காதலனின்
முதல் காதல் பரிசு
காதலின் ஆழத்தை
எடுத்துரைக்க
காதலியோ
அவன் வாய்வார்த்தைக்கு
மட்டும்
மயங்கியிருப்பதை
அறிவானா
அந்த காதல் கிறுக்கன்???
சுருக்கு பையினை போல் ராப் செய்யப்பட்டிருந்த அந்த பரிசுப்பொதியை பிரித்தாள் ஶ்ரீ. அதனுள் ஒரு இளஞ்சிவப்பு நிற பரிசுப்பெட்டியிருந்தது...அதனை கையில் எடுத்தவள் அதனை சுற்றி நீலநிற ரிப்பனால் முடிச்சிடப்பட்டிருந்த முடிச்சினை கழற்றி அந்த பெட்டியின் மூடியினை அகற்றிய வேளையில் பெட்டி நான்குபுறமும் விரிந்து நின்றது...
பெட்டியின் நான்கு பக்கங்களும் இதயவடிவான கார்ட் போட்டினால் இணைக்கப்பட்டிருந்தது....
நான்கு இதயங்களிலும் நான்கு பக்கங்களிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பசுல்(puzzle) போன்ற எட்டு துண்டுகள் இணைக்கப்பட்டிருந்தது.
நடுவில் இன்னொரு சிறு பரிசுப்பொதியும் ஒரு ஹேண் மேட் க்ரீட்டிங் கார்ட்டும் இருந்தது...
க்ரீட்டிங் கார்டின் மேல் ஒரு ஒற்றை ரோஜா பொருத்தப்பட்டிருந்தது..
அந்த சிறு பரிசுப்பொதியை திறந்தவள் கண்டது ஒரு புத்தகமும் ஒரு கார்ட் கோர்வையும்...
கார்ட் கோர்வையை கையில் எடுத்தாள் ஶ்ரீ..
அந்த கோர்வை ரிபனினால் முடிச்சிடப்பட்டு சாவிக்கொத்து போன்ற அமைப்பில் இருந்தது...
மொத்தமாக பத்து கார்ட் இருந்தது அந்த கோர்வையில்... ஒவ்வொரு கார்ட்டிலும் இரண்டு வரி கவிதைகள்...
முதலாவது கார்டில் “ ஜீவனில் கலந்தவளுக்கு இந்த பித்தனின் காதல் கடிதம்” என்று இருந்தது...
இரண்டாவது கார்டில் “மயங்கியது என் மனம் உன் குரலாலே...” என்றிருந்தது..
மூன்றாவது கார்டில் “இமைக்க மறந்தன என் விழிகள் உன் குறுநகையாலே..”
நான்காவது கார்டில் “துடிக்கும் இதழ்களை ருசிக்க விரும்பும் வண்டாய் இந்த காதல் கிறுக்கன்”
ஐந்தாவது கார்டில் “ உன் மனதை வேட்டையாட ஆயுதம் வேண்டி தவமிருக்கிறான் இந்த காதல் கிறுக்கன்”
ஆறாவது கார்டில் “உன் கரம் பிடிக்கும் நாளுக்காய் ஏங்கி நிற்கிறது என் நாட்காட்டி...”
ஏழாவது கார்டில் “ சித்தம் கலங்கியவனை தெளிவிக்க வந்த என் மருத்துவிச்சி நீ...”
எட்டாவது கார்டில் “ நீ தலை கோதிட உன் மடியில் நான் உறங்கும் நாள் எப்போது??”
ஒன்பதாவது கார்டில் “என் ஜீவனை வதைத்து மகிழ வந்த என் அழகான ராட்சசி நீ...”
பத்தாவது கார்டில் “வார்த்தைகள் பலகோடி உண்டேனும் என் காதலின் ஆழத்தை உணர்த்த அவை போதவில்லை.. வாழ்நாள் முழுவதும் காதலை உணர்த்த காத்திருக்கும் இக்கிறுக்கனுக்கு உன் பதிலென்ன??” என்று பத்தாவது கார்டுடன் அந்த கார்ட் கோர்வை நிறைவடைந்திருந்தது...
