நேசம் மறவா நெஞ்சம்
அத்தியையம்-11
“ஏய்கயலு.......ஏய் கயலு.......”
“இதோ வர்றேன்டி.......”
“ஏய் காலேஜ்க்கு நேரமாச்சு பஸ்போயிரும்னு கத்திக்கிட்டு இருக்கேன்....... நீயேன்டி இப்படி ஆடி அசைஞ்சு வர்ற......?”
காந்திமதி” ஏய் கயலு நானும் துணைக்கு வரவா.....?”
“எதுக்கு இத்தனநாளா நீயா துணைக்கு வந்த...? அது தான் அமுதாவ இன்னைக்கு வீட்டுக்கு வரச்சொல்லிட்டேன்ல அப்புறம் எதுக்கு நீயும் வர்ற....?”
“சரி சரி பேச்சை குறைச்சுக்கிட்டு ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வாங்க.....”
“ஏய் வாடி நேரமாச்சு நீ அப்புறம் உங்க அப்பத்தாவ கொஞ்சிகிட்டு இரு..........”
“நீ வேற ஏண்டி கடுப்பேத்துர வரவர எங்க அப்பத்தா ரொம்ப பண்ணுதுடி”
“ஏன் என்னாச்சு உங்க அப்பத்தாவ தான் உனக்கு ரொம்ப புடிக்குமேடி...?”
“இப்பவும் புடிக்கும்தான் ஆனா அது பண்ணுற எல்லாத்தையும் பொருத்துக்க முடியலடி......”
“இப்ப ஒரு பத்துநாளா ரொம்பண்ணுதுடி அங்க போகாத பேசாத ஓடாதன்னு ஒரே தொல்ல..........”.
“நான் எங்க போறேன் காலேஜ்…………………. அத விட்டா வீடு……………. வேற எந்த எடத்துக்கும் போறதில்ல..மத்தநேரத்துல வாசபக்கம் கூட விடமாட்டேங்குதுடி.....நேத்து அயன் பண்ணுற அண்ணன் வந்து டிரஸ் குடுக்குராரு இதுவும் என்னோட முதுகுக்கு பின்னாடி வந்து எட்டி எட்டி பாத்துக்கிட்டு இருக்குடி வயசான மூளையும் கொஞ்சம் குழம்பிபோயிருமோ.............”.
“நேத்து போன்ல உங்கிட்ட தாண்டி பேசிகிட்டு இருக்கேன் கதவுக்குகிட்ட வந்து காத வச்சு ஒட்டுகேட்டுகிட்டு இருக்கு .......இதோட டார்ச்சர் ஒரு எல்லையில்லாம போயிட்டுயிருக்குடி..............”
“ஏன் உங்க அம்மா அப்பா எங்கடி.........? உங்க அம்மாட்ட சொல்ல வேண்டியது தான....?”
“கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாளு தான இருக்கு அம்மாவும் அப்பாவும் காலையில கிளம்பி பத்திரிக்கை குடுக்க,சாமான் வாங்கன்னு அலைஞ்கிட்டு சாயங்காலம் தான் வர்றாங்க .......”
“ஆமா சுதாக்கா ........?”
”அவளுக்குதான் என்ன ஆச்சுன்னே தெரியல ........முன்னாடியெல்லாம் டிவி முன்னாடியே கதியா கிடப்பா.......
“அப்படி என்னடி பாப்பா......? படமா......?இல்ல உங்க அப்பாத்தா மாதிரி சீரியலா.....?”
“ச்சீ ச்சீ.அதெல்லாம் அவளுக்கு பிடிக்காது....அவளுக்கு பிடிச்சதெல்லாம் இந்த அலங்காரம் பண்ணுறது மாடல் மாடலா தலை சீவி விடுவாங்கள்ல அதுதான் பாப்பா.........ஆனா இப்ப ரூமுள்ள என்ன பண்ணுறான்னே தெரியலயே....”
