அருமையான பதிவு சவீதா
.அன்னபூரணி துணையிருக்க தைரியமா,சுகப்பிரசவத்தில் பொறக்க வேண்டிய குழந்தை,இவன் பண்ண டார்ச்சர்ல,பனிக்குடம் உடைஞ்சு, பெண் துணை இல்லாம,யாருக்கு என்ன ஆகுமோ என பயத்தோட சிசேரியன் செஞ்சு குழந்தை பிறந்திருக்கு
அத புரிஞ்சுக்காம,உன்ன என்ன பண்ணேன்,நல்லாதான் பார்த்துக்கிட்டேன்னு சொல்றான்
.
அருள்ட்ட வம்பு பண்ண வருணை அடிச்சவன்,அர்ஜூன்ட்ட இவ்வளவு பொறுமையா பேசறது ஏன்னு தான் புரியலை
.இத்தனை வருசத்துல ஒன்னு ரெண்டு ப்ராஜெக்ட் போனது பிரச்சனை
இல்லை,ருத்ரனால் போறது தான் பிரச்சனையா.லூசா இவன்
.
பார்க்கற பொண்ணுங்கட்ட அருள் சாயலை தேடுனா பொண்ணுங்கள எப்படி பிடிக்கும்
. ஆருத்ரன் தொடந்து இந்த தொழிலில் தான் இருப்பான்,ருத்ரா இந்த ப்ராஜெக்டை விட்டு கொடுத்தது போல,இனி விட்டுக்கொடுக்க மாட்டான்,விடவும் மாட்டேன்னு அருள் தெளிவா சொல்லிட்டா
கடத்துனேன்னு சொல்லாதேன்னு சொன்னவன்,அருள பேச விட்டு ஆருத்ரன் வெளியே நிக்கறதை
பார்த்து அப்படித்தான் நினைக்கிறான்
.கொஞ்ச நாள் அருளை பார்த்த மஞ்சுமாவுக்கு குழந்தைய பார்க்க ஆசை இருக்க,அன்னபூரணிக்கு இருக்காதா
.
மகனோட குழந்தைய பார்க்க ஆசையா காத்திருப்பவர்,அருளை தாயாக பார்த்துக் கொண்டவர், குழந்தை பிறந்து மகன் மேல் உள்ள பொய்யான பழி போக காத்திருக்கும் அன்னபூரணி வரவை தள்ளி போடறது சரியில்லை
.