அந்த பெட்டியிலில் இருந்தே இன்னொரு டயரி போன்ற புத்தகத்தை வெளியே எடுத்தவள் அதை திறந்தாள்.
முதல் பக்கத்தில் “காதல் கிறுக்கனின் காதல் பரிசு” என்று நடுவில் கையால் சிவப்புநிற மைகொண்டு எழுதப்பட்டிருக்க கீழே “இப்படிக்கு காதல் கிறுக்கன்” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது...
அந்த பக்கத்தை பிரட்டியவள் கண்டது அந்த புத்தகத்தின் நடுவே இதயவடிவில் ஆழமாக வெட்டப்பட்டு அதனுள் ஒரு மோதிரப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது...
அதை திறந்து பார்த்தபோது அதனுள் ஒரு டைட்டானியத்தால் செய்யப்பட் மோதிரம் டாக் செய்யப்பட்டு இருந்தது.. அதை கையில் எடுத்த ஶ்ரீ டாக்கில் இருந்ததை வாசித்தாள்.
“காதல் கிறுக்கனின் இதயத்துடிப்பாய் நீ..” என்று எழுதியிருந்தது..
அந்த டைட்டானியம் மோதிரத்தின் நடுவில் இதயத்துடிப்பின் பிம்பமொன்று இருந்தது... அதனை தடவிக்கொடுத்தவள் அதில் இதழ் பதித்தாள்...
பின் கிரீட்டிங் கார்ட்டை விரித்து பார்க்க அதன் நடுப்புறம் மூன்று தட்டுக்களாய் இருக்க முதல் தட்டில் ஐ என்றும் இரண்டாவது தட்டில் லவ் யூ என்றும் இருபுறமும் ஒரு ஹார்ட்டும் இணைக்கப்பட்டிருந்தது...மூன்றாவது தட்டில் ஒரு ஆணும் பெண்ணும் கைகோர்த்த நிலையில் அமர்ந்திருப்பது போல் அந்த வாழ்த்தட்டை தயாரிக்கப்பட்டிருந்தது.. மீதமிருந்த இடைவெளியில் சிறு சிவப்பு நிற ஹார்ட்டுக்கள் வரையப்பட்டிருந்தன... அதை தடவிக்கொடுத்தவள் அதனை ஒருபுறமாக வைத்துவிட்டு அந்த பசுல் போன்ற கண்ணாடித்துண்டுகள் எட்டையும் கையில் எடுத்தவள் அதை பொருத்தும் வேலையில் இறங்கினாள்..
சில நிமிட முயற்சியின் பின் அதனை பொருத்தி பார்த்தவளுக்கு ஆச்சர்யம்.... அதில் ரிஷியும் ஶ்ரீயும் காரில் அமர்ந்திருப்பது போன்றதொரு புகைப்படம் இருந்தது... அதில் ரிஷி அவள் கன்னத்தில் முத்தமிடுவது போலும் அதை ஶ்ரீ கண்மூடி ரசிப்பதாகவும் அந்த புகைப்படம் இருந்தது... அதை பார்த்தவளுக்கு குழம்பம் தான் மிஞ்சியது...
“இந்த போட்டாவை அய்த்தான் எப்போ எடுத்தாரு??? நிச்சயமா இது இன்னைக்கு எடுத்த போட்டோ இல்லை... இதில நாம கண்ண மூடிட்டு இருக்கோம்...நாம எப்போ அய்த்தான் கிஸ் குடுத்ததை கண்ணை மூடிட்டு வாங்குனோம்??? இந்த அய்த்தான் ஏதும் கிராப்பிக்ஸ் பண்ணிட்டாறா?? இல்லையே.. இந்த போட்டோ ரொம்ப லைவ்வா வேற இருக்கே... இதுல நான் சாரி கட்டியிருக்க மாதிரி இருக்கு......... நாம எப்போ லாஸ்டா சாரி கட்டுனோம்???” என்று யோசித்தவளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை....