“ஒருவேள அவளுக்கு பாத்துருக்குற மாப்ள கூட போன்ல பேசுவாளோ.......”
“யாரு எங்க அப்பத்தா இருக்குற வீட்லவேற யாரோடயும் போன்ல பேச முடியுமா......அது மட்டும் தாண்டி போன்ல பேசும்........அடுத்தவங்க பேசுறது கேக்குமோ கேக்காதோ........இது பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கும்.......கல்யாணத்துக்கு அப்புறம் தாண்டி பொண்ணும் மாப்ளையும் பேசணும்னு அதுக்கு முன்னாடி பேசக்கூடாதுன்னு எங்க வீட்ல தாமர அக்கா கல்யாணத்திலயே ஸ்டிக்ட் ஆர்டர்டி.........”
“ஒரு வேள பயப்படுறாளோ எப்படி வேற வீட்ல போய் இருக்குறதுன்னு.....”
“ஒன்னுமே புரியலடி நாளைக்கு தாமர அக்கா வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்கு.... அது வந்தா தாண்டி அது புள்ளைகளோட நல்லா ஜாலியா இருக்கும்....நமக்கும் இன்னும் ரெண்டு பரிச்சை தானே இருக்குஅப்புறம் ஒன்றரை மாசம் லீவு. இந்த லீவ நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணனும்டி............. கல்யாணத்துக்கு போடுறதுக்குன்னு டிசைன் டிசைன்னா தோடு கண்ணாடி வளையல்ன்னு தாவனிக்கு மேட்சா நம்ம ஊரு திருவிழா கடையில வாங்கிவச்சுறுக்கேன். இந்த அப்பத்தா என்னன்னா சேலைதான் கட்டணும்னு சொல்லுதுடி.........”
“அடிப்பாவி சேலைவேற புதுசா வாங்கியிருக்கியா...............நான் உங்கிட்ட ஒரு கிளிப் வாங்கினாக்கூட சொல்லிட்டுதானடி வாங்குறேன்......நீ எப்படிடி சொல்லாம வாஙகுன..........?.”.
“ஏய் ஏய் கொஞ்சம் நான் சொல்லுறத கேளுடி............அன்னைக்கு பட்டெடுக்க போகும்போது ஆளுக கணக்குக்கு என்னையும் கூட்டிக்கிட்டு போனாங்கள்ல அப்ப ஒரு சேலை நல்லாயிருக்குனு வச்சுபாத்துகிட்டு இருந்தனா அதபாத்துட்டு அந்த ஐயனாரு வாங்கிகுடுத்துருக்காருடி………..”
“யாரு சுதாக்கா மாப்ளயா............அவரு உனக்கு மாமாவாக போறவருடி ஆனா அவர பாத்தா ஒரு பொம்பளபிள்ளைக்கு போயி சேலை எடுத்து குடுக்கிறவர் மாதிரி தெரியலயே.................”.
“எனக்கும் அதே டவுட்டுதான்டி.........எப்பபாத்தாலும் உர்ருன்னு இருக்காரு. அப்புறம் அன்னைக்கு அவரு தம்பிக்கிட்ட பேசிகிட்டு இருந்தேன்ல அவனுக இவரு ஒரு ஸ்டிக்ட் ஆபிசர் அனாவசியமா ஒரு பத்து காசு கூட செலவு செய்யமாட்டாருன்னு சொன்னாங்க பின்ன இவரு எப்படி எனக்கு சேலை எடுத்து குடுத்தாரு.............ஒரு வேளை இப்படி இருக்குமோ............”
“எப்படி...........?.”
“அதாண்டி இப்ப டிவில எல்லாம் விளம்பரபடுத்துறாங்கள்ல ஒரு சேலை வாங்கினா ஒரு சேலை ப்ரின்னு அது மாதிரி அந்த சேலை வாங்குனதுக்கு இந்த சேலை ப்ரியாயிருக்குமோ.................”
