நேசம் மறவா நெஞ்சம்-
அத்தியாயம்-19
கயல் வீட்டுக்கு வரும் வழியெல்லாம் நான் இவருகிட்ட என்ன கேட்டேன்னு இப்புடி மூஞ்சிய வச்சிருக்காரு...........எங்க அக்கா சுதாமாதிரியே இவரு எப்ப நல்லா பேசுவாரு எப்பகோபமா பேசுராருன்னே தெரியமாட்டேங்குது..........
இவுக வீட்ல எல்லாரும் நல்லா குணமாத்தானே தெரியுறாங்க..............ஆனா இவருமட்டும் ஏன் இப்படி இருக்காரு ஒரு வேள நம்ம மாமா இப்புடி இருந்துருப்பாங்களோ........அத்தைக்கிட்ட மறக்காம கேக்கனும்....அப்புடித்தான் சொன்னாங்கன்னா மாமாட்ட சொல்லி கொஞ்ச ரெக்கமன்டேஷன் பண்ணச் சொல்லனும் ..... மாமா நீங்க மேல இருந்து பாத்துக்கிட்டுதானே இருக்கீங்க........ உங்க புள்ளய என்னமாமா………. இப்புடி வளத்துருக்கீங்க.....ஆமா அது.......என்ன பொண்ணுங்க கல்யாணம் ஆனவுடனே அவுக அம்மா வீட்ல இருக்குறதுக்கு கூட இவுகள இப்புடி கெஞ்சவேண்டியது இருக்கு...ஆனாஇவுக வந்தாமட்டும் அவுக அம்மா வீட்டுக்கு உடனே போகனும் வேலையிருக்கு………,வேலையிருக்கு……….. சொல்லிட்டு ஓடுறது..........
இந்த ரூல்ஸ்யெல்லாம் யாரு போட்டது ......எல்லா ரூல்சயும் ஒருதல பட்சமா போட்டிருக்காங்க...........கண்டிப்பா இவுகள மாதிரி ஒரு ஆம்பளதான் இந்த ரூல்ஸ் போட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.........
கயலும் கண்ணனும் போசாமல் வரவும் சாவத்திரி கயல் தன் அம்மா வீட்டிலிருந்து வருவதால் மனசு கஷ்டப்படுறாளோ......என்னமாச்சும் பேசி அவமனச மாத்தனுமே.....
“ஆமா கயலு உங்க அம்மாவீட்ல பாத்ரூம் கதவு ஏன் இப்புடி ஆடிக்கிட்டே.... இருந்துச்சு.....போன தவண வரும்போது புதுக்கதவாதானே இருந்துச்சு......”
கயல் தன் கோபத்தை மறந்து பின் புறம் திரும்பி... “அது ஒன்னும் இல்லத்த.......எங்க அப்பத்தா பாத்ரூம்ல குளிக்கப்போனவுடனே இந்த அருண்பய அது தொல்லை பொருக்க முடியலைன்னு கதவு வெளிப்பக்கமா ஒரு பெரியகல்லைத் தூக்கி வச்சு கதவை திறக்கவிடாம பண்ணிட்டான்...... இந்த அப்பத்தா கதவை தட்டிதட்டி பாத்துட்டு கதவை திறக்கலைன்னு கையோட கழட்டி தூக்கிக்கிட்டே வெளிய வந்துருச்சு.......இது நேத்து ராத்திரிதான் நடந்துச்சா...... அதான் கதவை அப்பா சும்மாலேசா மாட்டிவச்சிருந்தாங்க..... இனிமேதான் ஆசாரிய கூப்புட்டு சரிசெய்யனும்னு சொன்னாங்க.......”.
இவர்கள் அனைவரும் காந்திமதி கதவை கையோடு தூக்கிவந்ததை கற்பனை செய்து பார்த்து சிரித்தவர்கள்.......
முத்துவோ.....”ஆமா அண்ணி அப்புடி என்ன அருணுக்கு அப்பத்தாமேல காண்டு...........”
