அதிகார விளக்கம் :-
தலைவன் தலைவியை முதன் முதலில் எதிர்கொள்வதைச் சொல்லும் அதிகாரம். வேறு வேறு இடத்தில் வெவ்வேறு சூழலில் பிறந்து தோன்றிய ஓர் ஆண்மகனும் ஒரு பெண்மகளும் இயற்கை நியதியால் ஓரிடத்தில் ஒருவரை ஒருவர் காண நேரிடுகிறது. அவளைப் பார்த்த பொழுதே ஒர் மின்னலைப் போன்று அவனுள்ளத்தில் காதல் உணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. முதல் காட்சியிலேயே அவளது அழகும் பண்புநலன்களும் தன்னை மிகையாகத் தாக்கியதாக அவன் உணர்கிறான். முதலில் அவளை அழகுத் தெய்வமாகக் கண்டு பின் காதலுக்குரியவளாகக் கருதுகிறான்.
பெண்மையை கண்டு நெஞ்சம் அடையும் தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ள இந்த அதிகாரம் மறைமுகமாக இறமையை அடைந்தவனின் தன்மையை விளக்குகிறது. தேவதைகளால் விரும்பப்படும் மயிலாக என் நெஞ்சம் பெண்களால் கவரப்படுகிறதே. பார்வை ஒன்றே படை கொண்டு அழித்து ஒன்றுமற்றவனாய் என்னை தன்வசம் செய்ததே. உயிர் எடுக்கும் ஒருவன் இருப்பதை முன் அறியவில்லை அதை இவள் உணர்த்தினாள். உயிர் உணர்த்தும் கண் உயிர் எடுக்கவும் செய்யும் பேதையாக இருந்தால். எனவே அழிக்கும் எமனாக, அடிமைபடுத்தும் பிணையாக, வசப்படுத்தும் பொருளாக பெண்ணின் கண்கள் உள்ளன. வளைந்த புருவம் வில்லாக என்னை தாக்காமல் இருக்குமோ?. அடங்க யானைமேல் கல்பதங்கம் நிற்காததைப் போல் மார்பை மறைக்கும் துணி தடுமாறுகிறது. அவளோடு பொருத்துவதற்கு என்றே என் வலிமை குன்றியதோ?. போதை ஏற்றும் பார்வையும், நாணமும் தவிர இவளுக்கு வேறு சிறந்த அணிகலன் தேவையில்லை. இறைதாகம் அல்லது காமம் மட்டும் கண்டாலே போதை தரும்.