“அதயேன்டி உனக்கு குடுக்கணும்..........அவரு அம்மா இருக்காங்கள்ல......”
“இந்த சேலை கல்லு வச்சுயிருக்குடி...........ஒரு வேளை ரெண்டுதரமும் திட்டுனதுனால போனாபோகுதுன்னு எனக்கு குடுத்திருப்பாரோ...........”.(.ஒரு சேலை கொடுத்ததுக்கு இந்தபாடா ஸ்ஸ்ஸ் அப்பா முடியல.............)
“சரி சரி தொலஞ்சுபோ............. அப்புறம் பரீச்சையின்னுசொல்லவும் தான்டி ஞாபகம் வருது...........நாளகளச்சு எனக்கு பஸ்ட்இயர் பிசிக்ஸ் அரியர் எக்ஸாம் வருது.............இந்த வருசம் நடத்துனதே ஞாபகம் வரல இதுல போன வருசம் நடத்துனது எப்படிடி ஞாபகம் வரும்........”
.
”கஷ்டமாயிருந்தா வீட்டுக்குவாடி..............நான் சொல்லிதாரேன்............”
“வரலாம் ஆனா நீ எனக்கு சொல்லித்தாரேன்னு நீயும் படிச்சிருவியே.........”.
“அடிப்பாவி...........எனக்குதான் அரியரே இல்லயில்லடி.........”
“இல்ல இல்ல இந்த வருசம் பிசிக்ஸ் பரிச்சைக்கு அதுல இருந்து ஏதாவது ஒரு கேள்வி கேட்டு நீ ஒழுங்கா எழுதி பாஸ்பண்ணீட்டன்னா.............”
“உன்னய இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்டி................”.என்றபடி அவள விரட்டிக்கொண்டு ஒட.............
.மறு நாள் தாமரை வந்ததிலிருந்து வீடு கல்யாணக்களை கட்டியது .கயலும் பரிட்சை முடிந்தவுடன் தாமரைக்கு உதவியாக வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.காந்திமதியும் இப்போது முழுநேரமாக கயலை கவனிப்பதயே ஒரு வேலையாக வைத்திருந்தார்.
திருமணம் நான்கு நாட்கள் இருக்கையில் சொந்த பந்தங்கள் அனைவரும் வர வீடு ஜேஜே என்று இருந்தது மல்லிகா கயலிடம் வந்து.
“அக்கா உங்கிட்ட எத்தன நாளா இந்த ரெக்கார்டு நோட்ல படம் வரஞ்சுதான்னு சொல்லுறேன்.நீயும் நாளைக்கு நாளைக்குன்னு நாள கடத்துற.......சுதாக்கா கல்யாணம் முடிஞ்ச மறுநாள் நோட்ட சமீட் பண்ணனும் நானே கல்யாணம்ன்னு சொன்னதுனால அந்த science teacher ரெண்டு நாள் டயம் குடுத்தாங்க please கா வரைஞ்சு குடு..........”
“இருடி நாளைக்கு கண்டிப்பா வரஞ்சு தாரேன்........”
“நேத்தும் இப்படிதான சொன்ன…………?”
“ நானெல்லாம் ஒரே பேச்சு ஒரே சொல்லு உள்ளவடி மாத்தி மாத்திலாம் பேச மாட்டேன் .நாளைக்கு கேளு அப்பவும் இப்படித்தான் சொல்லுவேன்............”
“அக்கா.............”..என்று சிறுபிள்ளை போல அழ ஆரம்பிக்க
“ஏய் ஏய் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி..........please please மன்னிச்சுக்கடி. அக்கா உனக்கு கண்டிப்பா வரஞ்சு தருவேன்டி........எங்க சிரி சிரி பாப்போம்” என்று கிச்சுகிச்சு முட்ட மல்லிகா சிரித்தபடி அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தாள்............
அத்தியையம்-11
“ஏய்கயலு.......ஏய் கயலு.......”
“இதோ வர்றேன்டி.......”
“ஏய் காலேஜ்க்கு நேரமாச்சு பஸ்போயிரும்னு கத்திக்கிட்டு இருக்கேன்....... நீயேன்டி இப்படி ஆடி அசைஞ்சு வர்ற......?”
காந்திமதி” ஏய் கயலு நானும் துணைக்கு வரவா.....?”
“எதுக்கு இத்தனநாளா நீயா துணைக்கு வந்த...? அது தான் அமுதாவ இன்னைக்கு வீட்டுக்கு வரச்சொல்லிட்டேன்ல அப்புறம் எதுக்கு நீயும் வர்ற....?”
“சரி சரி பேச்சை குறைச்சுக்கிட்டு ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வாங்க.....”
“ஏய் வாடி நேரமாச்சு நீ அப்புறம் உங்க அப்பத்தாவ கொஞ்சிகிட்டு இரு..........”
“நீ வேற ஏண்டி கடுப்பேத்துர வரவர எங்க அப்பத்தா ரொம்ப பண்ணுதுடி”
“ஏன் என்னாச்சு உங்க அப்பத்தாவ தான் உனக்கு ரொம்ப புடிக்குமேடி...?”
“இப்பவும் புடிக்கும்தான் ஆனா அது பண்ணுற எல்லாத்தையும் பொருத்துக்க முடியலடி......”
“இப்ப ஒரு பத்துநாளா ரொம்பண்ணுதுடி அங்க போகாத பேசாத ஓடாதன்னு ஒரே தொல்ல..........”.
“நான் எங்க போறேன் காலேஜ்…………………. அத விட்டா வீடு……………. வேற எந்த எடத்துக்கும் போறதில்ல..மத்தநேரத்துல வாசபக்கம் கூட விடமாட்டேங்குதுடி.....நேத்து அயன் பண்ணுற அண்ணன் வந்து டிரஸ் குடுக்குராரு இதுவும் என்னோட முதுகுக்கு பின்னாடி வந்து எட்டி எட்டி பாத்துக்கிட்டு இருக்குடி வயசான மூளையும் கொஞ்சம் குழம்பிபோயிருமோ.............”.
“நேத்து போன்ல உங்கிட்ட தாண்டி பேசிகிட்டு இருக்கேன் கதவுக்குகிட்ட வந்து காத வச்சு ஒட்டுகேட்டுகிட்டு இருக்கு .......இதோட டார்ச்சர் ஒரு எல்லையில்லாம போயிட்டுயிருக்குடி..............”
“ஏன் உங்க அம்மா அப்பா எங்கடி.........? உங்க அம்மாட்ட சொல்ல வேண்டியது தான....?”
“கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாளு தான இருக்கு அம்மாவும் அப்பாவும் காலையில கிளம்பி பத்திரிக்கை குடுக்க,சாமான் வாங்கன்னு அலைஞ்கிட்டு சாயங்காலம் தான் வர்றாங்க .......”
“ஆமா சுதாக்கா ........?”
”அவளுக்குதான் என்ன ஆச்சுன்னே தெரியல ........முன்னாடியெல்லாம் டிவி முன்னாடியே கதியா கிடப்பா.......
“அப்படி என்னடி பாப்பா......? படமா......?இல்ல உங்க அப்பாத்தா மாதிரி சீரியலா.....?”
“ச்சீ ச்சீ.அதெல்லாம் அவளுக்கு பிடிக்காது....அவளுக்கு பிடிச்சதெல்லாம் இந்த அலங்காரம் பண்ணுறது மாடல் மாடலா தலை சீவி விடுவாங்கள்ல அதுதான் பாப்பா.........ஆனா இப்ப ரூமுள்ள என்ன பண்ணுறான்னே தெரியலயே....”
