இந்த பொள்ளாச்சி சம்பவத்தின் போது ஒரு மீம் பார்க்க நேர்ந்தது...அதில் இது போன்ற வக்கிர மனம் கொண்ட **** என்ன சொல்லி திட்டுறதேன்னு தெரில...மிருகத்தை கொச்சைப் படுத்த விரும்பல..ஸோ டாஷ் டாஷெல்லாம் பேசாம விபச்சார விடுதிக்குப் போங்க..அரசு விபச்சாரத்தை சட்டரீதியாக்கனும்ன்ற வகையில் உள்ள ஒரு முட்டாள் தனமான மீம்..
அரைவேக்காடுகள்... என் அக்கா காட்டினார்கள்..
அக்சுவலி அந்த மாதிரி இடத்தில் இருப்பவர்கள் விரும்பி வந்தவர்கள் அல்ல... முக்கால் வாசி....human trafficking...இந்தியாவில் அதிகளவில் கொல்கத்தாவில் நடைபெறுகிறது..அதை தடுக்க தான் கன்யாஸ்ரி என்ற திட்டம் செயல்படுத்த பட்டது.ஆனாலும் இன்று வரையில் அதனால் பெரிய அளவில் மாற்றம் நிகழவில்லை.சில மாதம் முன் ஹிந்துவில் ஒரு பக்க கட்டுரை... மனித கடத்தல்..குறிப்பாய் பெண்கள் கடத்தல்..12 13 வயதில் திருமணம் செய்துவிக்கப்பட்ட பெண்..அவர் நேபாளி தன் கணவனால் வேலைக்கு என்று ஒரு ஏஜெண்டின் உதவியோடு கடத்தப்பட்டு மும்பைக் கொண்டு வரப்பட்டு prostitutionல ஈடுபடுத்தப்பட்டுள்ளார்...மீண்டும் எப்படியோ தப்பி பிழைத்து அவர் நாடு சென்று வழக்கு தொடர்ந்தாலும்..அவரும் அவரைப் போன்று பாதிக்கப்பட்டவர்களும் அந்த ஏஜெண்ட் விடுவிக்கப்ப்ட்டான்..காரணம் அரசியல் செல்வாக்கு...காதலை நம்பி ஏமாந்த பெண்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது....கணவனை நம்பி ஏமாந்தவர்களை என்னவென்று சொல்ல..??
ஸோ இப்படி முட்டாள் தனமான மீமோ சிந்தனையோ விட்டொழிக்கனும்...
தனி மனித ஒழுக்கம்...நெறிமுறைகள் சரியானதாக இருந்தால் தான் சமூகம் சால சிறந்ததாய் விளங்கும்...
ரொம்ப நாளாய் மனதில் இருந்தது..இன்று இதன் மூலம் வடிகாலாய் கொட்டி விட்டேன்...