அதிகார விளக்கம் :-
போர்க்களத்தில் படையின் வீரச் சிறப்பு கூறும் பாடல்களின் தொகுப்பு இது. மறம் மிக்க வீரர்களாலேயே நாட்டின் பகைவர்களை வெல்ல இயலும். வீரர்களின் பெருமிதமான தோற்றங்கள் சில சொல்லோவியங்களாகத் தரப்பட்டுள்ளன. ஊறு அஞ்சாமை, விழுப்புண் ஏற்றல், தன்னுயிர் நீப்பதைப் பொருட்படுத்தாமை, தன்னால் காக்கப்பட்டவர்கள் கண்ணீர் சொரிய எய்தும் சாவு இவற்றை வீரச்சுவை ததும்பும் பாடல்களாகத் தந்துள்ளார் வள்ளுவர்.