அருமையான பதிவு சவீதா
.அன்னபூரணி செய்யாததை அஞ்சனா அம்மா செஞ்சுட்டாங்க...மகள் மேல தான் தப்புன்னு தெரிஞ்சதும் அடிபிண்ணிட்டாங்க
.இத்தனை அடிவாங்கியும் நான் கல்யாணம் வேணாம்னு சொன்னேன்னு சொல்றாளே திமிர் பிடிச்சவ
.
அஞ்சனாவின் அம்மா மகள் மேல் தான் தப்புன்னு தெரிஞ்சதும்,இனி வீட்டுப்பக்கமே வராதே, நானும் இங்கே வரமாட்டேன்னு சொன்னவர்,அன்னபூரணி போட்ட நகையை வாங்கிட்டு போனவர் தன் மகள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு அன்னபூரணி கால்லேயே விழுந்துட்டார்
.
அஞ்சனா,ருத்ரன் மேல பொய்யா பழி போட்டது அவள் கணவன்,அம்மாவுக்கு தெரிஞ்சதுக்கே அஞ்சனா நிலமை ஆட்டம் கண்டுருச்சு
.ருத்ரன் மனைவி குழந்தையோட வந்து நின்னா ஊரே அவளை காறி துப்பபோகுது
.
அர்ஜூன் இதை செஞ்சிருக்க மாட்டான் என ஆருத்ரன் சொன்னதாக இளமாறனை சொல்ல சொன்னவன்,குடும்ப சூழ்நிலை காரணமாக தவறான வேலை என தெரிந்தும் செய்பவன் நிலையை புரிந்து கொண்டு,வேலையை விட்டு அனுப்பிட்டா இங்கே வரச்சொல்வது அருமை
.
இளமாறன் போன் நம்பர் வாங்கியவன்,அதில் போன் செய்து யார் பேசியது எங்கே இருந்து பேசறாங்கன்னு தெரிஞ்சுட்டே அர்ஜூன் இருக்கும் இடத்துக்கு வந்துட்டான்
.
மூனு எபியா ஆருத்ரன்,அருள் முன்னாடி வந்துட்டான்னு சொல்றீங்க,அருளோட பேசறதையோ, அர்ஜூன்ட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போறதையோ சொல்லலையே
.