அதிகார விளக்கம் :-
இடனறிதல்
ஒரு செயல் ஆற்றுதலுக்கு ஏற்றதான இடத்தை அறிந்து அதன் பிறகே செயலைத் தொடங்க வேண்டும் என்று இவ்வதிகாரம் சொல்கிறது. தற்கப்பு, மேற்செல்லல், என்ற இவ்விரண்டையும் சுற்றி அதிகாரப் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போர்ச் சூழலில் உள்ள நாட்டுத் தலைவனுக்குக் கூறப்பட்ட அறிவுரைகள் போலத் தோன்றினாலும் இவ்வதிகாரத்துக் குறட்கருத்துக்களை எந்த ஒரு முயற்சிக்கும் பொருத்திக் கொள்ள முடியும். தம்மைத் தாக்க வ்ரும் எதிராளியை எதிர்க்கும் முனறயில் 'அரண் அதாவது பாதுகாப்புள்ள இடம் முக்கிய பங்கு பெறுகிறது.. அரணிலிருந்து போர் செய்தல் எப்போதும் வலினமயுனடயதஈகும் என்பது வலியுறுத்தப்படுகிறது- மேற்செல்லும் போது காட்டவேண்டிய திறத்தினனக் கூறும்போதும் இடம் அறிந்து செய்க என்கிறது அதிகாரப் பாடல்கள்.. தானிருக்கும் இடம், பனகவரின் இடம் செயல் ஆற்றுதற்கு ஆன இடம், பகைவரது இடத்தின் புறத்தே அரண் அமைத்து தங்கும் இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல் பேசப்படுகிறது. எதிராளியைப் பொருந்தக் கூடாத இடமும் அவ்வாறு சந்தித்தஈல் வரக்கடியக் குற்றமும் குறிக்கப் பெறுகின்றன. .
எதிராளியின் இடத்தை ஏளனமஈக கருதுதல் கூடாது என்பதும் எடுத்துக் காட்டப்பட்டது- மாற்றார் மக்கள் உறைவிடத்தில் தாக்குதல் மேற்கொள்ளல் கடினம் என்கிறது ஒரு பாடல்.
இடனறிதல் தாக்க வருபவன் செயலாகவும் தனது அரணகத்திருந்து காப்பவன் செயல்படுவதையும் கூறுவதால் அதிகாராப் பாடல்கள் வலியறிதலும் காலமறிதலும் போல இடனறிதலும் வருவார்க்கும் இருப்பார்க்கும் பொதுமையிலே கூறப்பட்டது என அறியலாம் .