எப்படியாவது பதிலை தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன் ரிஷியை அழைத்தாள் ஶ்ரீ.
முதல் ரிங்கிலேயே அழைப்பை எடுத்தான் ரிஷி...
“அய்த்தான் எனக்கு ஒரு டவுட்டு???”
“ஹாஹா நான் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேன் அம்லு... இப்போ கட்டாயம் உன்னோட டவுட்டை கிளியர் பண்ணணுமா..??”
“ஓ.... சரி நீங்க இப்போ நான் சொல்லுற மாதிரி செய்ங்க...”
“சொல்லு அம்லு...”
“காரை எங்கயாவது ஓரமா பார்க் பண்ணுங்க....”
“அம்லு ப்ளைட்டுக்கு லேட் ஆகிடும்மா....”
“ஐயோ அய்த்தான் என் நிலைமையை புரிஞ்சிக்கோங்க... எனக்கு மண்டையே வெடிச்சிரும்போல இருக்கு ப்ளீஸ்...”
“சரி சொல்லு.. என்ன டவுட்டு??”
“நீங்க வண்டியை ஓரமா பார்க் பண்ணிட்டீங்களா??”
“இது வேறயா. கொஞ்சம் இரு....”
“சரி இப்போ சொல்லு... என் அம்லுக்கு என்ன டவுட்டு..??”
“அய்த்தான் அந்த போட்டோ எப்போ எடுத்தது..??”
“கிப்ட் பிரிச்சி பார்த்துட்டியா??? எப்படி இருக்கு??”
“ஆமா.. இப்போ நான் கேட்டதுக்கு பதிலை சொல்லுங்க அய்த்தான்.. ப்ளீஸ்...” என்று ஶ்ரீ கெஞ்ச அந்தப்புறம் ரிஷி சிரித்தான்..
“உண்மையாவே உனக்கு அந்த ஸ்நெப் எங்க எடுத்திருப்பேனு கண்டுபிடிக்கமுடியலையா??? நீ ஈசியா கண்டுபிடிச்சிடிச்சி என்கூட சண்டை போடுவனு தானே நான் நினைச்சேன்..”
“உங்க கிப்ட பார்த்து என் மைண்ட் ப்ரீஸ் ஆகிரிச்சு... அதுனால இப்போ கண்டுபிடிக்க முடியலை.. நாளைக்கு காலையில நிச்சயம் கண்டுபிடிச்சிருவேன்..”
“அப்போ நாளைக்கு காலையிலேயே கண்டுபிடிச்சிக்கோ அம்லு... இப்போ ஆளை விடு...”
“மிஸ்டர் ரிஷி... எனக்கு சஸ்பன்ஸ் சரிவராதுங்குறதால தான் உங்ககிட்ட கெஞ்சிட்டு இருக்கேனே தவிர கண்டுபிடிக்கமுடியாமலில்லை.. நீங்க ஏதும் சொல்லவேணாம்... நானே கண்டுபிடிச்சிக்கிறேன்... பாய்...” என்றுவிட்டு கடுப்புடன் அழைப்பை துண்டித்துவிட்டாள் ஶ்ரீ..
ரிஷயோ மீண்டும் ஶ்ரீக்கு முயற்சிக்க அவளோ அழைப்பை ஏற்கவில்லை... இரு விநாடிகளின் பின் ஶ்ரீயின் மொபைலுக்கு வாய்ஸ் மேசேஜ் ஒன்று வந்தது..
அதில் ரிஷி “என்னோட அம்லு என்கிட்ட கோவிச்சிக்கிட்டாங்களா???? அத்தான் பாவமில்ல.. கொஞ்சம் தயவு காட்டலாமே.... அத்தான் இன்னும் ஒரு வாரத்திற்கு உன்னை பார்க்கமுடியாது... இப்போ கோவிச்சிக்கிட்டா அத்தான் பாவமில்லையா?? அத்தானுக்கு நீங்க கோவிச்சிக்கிட்டா எந்த வேலையும் ஓடாது அம்லு... இந்த அத்தானை மன்னிச்சிருங்க ப்ளீஸ்..” என்று அந்த வாய்ஸ் மெசேஜில் இருக்க அதை கேட்டவளுக்கு அவனது கெஞ்சல் கூட ஒரு கிறங்கலை தந்தது... பதிலேதும் அனுப்பாமல் அந்த வாய்ஸ் மேசேஜை மீண்டும் கேட்டாள் ஶ்ரீ... அப்போது ரிஷி அழைக்க அழைப்பை எடுத்து காதில் வைக்க அந்தபுறம் பல முத்தக்குவியல் இடைவெளியின்றி பறந்துவந்துக்கொண்டிருந்தது.. அதை பெற்றவளுக்கு முகம் சிவந்தது... பதிலேதும் சொல்லமுடியாமல் கீழுதட்டை கடித்தபடி இருந்தாள் ஶ்ரீ....
“இப்போ கோபம் எல்லாம் போச்சா அம்லு....?? அத்தானை மன்னிச்சிட்டியா???” என்று கேட்டவனுக்கு ம்ம் என்ற முணுமுணுப்புதான் பதிலாக கிடைத்தது...
“என்ன அம்லு சத்தத்தையே காணோம்..?? அம்லு....” என்று ஹஸ்கி வாய்சில் ரிஷி ஶ்ரீயின் பெயரை ஏலம் போட ஶ்ரீயோ
“ஒன்னுமில்லை... நல்லபடியா ட்ரிப்பை முடிச்சிட்டு வந்து சேருங்க... வேலையில என்னை மறந்தீங்க அப்புறம் தெரியும் இந்த ஶ்ரீயாருனு.. பாய் குட் நைட்..” என்றுவிட்டு ஶ்ரீயே மறுபடியும் அழைப்பை துண்டித்தாள்....
முதல் காதல் பரிசு
காதலின் ஆழத்தை
எடுத்துரைக்க
காதலியோ
அவன் வாய்வார்த்தைக்கு
மட்டும்
மயங்கியிருப்பதை
அறிவானா
அந்த காதல் கிறுக்கன்???
சுருக்கு பையினை போல் ராப் செய்யப்பட்டிருந்த அந்த பரிசுப்பொதியை பிரித்தாள் ஶ்ரீ. அதனுள் ஒரு இளஞ்சிவப்பு நிற பரிசுப்பெட்டியிருந்தது...அதனை கையில் எடுத்தவள் அதனை சுற்றி நீலநிற ரிப்பனால் முடிச்சிடப்பட்டிருந்த முடிச்சினை கழற்றி அந்த பெட்டியின் மூடியினை அகற்றிய வேளையில் பெட்டி நான்குபுறமும் விரிந்து நின்றது...
பெட்டியின் நான்கு பக்கங்களும் இதயவடிவான கார்ட் போட்டினால் இணைக்கப்பட்டிருந்தது....
நான்கு இதயங்களிலும் நான்கு பக்கங்களிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பசுல்(puzzle) போன்ற எட்டு துண்டுகள் இணைக்கப்பட்டிருந்தது.
நடுவில் இன்னொரு சிறு பரிசுப்பொதியும் ஒரு ஹேண் மேட் க்ரீட்டிங் கார்ட்டும் இருந்தது...
க்ரீட்டிங் கார்டின் மேல் ஒரு ஒற்றை ரோஜா பொருத்தப்பட்டிருந்தது..
அந்த சிறு பரிசுப்பொதியை திறந்தவள் கண்டது ஒரு புத்தகமும் ஒரு கார்ட் கோர்வையும்...
கார்ட் கோர்வையை கையில் எடுத்தாள் ஶ்ரீ..
அந்த கோர்வை ரிபனினால் முடிச்சிடப்பட்டு சாவிக்கொத்து போன்ற அமைப்பில் இருந்தது...
