நேசம் மறவா நெஞ்சம்-
அத்தியாயம்-18
கண்ணனும் கயலும் அறையிலிருந்து வெளியே வரவும் அங்கிருந்த உறவினர்கள் அவர்களை நாற்காலியில் அமரவைத்தனர்.......... சுமங்கலிகள் எல்லோரும் சேர்ந்து கண்ணன் வாங்கியிருந்த சங்கிலியில் அந்த மாங்கல்யத்தை கோர்த்து கொண்டிருந்தனர்.
சகுந்தலா கொடுத்த பொட்டு ,மணி,மாங்காய் பவளம் போன்றவற்றையும் சேர்த்து கோர்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அங்கே வந்த சுதா முத்தத்தில்............ உறவினர்கள் அனைவரும் உட்கார்ந்திருந்ததால் அவள் விறுவிறு வென்று அடுப்படிக்குச் சென்றவள் அங்கிருந்த சகுந்தலாவை” அம்மா....அம்மா..... “என்று கடுப்புடன் அழைக்க.....
நிமிர்ந்து பார்த்த சகுந்தலா” வாடி சுதா........வா......வா.......... எங்கமாப்புள வந்திருக்காங்களா....உள்ளார கூப்புட்டு உக்காரவை... இந்தா காப்பியை கலந்துட்டு வாரேன்......”
“ஏம்மா... இன்னைக்கே இந்த பங்சன வைக்கனுமா.....”
“ஏண்டி...... “
“நான் ஊட்டியிலிருந்து அப்புடியே வேற ஊருக்கு போகலாம்னு நினைச்சா........சும்மா போன போட்டு போனப் போட்டு இன்னைக்கு அவளுக்கு தாலி பிரிச்சு கோக்கனும் வான்னு சொல்றீங்க....”
“ஏன் நான் வந்த உடனே பண்ணக்கூடாதா...இப்ப என்ன இவளுக்கு அவசரம் ....முதல்ல எனக்கு தாலி பிரிச்சி கோத்துட்டு தானே அப்புறம் அவளுக்கு செய்யனும்...வரவர உங்களுக்கு வயசுதான் ஏறுது.....” என்றபடி பொரிந்து கொண்டிருக்க......
“ஏய் சுதா .......மொதல்ல சத்தத்தகுற......... இது என்னப்பழக்கம்....எப்பப்பாத்தாலும் ஓங்கி ஓங்கிப் பேசுறது........எத்தனத்தரம் சொல்லியிருக்கேன்.........இப்புடியெல்லாம் பேசாதன்னு......முதல்ல வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு சொல்லு .....இவ்வளவு சொந்தக் காரங்க உக்காந்து இருக்காங்க அவுகள முதல்ல வாங்கன்னு கூப்புடு....... அப்புறம் கையெடுத்து கும்புடு.....புதுசா......கல்யாணம் ஆனப் பொண்ணுங்க........ முதல்தவணையா பாக்கும்போது அவுகள கையெடுத்து கும்புட்டு கூப்புட்டு பழகு .........
ச்சே...ச்சே.....கயலுகிட்ட ஒருதவணைதான் சொன்னேன்..... அவசின்னப்புள்ளயா இருந்தாலும் புரிஞ்சுக்குறா ………………..(ஆமா நீங்கதான் கயல மெச்சுக்கிரனும் )பாரு உங்க பெரியப்பத்தா,சின்னப்பத்தா,தாத்தா,சித்தப்பான்னு எல்லாருகிட்டயும் அவளும், மாப்புளயும் காலுல விழுந்துகும்புட்டு துன்னூறு பூசிக்கிட்டாங்க அவுக ஆசிர்வாதம் எல்லாம் உங்களுக்கு வேணும்டி அப்பதான் வாழ்க்கை சிறப்பா இருக்கும்.இங்கபாரு நீ முத மாதிரி சின்னப்புள்ள இல்ல....