“அதயேன் கேக்குற முத்து .......அருணோட ப்ரண்ட்ஸ் எல்லாம் வீட்டுக்கு வாராங்கள்ள........ அவன்கிட்ட போய் இந்த அப்பத்தா சும்மாயில்லாம...... உங்க அப்பா பேரு என்ன..... அவருக்கு எம்புட்டு சம்பளம்......சொந்தவீடா....வாடகைவீடான்னு கேள்விமேல கேள்விகேட்டுருக்கு அவனுங்களும் போனாபோதுன்னு பதில சொன்னா....... அவன்கள எத்தனதரம் பாத்தாலும் இதே கேள்விய....ஓயாம கேட்டுருக்கு அவனுகயெல்லாம் கடுப்பாகி......டேய் நாங்கயெல்லாம் உங்க வீட்டுக்கு வரனும்னா....... ஒழுங்கா இந்த கிழவிய தூக்கி கொல்லப்புறத்துல போடு இல்லயா........ உங்க அப்பத்தா போட்டாவ போட்டு நாய்கள் ஜாக்கிரதை மாதிரி காந்திமதி ஜாக்கிரதைன்னு எழுதி வாசல்லமாட்டி வச்சு இன் அவுட்னு போட்டு வை....... அவுட்டுன்னு இருந்தாமட்டும் நாங்க உள்ள வாரோம்....... இல்லயா.... அப்புடியோ ஓடிருறோம்னு சொல்லியிருக்கானுங்க........ இத அப்பத்தா கேட்டுகிட்டு இருந்து அவன்களை போட்டு அடிச்சிருச்சு போல....... அதுனால அவனுக யாரும் இப்ப அருணோட பேசுறது இல்லயாம்.........அதுனால இந்த அருண் கோபமாகி...... அப்பத்தாவ.....இப்புடி கதவ திறக்கவிடாம……… பண்ணிட்டான்.......”.
கேட்ட சாவித்திரியும் முத்துவும் ராமனும் விழுந்து விழுந்து சிரித்தனர்.......கண்ணனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி வெளிபக்கமாக பார்த்தவன்........
இவ வீட்டுல இவ ரெண்டாவது அக்காவ தவிர அம்புட்டும் இப்புடித்தான் இருக்கும் போல...... இந்த மாமாவும் அத்தையும்தான் பாவம்........ இதுக ஒவ்வொன்னும் நவக்கிரகம் மாதிரி இருக்குதுக........ என்று நினைத்தான்........
இவர்கள் அனைவரும் வீட்டிற்கு வரவும் கண்ணன் கிளம்பி கடைக்குச் சென்றுவிட்டான்....... இவள் கன்றுகுட்டியோடு விளையாடியவள்.......இரவு சாப்பாட்டிற்கு தேவையானதை செய்தவள்......முத்துவோடும் ராமனோடும் உட்கார்ந்து அரட்டை அடித்தவள்.......
முத்து……” அண்ணி......நான் உங்ககிட்டயே கணக்குபாடம் கத்துக்கவா........ அருண் சொன்னான்...... நீங்க கணக்கு சூப்பரா போடுவீங்களாமே.......”
“சரி முத்து....ஆமா...எங்க காலேஜ் இருக்குற ஊர்லதானே...... உங்க ஸ்கூலும் இருக்கு....”
“ஆமா அண்ணி.......”
“அப்பன்னா...... இங்கயிருந்து எங்க காலேஜ்க்கு பொம்பளபுள்ளங்க யாராச்சும் போறாங்களா.....”
“காலேஜ்க்கு யாரும் போறமாதிரி தெரியலண்ணி....ஆனா கேள்ஸ் ஸ்கூலுக்கு ஒருபத்து இருபது புள்ளங்க..... போவுதுங்க......”
“பத்தியா........நீ சைட் அடிக்கிற புள்ளங்கமட்டும் போறது தெரியுது........ ஆனா எனக்கு பஸ் தோதா இருக்குமா.........நீயும் பஸ்லதானே.....போவ.....
முத்து வெட்கப்பட்டுக்கொண்டே......” நான் சைக்கிள்ள போயிருவேன் அண்ணி....... உங்களுக்கு பஸ் .இருக்கு அண்ணி.....காலையில எட்டு மணிக்கு......சாயங்காலம் நாலரைக்கு திரும்பிவர தோதா இருக்கும் அண்ணி.......”.
“அப்புடியா.....ம்ம்ம்”’……. இம்புட்டுநாளும் அமுதாவோட....போனோம்........சரி எப்புடியும் பஸ்ல வார ஸ்கூல் பிள்ளைகளை ப்ரண்ட்ஸ் ஆக்கிரமாட்டோம்........
அத்தியாயம்-19
கயல் வீட்டுக்கு வரும் வழியெல்லாம் நான் இவருகிட்ட என்ன கேட்டேன்னு இப்புடி மூஞ்சிய வச்சிருக்காரு...........எங்க அக்கா சுதாமாதிரியே இவரு எப்ப நல்லா பேசுவாரு எப்பகோபமா பேசுராருன்னே தெரியமாட்டேங்குது..........
இவுக வீட்ல எல்லாரும் நல்லா குணமாத்தானே தெரியுறாங்க..............ஆனா இவருமட்டும் ஏன் இப்படி இருக்காரு ஒரு வேள நம்ம மாமா இப்புடி இருந்துருப்பாங்களோ........அத்தைக்கிட்ட மறக்காம கேக்கனும்....அப்புடித்தான் சொன்னாங்கன்னா மாமாட்ட சொல்லி கொஞ்ச ரெக்கமன்டேஷன் பண்ணச் சொல்லனும் ..... மாமா நீங்க மேல இருந்து பாத்துக்கிட்டுதானே இருக்கீங்க........ உங்க புள்ளய என்னமாமா………. இப்புடி வளத்துருக்கீங்க.....ஆமா அது.......என்ன பொண்ணுங்க கல்யாணம் ஆனவுடனே அவுக அம்மா வீட்ல இருக்குறதுக்கு கூட இவுகள இப்புடி கெஞ்சவேண்டியது இருக்கு...ஆனாஇவுக வந்தாமட்டும் அவுக அம்மா வீட்டுக்கு உடனே போகனும் வேலையிருக்கு………,வேலையிருக்கு……….. சொல்லிட்டு ஓடுறது..........
இந்த ரூல்ஸ்யெல்லாம் யாரு போட்டது ......எல்லா ரூல்சயும் ஒருதல பட்சமா போட்டிருக்காங்க...........கண்டிப்பா இவுகள மாதிரி ஒரு ஆம்பளதான் இந்த ரூல்ஸ் போட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.........
கயலும் கண்ணனும் போசாமல் வரவும் சாவத்திரி கயல் தன் அம்மா வீட்டிலிருந்து வருவதால் மனசு கஷ்டப்படுறாளோ......என்னமாச்சும் பேசி அவமனச மாத்தனுமே.....
“ஆமா கயலு உங்க அம்மாவீட்ல பாத்ரூம் கதவு ஏன் இப்புடி ஆடிக்கிட்டே.... இருந்துச்சு.....போன தவண வரும்போது புதுக்கதவாதானே இருந்துச்சு......”
கயல் தன் கோபத்தை மறந்து பின் புறம் திரும்பி... “அது ஒன்னும் இல்லத்த.......எங்க அப்பத்தா பாத்ரூம்ல குளிக்கப்போனவுடனே இந்த அருண்பய அது தொல்லை பொருக்க முடியலைன்னு கதவு வெளிப்பக்கமா ஒரு பெரியகல்லைத் தூக்கி வச்சு கதவை திறக்கவிடாம பண்ணிட்டான்...... இந்த அப்பத்தா கதவை தட்டிதட்டி பாத்துட்டு கதவை திறக்கலைன்னு கையோட கழட்டி தூக்கிக்கிட்டே வெளிய வந்துருச்சு.......இது நேத்து ராத்திரிதான் நடந்துச்சா...... அதான் கதவை அப்பா சும்மாலேசா மாட்டிவச்சிருந்தாங்க..... இனிமேதான் ஆசாரிய கூப்புட்டு சரிசெய்யனும்னு சொன்னாங்க.......”.
இவர்கள் அனைவரும் காந்திமதி கதவை கையோடு தூக்கிவந்ததை கற்பனை செய்து பார்த்து சிரித்தவர்கள்.......
முத்துவோ.....”ஆமா அண்ணி அப்புடி என்ன அருணுக்கு அப்பத்தாமேல காண்டு...........”