மொத்தமாக பத்து கார்ட் இருந்தது அந்த கோர்வையில்... ஒவ்வொரு கார்ட்டிலும் இரண்டு வரி கவிதைகள்...
முதலாவது கார்டில் “ ஜீவனில் கலந்தவளுக்கு இந்த பித்தனின் காதல் கடிதம்” என்று இருந்தது...
இரண்டாவது கார்டில் “மயங்கியது என் மனம் உன் குரலாலே...” என்றிருந்தது..
மூன்றாவது கார்டில் “இமைக்க மறந்தன என் விழிகள் உன் குறுநகையாலே..”
நான்காவது கார்டில் “துடிக்கும் இதழ்களை ருசிக்க விரும்பும் வண்டாய் இந்த காதல் கிறுக்கன்”
ஐந்தாவது கார்டில் “ உன் மனதை வேட்டையாட ஆயுதம் வேண்டி தவமிருக்கிறான் இந்த காதல் கிறுக்கன்”
ஆறாவது கார்டில் “உன் கரம் பிடிக்கும் நாளுக்காய் ஏங்கி நிற்கிறது என் நாட்காட்டி...”
ஏழாவது கார்டில் “ சித்தம் கலங்கியவனை தெளிவிக்க வந்த என் மருத்துவிச்சி நீ...”
எட்டாவது கார்டில் “ நீ தலை கோதிட உன் மடியில் நான் உறங்கும் நாள் எப்போது??”
ஒன்பதாவது கார்டில் “என் ஜீவனை வதைத்து மகிழ வந்த என் அழகான ராட்சசி நீ...”
பத்தாவது கார்டில் “வார்த்தைகள் பலகோடி உண்டேனும் என் காதலின் ஆழத்தை உணர்த்த அவை போதவில்லை.. வாழ்நாள் முழுவதும் காதலை உணர்த்த காத்திருக்கும் இக்கிறுக்கனுக்கு உன் பதிலென்ன??” என்று பத்தாவது கார்டுடன் அந்த கார்ட் கோர்வை நிறைவடைந்திருந்தது...
அந்த பெட்டியிலில் இருந்தே இன்னொரு டயரி போன்ற புத்தகத்தை வெளியே எடுத்தவள் அதை திறந்தாள்.
முதல் பக்கத்தில் “காதல் கிறுக்கனின் காதல் பரிசு” என்று நடுவில் கையால் சிவப்புநிற மைகொண்டு எழுதப்பட்டிருக்க கீழே “இப்படிக்கு காதல் கிறுக்கன்” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது...
அந்த பக்கத்தை பிரட்டியவள் கண்டது அந்த புத்தகத்தின் நடுவே இதயவடிவில் ஆழமாக வெட்டப்பட்டு அதனுள் ஒரு மோதிரப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது...
அதை திறந்து பார்த்தபோது அதனுள் ஒரு டைட்டானியத்தால் செய்யப்பட் மோதிரம் டாக் செய்யப்பட்டு இருந்தது.. அதை கையில் எடுத்த ஶ்ரீ டாக்கில் இருந்ததை வாசித்தாள்.
“காதல் கிறுக்கனின் இதயத்துடிப்பாய் நீ..” என்று எழுதியிருந்தது..
அந்த டைட்டானியம் மோதிரத்தின் நடுவில் இதயத்துடிப்பின் பிம்பமொன்று இருந்தது... அதனை தடவிக்கொடுத்தவள் அதில் இதழ் பதித்தாள்...
பின் கிரீட்டிங் கார்ட்டை விரித்து பார்க்க அதன் நடுப்புறம் மூன்று தட்டுக்களாய் இருக்க முதல் தட்டில் ஐ என்றும் இரண்டாவது தட்டில் லவ் யூ என்றும் இருபுறமும் ஒரு ஹார்ட்டும் இணைக்கப்பட்டிருந்தது...மூன்றாவது தட்டில் ஒரு ஆணும் பெண்ணும் கைகோர்த்த நிலையில் அமர்ந்திருப்பது போல் அந்த வாழ்த்தட்டை தயாரிக்கப்பட்டிருந்தது.. மீதமிருந்த இடைவெளியில் சிறு சிவப்பு நிற ஹார்ட்டுக்கள் வரையப்பட்டிருந்தன... அதை தடவிக்கொடுத்தவள் அதனை ஒருபுறமாக வைத்துவிட்டு அந்த பசுல் போன்ற கண்ணாடித்துண்டுகள் எட்டையும் கையில் எடுத்தவள் அதை பொருத்தும் வேலையில் இறங்கினாள்..
சில நிமிட முயற்சியின் பின் அதனை பொருத்தி பார்த்தவளுக்கு ஆச்சர்யம்.... அதில் ரிஷியும் ஶ்ரீயும் காரில் அமர்ந்திருப்பது போன்றதொரு புகைப்படம் இருந்தது... அதில் ரிஷி அவள் கன்னத்தில் முத்தமிடுவது போலும் அதை ஶ்ரீ கண்மூடி ரசிப்பதாகவும் அந்த புகைப்படம் இருந்தது... அதை பார்த்தவளுக்கு குழம்பம் தான் மிஞ்சியது...
“இந்த போட்டாவை அய்த்தான் எப்போ எடுத்தாரு??? நிச்சயமா இது இன்னைக்கு எடுத்த போட்டோ இல்லை... இதில நாம கண்ண மூடிட்டு இருக்கோம்...நாம எப்போ அய்த்தான் கிஸ் குடுத்ததை கண்ணை மூடிட்டு வாங்குனோம்??? இந்த அய்த்தான் ஏதும் கிராப்பிக்ஸ் பண்ணிட்டாறா?? இல்லையே.. இந்த போட்டோ ரொம்ப லைவ்வா வேற இருக்கே... இதுல நான் சாரி கட்டியிருக்க மாதிரி இருக்கு......... நாம எப்போ லாஸ்டா சாரி கட்டுனோம்???” என்று யோசித்தவளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை....
எப்படியாவது பதிலை தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன் ரிஷியை அழைத்தாள் ஶ்ரீ.
முதல் ரிங்கிலேயே அழைப்பை எடுத்தான் ரிஷி...
“அய்த்தான் எனக்கு ஒரு டவுட்டு???”
“ஹாஹா நான் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேன் அம்லு... இப்போ கட்டாயம் உன்னோட டவுட்டை கிளியர் பண்ணணுமா..??”
“ஓ.... சரி நீங்க இப்போ நான் சொல்லுற மாதிரி செய்ங்க...”
“சொல்லு அம்லு...”
“காரை எங்கயாவது ஓரமா பார்க் பண்ணுங்க....”
“அம்லு ப்ளைட்டுக்கு லேட் ஆகிடும்மா....”
“ஐயோ அய்த்தான் என் நிலைமையை புரிஞ்சிக்கோங்க... எனக்கு மண்டையே வெடிச்சிரும்போல இருக்கு ப்ளீஸ்...”
“சரி சொல்லு.. என்ன டவுட்டு??”
“நீங்க வண்டியை ஓரமா பார்க் பண்ணிட்டீங்களா??”
“இது வேறயா. கொஞ்சம் இரு....”
“சரி இப்போ சொல்லு... என் அம்லுக்கு என்ன டவுட்டு..??”
“அய்த்தான் அந்த போட்டோ எப்போ எடுத்தது..??”
“கிப்ட் பிரிச்சி பார்த்துட்டியா??? எப்படி இருக்கு??”
“ஆமா.. இப்போ நான் கேட்டதுக்கு பதிலை சொல்லுங்க அய்த்தான்.. ப்ளீஸ்...” என்று ஶ்ரீ கெஞ்ச அந்தப்புறம் ரிஷி சிரித்தான்..
