் என்னோட கேள்வி....
பல கட்டுரைகள் விளக்கங்களை வாசிச்சப்போ ஆண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கு வழங்கப்படுவது என்ற மையப்பொருள் தான் எல்லா கட்டுரைகளிலும் இருந்தது... ஆனா உரிமைகள் அப்படிங்கிற வார்த்தையில எவை உள்ளடங்குகிறது?? எல்லாம் அப்படினா பிள்ளைகளின் பெயரின் surname இல் அப்பா பெயரை மட்டும் போடாமல் அம்மா பெயரையும் சேர்த்து போடலாமே..... பிள்ளையை பத்து மாதம் சுமப்பவளுக்கு அந்த உரிமையை கொடுப்பதில் என்ன தவறு???
இப்படி சில முரணான கருத்துக்கள் என் மனதில் எழுந்து குழப்பத்தை கிளப்பியுள்ளது.....
ஆண்கள் செய்யும் அனைத்தையும் செய்வது என்ற கருத்தும் இப்போது சமூகத்தில் நிலவி வருகின்றது.... அந்த கருத்து வேலை, சமூகப்பங்கெடுப்பு ஆகிய நிலைகளில் இருந்து பார்க்கும் போது சிறப்பானதாக தோன்றினாலும் சில கேளிக்கைகள், கொண்டாட்டங்களில் சம உரிமை பற்றி எடுத்துரைப்பது சரியா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.....
ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்களால் செய்யமுடியாது... பெண்களால் செய்ய முடிந்த அனைத்தையும் ஆண்களால் செய்ய முடியாது... முடியாது என்று கூறுவதை விட செய்தால் சமூகம் சீரழிவுகள் மற்றும் குழப்பநிலைகள் உண்டாவது நிச்சயம்..... இப்படி சம உரிமை என்ற வார்த்தை பல முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றது... என்னுடைய கேள்வி என்னவென்றால் சம உரிமையில் எந்தெந்த உரிமைகள் அடக்கம்??? அதனை எவ்வாறு அறிவது என்பதே.....
இது என்னுள் எழுந்த சந்தேகமே ஒழிய வேறு எந்த எண்ணமும் இல்லை... .எதை செய்யும் முன்னும் ஏன் செய்கிறோம் என்று ஆராய்ந்து அதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ளும் பழக்கம் என்னிடம் உண்டு... சமூகத்தில் நிலவும் சில கருத்துகளுக்கு சரியான விளக்கங்கள் கிடைக்காதலால் அதை நான் ஆதரிக்காத சந்தர்ப்பங்களும் உண்டு.... இதுவும் அது போன்ற ஒன்றே... நானும் பெண் என்பதால் சில கட்டுப்பாடுகளுடனேயே வளர்க்கப்பட்டேன்... ஆனால் சமூகத்தில் பிறர் நடந்துகொள்வதை பார்க்கும் போது நமது எண்ணங்கள் சரிதானா என்ற எண்ணமே தோன்றுகிறது..... அதற்காகவே இந்த கேள்வி.... இது என் சந்தேகம் என்பதை மீண்டும் கூறிக்கொள்கின்றேன்.....
உங்கள் பதில்கள் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் என்று நம்புகின்றேன்...
Last edited: