தேவதையிடம் வரம் கேட்டேன் P28

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் உங்க கிட்ட ஒரு கேள்வி அஜித்தையும் காஜலையும் சேர்த்து வச்சிடலாமா? வேணாமா?:geek::geek:


download (8).jpg

அவள் அருகில் வந்து நின்ற ராஜவேலு அசோக் அடித்த கன்னம் கொஞ்சமாக சிவந்திருப்பதை கண்டு "என்ன சம்மந்தி கொசுவை அடிக்கிற மாதிரி அடிச்சி இருக்கிறார், இவளையெல்லாம் அடிக்கிற அடில கடைவாய் பல்லு கழண்டு தெறிக்கணுமா இல்லையா? சம்மந்திக்கு கோபப்படவே தெரியல" என்றவாறு சமேலியை சுற்றி சுற்றி வந்தவன்



"பொம்பளைனா முடிய நீளமா வளர்க்கணும். இவ என்ன குட்டையா வெட்டி வச்சி இருக்கா? இப்போ நா எத புடிச்சி இழுக்கிறது? இது சரி பட்டு வராது" தனக்குள் பேசியவன் சமேலியின் தலையில் அடிக்க திடிக்கிட்டவள் சுற்றும்முற்றும் பார்க்க அங்கே யாரையும் காணாமல் பிரம்மையோ என்றெண்ணி டீவியில் கவனம் செலுத்த அவள் மடியில் இருந்த பழத் தட்டு நகர்ந்து அருகில் இருந்த மேசையின் மேல் சென்று அமரவும் கத்தி விட்டாள்.



தட்டில் இருந்த கத்தி மேலெழுந்து அவளை துரத்த உயிர் பயத்தில் வீட்டுக்குள்ளேயே ஓடலானாள் சமேலி. ஓடிக்கொண்டே இருக்க,



"உயிர் பயத்த காட்டினாதான் மன்னிப்பு கேக்குறா? இந்த சம்மந்தியம்மா எதுக்கு இவள சும்மா விட்டு வச்சாங்கண்ணே புரியல. இவளையெல்லாம் அப்போவே நாலு தட்டு தட்டி இருந்தா அடங்கி இருப்பா"



ஓடிக்கொண்டிருந்த சமேலி அலைபேசி கண்ணில் பட அஜய்யை அழைக்கலாம் என்று எண்ணி அலைபேசியை கையில் எடுக்க, அவள் எண்ணத்தை புரிந்து கொண்ட ராஜவேலு சமேலியை அந்திரத்தில் தலைகீழாக தொங்க விட்டு அலைபேசியை கீழே விழ வைத்து உடைத்திருந்தான்.





சட்டென்று மேலே தூக்கப்பட்டு தலை கீழாக தொங்கிய அதிர்ச்சியில் கைபேசி கீழே விழுந்து பல கீறல்களை பெற்று உயிர்நீத்திருந்தது.





"பேய் பேய்னு சொன்னா பயப்பாடாதுங்க, பாத்தாதான் பயப்படுத்துங்க. உப்ப்... எத்தனை பேர பய முறுத்தி இருப்பேன். என் பொண்டாட்டிய பயமுறுத்துறத விட திருப்தியா இருக்கு" ராஜவேலு குஷியாகி கூறிக்கொண்டிருக்கும் பொழுதே மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் அஜித்.



"அய்யய்யோ இந்தம்மாவ பார்த்ததுல இவரை மறந்துட்டேனே"



கையில் ஒரு பையோடு வந்தவன் சமேலி கீழே விழுந்து இருப்பதை கண்டு அவளை தூக்க முயற்சி செய்ய, அவன் என்ன செய்ய போகிறான் எனும் விதமாக பாத்திருந்த ராஜவேலு அவனை தடுத்து அக்ஷையின் ஹோட்டலுக்கு செல்லுமாறு வாசலில் இருந்த அலங்கார நிலைக்காண்டியின் மீது சாப்பாட்டு மேசையில் இருந்த சாஸ் பாட்டில் பறந்து வந்து எழுதிக் கொண்டிருந்தது.



அதை கைகட்டி பொறுமையாக பாத்திருந்த அஜித் "போறேன். அதுக்கு முன்னால இந்த லேடிய ஒரு வழி பண்ண வேணாமா?" குரூரமாக கூற



"என்ன பண்ண போறீங்க? அதான் பயமுறுத்தி, அந்தம்மா மயங்கியும் விழுந்திருச்சே" ராஜவேலு புரியாது சொல்ல



"அஜய்க்கு அம்மான்னா உயிர். அம்மாவை காணாம்னா பையன் துடிப்பானே! தேடுவானே! கதறுவானே! கொஞ்சமாச்சும் பதறட்டும். இவங்கள அடச்சீ வச்சி, அவனை மடக்க முடியுமான்னு யோசிக்கணும்" அஜித் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே ராஜவேலு அஜித்தை வாசல்புரம் திருப்ப, அந்த பெரிய கேட்டை தள்ளிக்கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தாள் காஜல்.


download (7).jpg


சமேலிக்கும் மதிக்கும் பகல் உணவு எடுத்துக்கொண்டு வருவதாக காஜல் கூறி இருக்க, அவள் வரும் வரை பசி பொறுக்காமல் தான் சமேலி பழங்களை சாப்பிட ஆரம்பித்திருந்தாள். இது தெரியாமல்தான் ராஜவேலு பயமுறுத்தி அவள் மயங்கி சரிய அஜித் அவளை கடத்த திட்டம் போட்டுக்கொண்டிருக்க, சாப்பாடு கூடையோடு வரும் காஜலையும் சேர்த்து கடத்த முடிவு செய்த அஜித் அஜய் அவன் தலையில் அடித்த இரும்பு தடி அங்கே இருப்பதைக் கண்டு அதை கையில் எடுத்தான்.

:love::love::love::love::love:
 
Last edited:

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர். காஜலுக்கு, அஜித்துக்கு திருமணம் நடத்தி வைச்சுட்டா அஜய் பாதிக்கப்படுவான் இல்லையா ரைட்டர்ஜிஜிஜிஜிஜிஜி
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர். காஜலுக்கு, அஜித்துக்கு திருமணம் நடத்தி வைச்சுட்டா அஜய் பாதிக்கப்படுவான் இல்லையா ரைட்டர்ஜிஜிஜிஜிஜிஜி
காஜலோட சொத்துக்காகத்தான் காதலிக்கிறதா நடிச்சிக்கிட்டு இருக்கான் சோ பெரிசா அஜய்க்கு ஏமாற்றம் இருக்காது. சேர்த்து வச்சிடலாம்.:)(y):love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top