“அதயேன் கேக்குற முத்து .......அருணோட ப்ரண்ட்ஸ் எல்லாம் வீட்டுக்கு வாராங்கள்ள........ அவன்கிட்ட போய் இந்த அப்பத்தா சும்மாயில்லாம...... உங்க அப்பா பேரு என்ன..... அவருக்கு எம்புட்டு சம்பளம்......சொந்தவீடா....வாடகைவீடான்னு கேள்விமேல கேள்விகேட்டுருக்கு அவனுங்களும் போனாபோதுன்னு பதில சொன்னா....... அவன்கள எத்தனதரம் பாத்தாலும் இதே கேள்விய....ஓயாம கேட்டுருக்கு அவனுகயெல்லாம் கடுப்பாகி......டேய் நாங்கயெல்லாம் உங்க வீட்டுக்கு வரனும்னா....... ஒழுங்கா இந்த கிழவிய தூக்கி கொல்லப்புறத்துல போடு இல்லயா........ உங்க அப்பத்தா போட்டாவ போட்டு நாய்கள் ஜாக்கிரதை மாதிரி காந்திமதி ஜாக்கிரதைன்னு எழுதி வாசல்லமாட்டி வச்சு இன் அவுட்னு போட்டு வை....... அவுட்டுன்னு இருந்தாமட்டும் நாங்க உள்ள வாரோம்....... இல்லயா.... அப்புடியோ ஓடிருறோம்னு சொல்லியிருக்கானுங்க........ இத அப்பத்தா கேட்டுகிட்டு இருந்து அவன்களை போட்டு அடிச்சிருச்சு போல....... அதுனால அவனுக யாரும் இப்ப அருணோட பேசுறது இல்லயாம்.........அதுனால இந்த அருண் கோபமாகி...... அப்பத்தாவ.....இப்புடி கதவ திறக்கவிடாம……… பண்ணிட்டான்.......”.
கேட்ட சாவித்திரியும் முத்துவும் ராமனும் விழுந்து விழுந்து சிரித்தனர்.......கண்ணனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி வெளிபக்கமாக பார்த்தவன்........
இவ வீட்டுல இவ ரெண்டாவது அக்காவ தவிர அம்புட்டும் இப்புடித்தான் இருக்கும் போல...... இந்த மாமாவும் அத்தையும்தான் பாவம்........ இதுக ஒவ்வொன்னும் நவக்கிரகம் மாதிரி இருக்குதுக........ என்று நினைத்தான்........
இவர்கள் அனைவரும் வீட்டிற்கு வரவும் கண்ணன் கிளம்பி கடைக்குச் சென்றுவிட்டான்....... இவள் கன்றுகுட்டியோடு விளையாடியவள்.......இரவு சாப்பாட்டிற்கு தேவையானதை செய்தவள்......முத்துவோடும் ராமனோடும் உட்கார்ந்து அரட்டை அடித்தவள்.......
முத்து……” அண்ணி......நான் உங்ககிட்டயே கணக்குபாடம் கத்துக்கவா........ அருண் சொன்னான்...... நீங்க கணக்கு சூப்பரா போடுவீங்களாமே.......”
“சரி முத்து....ஆமா...எங்க காலேஜ் இருக்குற ஊர்லதானே...... உங்க ஸ்கூலும் இருக்கு....”
“ஆமா அண்ணி.......”
“அப்பன்னா...... இங்கயிருந்து எங்க காலேஜ்க்கு பொம்பளபுள்ளங்க யாராச்சும் போறாங்களா.....”
“காலேஜ்க்கு யாரும் போறமாதிரி தெரியலண்ணி....ஆனா கேள்ஸ் ஸ்கூலுக்கு ஒருபத்து இருபது புள்ளங்க..... போவுதுங்க......”
“பத்தியா........நீ சைட் அடிக்கிற புள்ளங்கமட்டும் போறது தெரியுது........ ஆனா எனக்கு பஸ் தோதா இருக்குமா.........நீயும் பஸ்லதானே.....போவ.....
முத்து வெட்கப்பட்டுக்கொண்டே......” நான் சைக்கிள்ள போயிருவேன் அண்ணி....... உங்களுக்கு பஸ் .இருக்கு அண்ணி.....காலையில எட்டு மணிக்கு......சாயங்காலம் நாலரைக்கு திரும்பிவர தோதா இருக்கும் அண்ணி.......”.
“அப்புடியா.....ம்ம்ம்”’……. இம்புட்டுநாளும் அமுதாவோட....போனோம்........சரி எப்புடியும் பஸ்ல வார ஸ்கூல் பிள்ளைகளை ப்ரண்ட்ஸ் ஆக்கிரமாட்டோம்........