நீ கல்யாணம் பண்ணி இன்னும் பத்துநாளுகூட ஆகல.... ஆனா உன்னையபத்தி ஏகப்பட்ட புகாரு என்னோடகாதுக்கு வந்துகிட்டே இருக்கு... நான் எதயும் உங்க அப்பாட்ட சொல்லல....உங்க அப்பா பாக்கத்தான் சாது...ஆனா கோபம் வந்தா ..தாங்கமுடியாது
நானே உன்கிட்ட தனியாபேசனும் நினைச்சேன்....இப்ப ஒன்னும் பேச நேரமில்ல...... சொந்தக்காரங்களெல்லாம் போகட்டும்.........அப்புறம் இருக்கு.......
முதமுத ஒரு நல்ல காரியம் நடக்கும் போது ஏண்டி இப்புடி பேசுற.......கயலு மாமியார்தான் இன்னைக்கு நல்ல வளர்பிற........இன்னைக்கு தாலி பிரிச்சு கோக்கனும் சொன்னாங்க ..........நீதான் நான் வருவனா மாட்டேனான்னு தெரியாதுன்னு சொன்னியே.....அப்புறம் எப்புடி உனக்கு தாலி பிரிச்சு கோக்குறது.....அப்புறம் உன்னோட மாமியார்தானே இதபத்தி பேசனும்........ இன்னைக்கு அவுககிட்ட கேக்குரேன் எப்ப செய்யலாம்னு ஆனா இனி தேய்பிறை வந்துருமே.....அப்பனா அடுத்தமாசம்தான் செய்யனும்...அதபத்தி அப்புறம் பேசிக்கலாம்... போ...முதல்ல எல்லாரையும் வாங்கன்னு கூப்புடு ...எப்பபாரு மூஞ்சில முள்ளக்கட்டுன மாதிரி பேசதா........முதல்ல மாப்புளைக்கு இந்த காப்பியை கொண்டு போய் குடு........ஆமா உன்னோட மாமனார் மாமியார் வந்திருக்காங்க தானே.........”
“இல்லம்மா........ அவுக ரெண்டுபேரும் வரல..........”
“ஏண்டி உள்ளுருல இருந்துட்டு வரல......”.
“வரலன்னா........விடும்மா......சும்மா நொய்நொய்ன்னுட்டு.......”( ஆமா இவ கூப்புட்டாத்தானே..... இவ ஊருல இருந்து வந்தவுடனே ஒரு வார்த்தக்கூட சொல்லாமாத்தானே இங்க கிளம்பிவந்தா...........)
அங்கு வாசு வெளியில் மாணிக்கத்திடம் பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது............நல்லவேளை....... இவுக போன் பண்ணுனாங்க.......இல்லனா இன்னும் எம்புட்டு காசு காலியாயிருக்குமோ....... இவ என்ன காச காசுன்னு பாக்காம செலவு செய்யுறா......... நம்மளவிட செலவாளியா இருக்காளே.......இதுவே அப்பா உரம் வாங்கக்குடுத்தகாசு....இதுக்கு எப்புடி கணக்கு குடுக்குறதுன்னு தெரியலயே....... என்று மனதுக்குள் கணக்கு போட்டு கொண்டிருந்தான்.........