“உண்மையாவே உனக்கு அந்த ஸ்நெப் எங்க எடுத்திருப்பேனு கண்டுபிடிக்கமுடியலையா??? நீ ஈசியா கண்டுபிடிச்சிடிச்சி என்கூட சண்டை போடுவனு தானே நான் நினைச்சேன்..”
“உங்க கிப்ட பார்த்து என் மைண்ட் ப்ரீஸ் ஆகிரிச்சு... அதுனால இப்போ கண்டுபிடிக்க முடியலை.. நாளைக்கு காலையில நிச்சயம் கண்டுபிடிச்சிருவேன்..”
“அப்போ நாளைக்கு காலையிலேயே கண்டுபிடிச்சிக்கோ அம்லு... இப்போ ஆளை விடு...”
“மிஸ்டர் ரிஷி... எனக்கு சஸ்பன்ஸ் சரிவராதுங்குறதால தான் உங்ககிட்ட கெஞ்சிட்டு இருக்கேனே தவிர கண்டுபிடிக்கமுடியாமலில்லை.. நீங்க ஏதும் சொல்லவேணாம்... நானே கண்டுபிடிச்சிக்கிறேன்... பாய்...” என்றுவிட்டு கடுப்புடன் அழைப்பை துண்டித்துவிட்டாள் ஶ்ரீ..
ரிஷயோ மீண்டும் ஶ்ரீக்கு முயற்சிக்க அவளோ அழைப்பை ஏற்கவில்லை... இரு விநாடிகளின் பின் ஶ்ரீயின் மொபைலுக்கு வாய்ஸ் மேசேஜ் ஒன்று வந்தது..
அதில் ரிஷி “என்னோட அம்லு என்கிட்ட கோவிச்சிக்கிட்டாங்களா???? அத்தான் பாவமில்ல.. கொஞ்சம் தயவு காட்டலாமே.... அத்தான் இன்னும் ஒரு வாரத்திற்கு உன்னை பார்க்கமுடியாது... இப்போ கோவிச்சிக்கிட்டா அத்தான் பாவமில்லையா?? அத்தானுக்கு நீங்க கோவிச்சிக்கிட்டா எந்த வேலையும் ஓடாது அம்லு... இந்த அத்தானை மன்னிச்சிருங்க ப்ளீஸ்..” என்று அந்த வாய்ஸ் மெசேஜில் இருக்க அதை கேட்டவளுக்கு அவனது கெஞ்சல் கூட ஒரு கிறங்கலை தந்தது... பதிலேதும் அனுப்பாமல் அந்த வாய்ஸ் மேசேஜை மீண்டும் கேட்டாள் ஶ்ரீ... அப்போது ரிஷி அழைக்க அழைப்பை எடுத்து காதில் வைக்க அந்தபுறம் பல முத்தக்குவியல் இடைவெளியின்றி பறந்துவந்துக்கொண்டிருந்தது.. அதை பெற்றவளுக்கு முகம் சிவந்தது... பதிலேதும் சொல்லமுடியாமல் கீழுதட்டை கடித்தபடி இருந்தாள் ஶ்ரீ....
“இப்போ கோபம் எல்லாம் போச்சா அம்லு....?? அத்தானை மன்னிச்சிட்டியா???” என்று கேட்டவனுக்கு ம்ம் என்ற முணுமுணுப்புதான் பதிலாக கிடைத்தது...
“என்ன அம்லு சத்தத்தையே காணோம்..?? அம்லு....” என்று ஹஸ்கி வாய்சில் ரிஷி ஶ்ரீயின் பெயரை ஏலம் போட ஶ்ரீயோ
“ஒன்னுமில்லை... நல்லபடியா ட்ரிப்பை முடிச்சிட்டு வந்து சேருங்க... வேலையில என்னை மறந்தீங்க அப்புறம் தெரியும் இந்த ஶ்ரீயாருனு.. பாய் குட் நைட்..” என்றுவிட்டு ஶ்ரீயே மறுபடியும் அழைப்பை துண்டித்தாள்....
Last edited: