நீலக்கடலின் கரையில்
அலைகளை எதிர்ப்பார்த்து
நிற்கும் உன்னையும்
உன் விழிகளின்
அலைப்புறுதலையும்
முகமாறுதல்களையும்
ரசித்து நிற்கும்
என்னையும்
அலைகள் தன் சுகமான
மெய் மறக்கச் செய்து
நீ உணராமலே
உன் கரம்
என் கரம்
பற்ற செய்த
மாய வித்தையை
நீ அறிவாயா??
நம் பந்தத்தினை
உறுதி செய்ய
கடலை விற்கும் வண்டியில்
சுடர் விட்டு எரியும்
செந்தணல் உட்பட
அனைத்து பஞ்ச பூதங்களும்
சாட்சியாகிய
விந்தையினை நீ அறிவாயா??
நம் பந்தம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது
என்பதற்கு
இதை மிஞ்சிய
ஆதாரங்கள் உண்டோ??
என் மனம் கவர்ந்தவளே!!!
அலைகளை எதிர்ப்பார்த்து
நிற்கும் உன்னையும்
உன் விழிகளின்
அலைப்புறுதலையும்
முகமாறுதல்களையும்
ரசித்து நிற்கும்
என்னையும்
அலைகள் தன் சுகமான
மெய் மறக்கச் செய்து
நீ உணராமலே
உன் கரம்
என் கரம்
பற்ற செய்த
மாய வித்தையை
நீ அறிவாயா??
நம் பந்தத்தினை
உறுதி செய்ய
கடலை விற்கும் வண்டியில்
சுடர் விட்டு எரியும்
செந்தணல் உட்பட
அனைத்து பஞ்ச பூதங்களும்
சாட்சியாகிய
விந்தையினை நீ அறிவாயா??
நம் பந்தம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது
என்பதற்கு
இதை மிஞ்சிய
ஆதாரங்கள் உண்டோ??
என் மனம் கவர்ந்தவளே!!!