சுதாவை கல்யாணம் பண்ணியிருந்த வாசுவின் நிலை குரங்காட்டியின் கையிலிருக்கும் குரங்கின் நிலையில் இருந்தது.ஆடுரா ராமா........... ஆடுரா ராமா......... என்று சொன்னால் எத்தனை குட்டிக்கரணம் போடு என்றாலும் போடுவான்.... அந்த நிலைக்கு சுதா அவனை கொண்டு வந்து நிறுத்தியிருந்தாள்...........அவளின் அழகில் மயங்கி அவள் காலடியில் கிடந்தான் .அவளுக்கு தன் அழகின் மேல் அத்தனை கர்வம் இருந்தது
அவன் தாய் பேச்சிக்கே இது தன் மகன்தானா..............இம்புட்டு நாளு அம்மா ...அம்மா என்று கிடந்தவன் .இவ வந்த நாளில் இருந்து குட்டி போட்ட நாய் மாதிரி அவ பின்னாடியே திரியிருறானே.......ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணுன வீட்டுல இருக்கவங்ககிட்டயும் அனுசரித்து போக வேணாமா...........இவ என்ன அவனை மட்டும் கைக்குள்ள போட்டுகிட்டு நம்மள ஒரு மனுசியா கூட மதிக்குறது இல்லயே....... இவருகிட்ட சொன்னா.....உன் மகன் பண்ணுனது தப்புதானே.......வந்தவுடனே உம்மாமியார் தனத்த காமிக்காதேன்னு சொல்லுராரு........நான் ஒரு பொம்பள வீட்டுல எம்புட்டு வேல தான் பாக்குறது.......இவ என்னடான்னா பெரிய இவ மாதிரி டிவிய போட்டுகிட்டு சோபால படுத்துகிறா.........இல்லனா ரூமுக்குள்ள போயி கதவ பூட்டிக்கிறா......
இவனும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்புமாதிரி ஒரு மார்க்கமா திரியுறானே........இவன என்ன பண்ணுறது.........எல்லாம் என்நேரம்......நல்ல பணக்கார பொண்ணுக்கு ஆசைப்பட்டேன் ஆனா இந்தபய இப்புடி ஒரு திமிரெடுத்தவள கட்டி கூட்டிக்கிட்டு வந்திருக்கானே....... வரட்டும் என்னோட சின்ன மகன்......இருக்கு........ இவுக ரெண்டு பேருக்கு........ என்று மனதிற்குள் கொதித்து போயிருந்தாள்......
இங்கு சுதா வாசுவுக்கு காப்பியை கொடுத்துவிட்டு............ அங்கிருந்த உறவினர்களை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து......தலையை மட்டும் அசைத்தாள்...... அவளை பார்த்தவர்கள் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருக்க.............
அத்தியாயம்-18
கண்ணனும் கயலும் அறையிலிருந்து வெளியே வரவும் அங்கிருந்த உறவினர்கள் அவர்களை நாற்காலியில் அமரவைத்தனர்.......... சுமங்கலிகள் எல்லோரும் சேர்ந்து கண்ணன் வாங்கியிருந்த சங்கிலியில் அந்த மாங்கல்யத்தை கோர்த்து கொண்டிருந்தனர்.
சகுந்தலா கொடுத்த பொட்டு ,மணி,மாங்காய் பவளம் போன்றவற்றையும் சேர்த்து கோர்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அங்கே வந்த சுதா முத்தத்தில்............ உறவினர்கள் அனைவரும் உட்கார்ந்திருந்ததால் அவள் விறுவிறு வென்று அடுப்படிக்குச் சென்றவள் அங்கிருந்த சகுந்தலாவை” அம்மா....அம்மா..... “என்று கடுப்புடன் அழைக்க.....
நிமிர்ந்து பார்த்த சகுந்தலா” வாடி சுதா........வா......வா.......... எங்கமாப்புள வந்திருக்காங்களா....உள்ளார கூப்புட்டு உக்காரவை... இந்தா காப்பியை கலந்துட்டு வாரேன்......”
“ஏம்மா... இன்னைக்கே இந்த பங்சன வைக்கனுமா.....”
“ஏண்டி...... “
“நான் ஊட்டியிலிருந்து அப்புடியே வேற ஊருக்கு போகலாம்னு நினைச்சா........சும்மா போன போட்டு போனப் போட்டு இன்னைக்கு அவளுக்கு தாலி பிரிச்சு கோக்கனும் வான்னு சொல்றீங்க....”
“ஏன் நான் வந்த உடனே பண்ணக்கூடாதா...இப்ப என்ன இவளுக்கு அவசரம் ....முதல்ல எனக்கு தாலி பிரிச்சி கோத்துட்டு தானே அப்புறம் அவளுக்கு செய்யனும்...வரவர உங்களுக்கு வயசுதான் ஏறுது.....” என்றபடி பொரிந்து கொண்டிருக்க......
“ஏய் சுதா .......மொதல்ல சத்தத்தகுற......... இது என்னப்பழக்கம்....எப்பப்பாத்தாலும் ஓங்கி ஓங்கிப் பேசுறது........எத்தனத்தரம் சொல்லியிருக்கேன்.........இப்புடியெல்லாம் பேசாதன்னு......முதல்ல வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு சொல்லு .....இவ்வளவு சொந்தக் காரங்க உக்காந்து இருக்காங்க அவுகள முதல்ல வாங்கன்னு கூப்புடு....... அப்புறம் கையெடுத்து கும்புடு.....புதுசா......கல்யாணம் ஆனப் பொண்ணுங்க........ முதல்தவணையா பாக்கும்போது அவுகள கையெடுத்து கும்புட்டு கூப்புட்டு பழகு .........
ச்சே...ச்சே.....கயலுகிட்ட ஒருதவணைதான் சொன்னேன்..... அவசின்னப்புள்ளயா இருந்தாலும் புரிஞ்சுக்குறா ………………..(ஆமா நீங்கதான் கயல மெச்சுக்கிரனும் )பாரு உங்க பெரியப்பத்தா,சின்னப்பத்தா,தாத்தா,சித்தப்பான்னு எல்லாருகிட்டயும் அவளும், மாப்புளயும் காலுல விழுந்துகும்புட்டு துன்னூறு பூசிக்கிட்டாங்க அவுக ஆசிர்வாதம் எல்லாம் உங்களுக்கு வேணும்டி அப்பதான் வாழ்க்கை சிறப்பா இருக்கும்.இங்கபாரு நீ முத மாதிரி சின்னப்புள்ள இல்ல....
நீ கல்யாணம் பண்ணி இன்னும் பத்துநாளுகூட ஆகல.... ஆனா உன்னையபத்தி ஏகப்பட்ட புகாரு என்னோடகாதுக்கு வந்துகிட்டே இருக்கு... நான் எதயும் உங்க அப்பாட்ட சொல்லல....உங்க அப்பா பாக்கத்தான் சாது...ஆனா கோபம் வந்தா ..தாங்கமுடியாது
நானே உன்கிட்ட தனியாபேசனும் நினைச்சேன்....இப்ப ஒன்னும் பேச நேரமில்ல...... சொந்தக்காரங்களெல்லாம் போகட்டும்.........அப்புறம் இருக்கு.......
முதமுத ஒரு நல்ல காரியம் நடக்கும் போது ஏண்டி இப்புடி பேசுற.......கயலு மாமியார்தான் இன்னைக்கு நல்ல வளர்பிற........இன்னைக்கு தாலி பிரிச்சு கோக்கனும் சொன்னாங்க ..........நீதான் நான் வருவனா மாட்டேனான்னு தெரியாதுன்னு சொன்னியே.....அப்புறம் எப்புடி உனக்கு தாலி பிரிச்சு கோக்குறது.....அப்புறம் உன்னோட மாமியார்தானே இதபத்தி பேசனும்........ இன்னைக்கு அவுககிட்ட கேக்குரேன் எப்ப செய்யலாம்னு ஆனா இனி தேய்பிறை வந்துருமே.....அப்பனா அடுத்தமாசம்தான் செய்யனும்...அதபத்தி அப்புறம் பேசிக்கலாம்... போ...முதல்ல எல்லாரையும் வாங்கன்னு கூப்புடு ...எப்பபாரு மூஞ்சில முள்ளக்கட்டுன மாதிரி பேசதா........முதல்ல மாப்புளைக்கு இந்த காப்பியை கொண்டு போய் குடு........ஆமா உன்னோட மாமனார் மாமியார் வந்திருக்காங்க தானே.........”
“இல்லம்மா........ அவுக ரெண்டுபேரும் வரல..........”
“ஏண்டி உள்ளுருல இருந்துட்டு வரல......”.
“வரலன்னா........விடும்மா......சும்மா நொய்நொய்ன்னுட்டு.......”( ஆமா இவ கூப்புட்டாத்தானே..... இவ ஊருல இருந்து வந்தவுடனே ஒரு வார்த்தக்கூட சொல்லாமாத்தானே இங்க கிளம்பிவந்தா...........)
அங்கு வாசு வெளியில் மாணிக்கத்திடம் பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது............நல்லவேளை....... இவுக போன் பண்ணுனாங்க.......இல்லனா இன்னும் எம்புட்டு காசு காலியாயிருக்குமோ....... இவ என்ன காச காசுன்னு பாக்காம செலவு செய்யுறா......... நம்மளவிட செலவாளியா இருக்காளே.......இதுவே அப்பா உரம் வாங்கக்குடுத்தகாசு....இதுக்கு எப்புடி கணக்கு குடுக்குறதுன்னு தெரியலயே....... என்று மனதுக்குள் கணக்கு போட்டு கொண்டிருந்தான்.........
சுதாவை கல்யாணம் பண்ணியிருந்த வாசுவின் நிலை குரங்காட்டியின் கையிலிருக்கும் குரங்கின் நிலையில் இருந்தது.ஆடுரா ராமா........... ஆடுரா ராமா......... என்று சொன்னால் எத்தனை குட்டிக்கரணம் போடு என்றாலும் போடுவான்.... அந்த நிலைக்கு சுதா அவனை கொண்டு வந்து நிறுத்தியிருந்தாள்...........அவளின் அழகில் மயங்கி அவள் காலடியில் கிடந்தான் .அவளுக்கு தன் அழகின் மேல் அத்தனை கர்வம் இருந்தது
அவன் தாய் பேச்சிக்கே இது தன் மகன்தானா..............இம்புட்டு நாளு அம்மா ...அம்மா என்று கிடந்தவன் .இவ வந்த நாளில் இருந்து குட்டி போட்ட நாய் மாதிரி அவ பின்னாடியே திரியிருறானே.......ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணுன வீட்டுல இருக்கவங்ககிட்டயும் அனுசரித்து போக வேணாமா...........இவ என்ன அவனை மட்டும் கைக்குள்ள போட்டுகிட்டு நம்மள ஒரு மனுசியா கூட மதிக்குறது இல்லயே....... இவருகிட்ட சொன்னா.....உன் மகன் பண்ணுனது தப்புதானே.......வந்தவுடனே உம்மாமியார் தனத்த காமிக்காதேன்னு சொல்லுராரு........நான் ஒரு பொம்பள வீட்டுல எம்புட்டு வேல தான் பாக்குறது.......இவ என்னடான்னா பெரிய இவ மாதிரி டிவிய போட்டுகிட்டு சோபால படுத்துகிறா.........இல்லனா ரூமுக்குள்ள போயி கதவ பூட்டிக்கிறா......
இவனும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்புமாதிரி ஒரு மார்க்கமா திரியுறானே........இவன என்ன பண்ணுறது.........எல்லாம் என்நேரம்......நல்ல பணக்கார பொண்ணுக்கு ஆசைப்பட்டேன் ஆனா இந்தபய இப்புடி ஒரு திமிரெடுத்தவள கட்டி கூட்டிக்கிட்டு வந்திருக்கானே....... வரட்டும் என்னோட சின்ன மகன்......இருக்கு........ இவுக ரெண்டு பேருக்கு........ என்று மனதிற்குள் கொதித்து போயிருந்தாள்......
இங்கு சுதா வாசுவுக்கு காப்பியை கொடுத்துவிட்டு............ அங்கிருந்த உறவினர்களை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து......தலையை மட்டும் அசைத்தாள்...... அவளை பார்த்தவர்கள் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருக்க.............