“ஒருவேள அவளுக்கு பாத்துருக்குற மாப்ள கூட போன்ல பேசுவாளோ.......”
“யாரு எங்க அப்பத்தா இருக்குற வீட்லவேற யாரோடயும் போன்ல பேச முடியுமா......அது மட்டும் தாண்டி போன்ல பேசும்........அடுத்தவங்க பேசுறது கேக்குமோ கேக்காதோ........இது பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கும்.......கல்யாணத்துக்கு அப்புறம் தாண்டி பொண்ணும் மாப்ளையும் பேசணும்னு அதுக்கு முன்னாடி பேசக்கூடாதுன்னு எங்க வீட்ல தாமர அக்கா கல்யாணத்திலயே ஸ்டிக்ட் ஆர்டர்டி.........”
“ஒரு வேள பயப்படுறாளோ எப்படி வேற வீட்ல போய் இருக்குறதுன்னு.....”
“ஒன்னுமே புரியலடி நாளைக்கு தாமர அக்கா வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்கு.... அது வந்தா தாண்டி அது புள்ளைகளோட நல்லா ஜாலியா இருக்கும்....நமக்கும் இன்னும் ரெண்டு பரிச்சை தானே இருக்குஅப்புறம் ஒன்றரை மாசம் லீவு. இந்த லீவ நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணனும்டி............. கல்யாணத்துக்கு போடுறதுக்குன்னு டிசைன் டிசைன்னா தோடு கண்ணாடி வளையல்ன்னு தாவனிக்கு மேட்சா நம்ம ஊரு திருவிழா கடையில வாங்கிவச்சுறுக்கேன். இந்த அப்பத்தா என்னன்னா சேலைதான் கட்டணும்னு சொல்லுதுடி.........”
“அடிப்பாவி சேலைவேற புதுசா வாங்கியிருக்கியா...............நான் உங்கிட்ட ஒரு கிளிப் வாங்கினாக்கூட சொல்லிட்டுதானடி வாங்குறேன்......நீ எப்படிடி சொல்லாம வாஙகுன..........?.”.
“ஏய் ஏய் கொஞ்சம் நான் சொல்லுறத கேளுடி............அன்னைக்கு பட்டெடுக்க போகும்போது ஆளுக கணக்குக்கு என்னையும் கூட்டிக்கிட்டு போனாங்கள்ல அப்ப ஒரு சேலை நல்லாயிருக்குனு வச்சுபாத்துகிட்டு இருந்தனா அதபாத்துட்டு அந்த ஐயனாரு வாங்கிகுடுத்துருக்காருடி………..”
“யாரு சுதாக்கா மாப்ளயா............அவரு உனக்கு மாமாவாக போறவருடி ஆனா அவர பாத்தா ஒரு பொம்பளபிள்ளைக்கு போயி சேலை எடுத்து குடுக்கிறவர் மாதிரி தெரியலயே.................”.
“எனக்கும் அதே டவுட்டுதான்டி.........எப்பபாத்தாலும் உர்ருன்னு இருக்காரு. அப்புறம் அன்னைக்கு அவரு தம்பிக்கிட்ட பேசிகிட்டு இருந்தேன்ல அவனுக இவரு ஒரு ஸ்டிக்ட் ஆபிசர் அனாவசியமா ஒரு பத்து காசு கூட செலவு செய்யமாட்டாருன்னு சொன்னாங்க பின்ன இவரு எப்படி எனக்கு சேலை எடுத்து குடுத்தாரு.............ஒரு வேளை இப்படி இருக்குமோ............”
“எப்படி...........?.”
“அதாண்டி இப்ப டிவில எல்லாம் விளம்பரபடுத்துறாங்கள்ல ஒரு சேலை வாங்கினா ஒரு சேலை ப்ரின்னு அது மாதிரி அந்த சேலை வாங்குனதுக்கு இந்த சேலை ப்ரியாயிருக்குமோ.................”
“அதயேன்டி உனக்கு குடுக்கணும்..........அவரு அம்மா இருக்காங்கள்ல......”
“இந்த சேலை கல்லு வச்சுயிருக்குடி...........ஒரு வேளை ரெண்டுதரமும் திட்டுனதுனால போனாபோகுதுன்னு எனக்கு குடுத்திருப்பாரோ...........”.(.ஒரு சேலை கொடுத்ததுக்கு இந்தபாடா ஸ்ஸ்ஸ் அப்பா முடியல.............)
“சரி சரி தொலஞ்சுபோ............. அப்புறம் பரீச்சையின்னுசொல்லவும் தான்டி ஞாபகம் வருது...........நாளகளச்சு எனக்கு பஸ்ட்இயர் பிசிக்ஸ் அரியர் எக்ஸாம் வருது.............இந்த வருசம் நடத்துனதே ஞாபகம் வரல இதுல போன வருசம் நடத்துனது எப்படிடி ஞாபகம் வரும்........”
.
”கஷ்டமாயிருந்தா வீட்டுக்குவாடி..............நான் சொல்லிதாரேன்............”
“வரலாம் ஆனா நீ எனக்கு சொல்லித்தாரேன்னு நீயும் படிச்சிருவியே.........”.
“அடிப்பாவி...........எனக்குதான் அரியரே இல்லயில்லடி.........”
“இல்ல இல்ல இந்த வருசம் பிசிக்ஸ் பரிச்சைக்கு அதுல இருந்து ஏதாவது ஒரு கேள்வி கேட்டு நீ ஒழுங்கா எழுதி பாஸ்பண்ணீட்டன்னா.............”
“உன்னய இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்டி................”.என்றபடி அவள விரட்டிக்கொண்டு ஒட.............
.மறு நாள் தாமரை வந்ததிலிருந்து வீடு கல்யாணக்களை கட்டியது .கயலும் பரிட்சை முடிந்தவுடன் தாமரைக்கு உதவியாக வேலைகள் செய்து கொண்டிருந்தாள்.காந்திமதியும் இப்போது முழுநேரமாக கயலை கவனிப்பதயே ஒரு வேலையாக வைத்திருந்தார்.
திருமணம் நான்கு நாட்கள் இருக்கையில் சொந்த பந்தங்கள் அனைவரும் வர வீடு ஜேஜே என்று இருந்தது மல்லிகா கயலிடம் வந்து.
“அக்கா உங்கிட்ட எத்தன நாளா இந்த ரெக்கார்டு நோட்ல படம் வரஞ்சுதான்னு சொல்லுறேன்.நீயும் நாளைக்கு நாளைக்குன்னு நாள கடத்துற.......சுதாக்கா கல்யாணம் முடிஞ்ச மறுநாள் நோட்ட சமீட் பண்ணனும் நானே கல்யாணம்ன்னு சொன்னதுனால அந்த science teacher ரெண்டு நாள் டயம் குடுத்தாங்க please கா வரைஞ்சு குடு..........”
“இருடி நாளைக்கு கண்டிப்பா வரஞ்சு தாரேன்........”
“நேத்தும் இப்படிதான சொன்ன…………?”
“ நானெல்லாம் ஒரே பேச்சு ஒரே சொல்லு உள்ளவடி மாத்தி மாத்திலாம் பேச மாட்டேன் .நாளைக்கு கேளு அப்பவும் இப்படித்தான் சொல்லுவேன்............”
“அக்கா.............”..என்று சிறுபிள்ளை போல அழ ஆரம்பிக்க
“ஏய் ஏய் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி..........please please மன்னிச்சுக்கடி. அக்கா உனக்கு கண்டிப்பா வரஞ்சு தருவேன்டி........எங்க சிரி சிரி பாப்போம்” என்று கிச்சுகிச்சு முட்ட மல்லிகா சிரித்தபடி அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தாள்............
Last edited: