பிரிவு : பொருட்பால், இயல் : படையியல், அதிகாரம் : 78. படைச் செருக்கு, குறள் எண்: 771 & 774

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 771:- என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் ! பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்!

பொருள் :- பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.
 

Sasideera

Well-Known Member
குறள் 774:- கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

பொருள் :- கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில்பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

போர்க்களத்தில் படையின் வீரச் சிறப்பு கூறும் பாடல்களின் தொகுப்பு இது. மறம் மிக்க வீரர்களாலேயே நாட்டின் பகைவர்களை வெல்ல இயலும். வீரர்களின் பெருமிதமான தோற்றங்கள் சில சொல்லோவியங்களாகத் தரப்பட்டுள்ளன. ஊறு அஞ்சாமை, விழுப்புண் ஏற்றல், தன்னுயிர் நீப்பதைப் பொருட்படுத்தாமை, தன்னால் காக்கப்பட்டவர்கள் கண்ணீர் சொரிய எய்தும் சாவு இவற்றை வீரச்சுவை ததும்பும் பாடல்களாகத் தந்துள்ளார் வள்ளுவர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top