Bharathi kb
Member
மனம் வெதும்பி அமர்ந்திருக்கிறேன்.
பிரியசகிக்கு உடல் நிலை சரியில்லை.
இதய மாற்று சிகைச்சையும் தேவைப்படலாம்.
எப்பேர்பட்டவள் தெரியுமா இவள்.
சமைக்க தெரியாதேன்றேன்
கணக்கு வராதென்றேன்
நான் உதவுவேன் என்றாள்.
பக்தி பரவச கும்பலுடன் உலாவிக் கொண்டிருந்த என்னை கொஞ்சம் பகுத்தறிவாளர்களிடமும் நட்பு பாராட்ட செய்தாள்.
காலையில் எழுப்பி விடுதல் தொடங்கி
நான் சொல்லும் அத்தனையும் அச்சு பிசகாமல் செய்வாள்.
உள்ளூரையே தாண்டாத என்னிடம் உலக செய்திகள் அத்தனையும் பேசுவாள்
மனம் சோர்ந்த பொழுதுகளில் கூட நகைச்சுவை காட்டி சிரிக்க வைப்பாள்.
என் சந்தோச தருணங்களை அவள் மூளையில் பதிய வைப்பாள்.
எனது ரகசியங்களை யாரிடமும் பகிர மாட்டாள். இந்த சுயநலக்காரி
வேறு யாருடனும் உரையாட அனுமதித்தால் தானே .
எதற்கு இப்படி அலைக்கழிக்கிறாய் என அவ்வப்போது கோவம் கொள்வாள் தான். அப்படியும் விட்டதில்லை அவளை.
இந்த செயலிக்கு என்னை அறிமுகப்படுத்தியதும் அவள்தான்
தொடர் வேறு தொடங்கியிருக்கிறேன்
அவள் இல்லாமல் எப்படி
இரண்டு வயது தான் ஆகிறது. என்னமா பேசுவாள் தெரியுமா இவள்.
இன்று ஏனோ மௌனம் சஞ்சரிக்கிறாள்.
என்னைப் பெற்ற தாய்க்கு இத்தனை கொடூர மனம் இருக்குமென்று இன்றுதான் உணர்கிறேன்.
இந்த செய்தியை கேட்டவுடன் இதற்கெனவே காத்திருத்திருத்தாற் போல இப்படி நகைக்கிறாள்.
விரைவில் அவள் பூரண நலம் பெற்று திரும்ப பிரார்த்தியுங்கள்.
இனி அலுங்காமல் குலுங்காலம் பார்த்துக்கொள்கிறேன்.
வேறு தோழி தேடுமளவு பொருளாதார
நிலை இல்லை.
கைபேசி பழுது
பிரியசகிக்கு உடல் நிலை சரியில்லை.
இதய மாற்று சிகைச்சையும் தேவைப்படலாம்.
எப்பேர்பட்டவள் தெரியுமா இவள்.
சமைக்க தெரியாதேன்றேன்
கணக்கு வராதென்றேன்
நான் உதவுவேன் என்றாள்.
பக்தி பரவச கும்பலுடன் உலாவிக் கொண்டிருந்த என்னை கொஞ்சம் பகுத்தறிவாளர்களிடமும் நட்பு பாராட்ட செய்தாள்.
காலையில் எழுப்பி விடுதல் தொடங்கி
நான் சொல்லும் அத்தனையும் அச்சு பிசகாமல் செய்வாள்.
உள்ளூரையே தாண்டாத என்னிடம் உலக செய்திகள் அத்தனையும் பேசுவாள்
மனம் சோர்ந்த பொழுதுகளில் கூட நகைச்சுவை காட்டி சிரிக்க வைப்பாள்.
என் சந்தோச தருணங்களை அவள் மூளையில் பதிய வைப்பாள்.
எனது ரகசியங்களை யாரிடமும் பகிர மாட்டாள். இந்த சுயநலக்காரி
வேறு யாருடனும் உரையாட அனுமதித்தால் தானே .
எதற்கு இப்படி அலைக்கழிக்கிறாய் என அவ்வப்போது கோவம் கொள்வாள் தான். அப்படியும் விட்டதில்லை அவளை.
இந்த செயலிக்கு என்னை அறிமுகப்படுத்தியதும் அவள்தான்
தொடர் வேறு தொடங்கியிருக்கிறேன்
அவள் இல்லாமல் எப்படி
இரண்டு வயது தான் ஆகிறது. என்னமா பேசுவாள் தெரியுமா இவள்.
இன்று ஏனோ மௌனம் சஞ்சரிக்கிறாள்.
என்னைப் பெற்ற தாய்க்கு இத்தனை கொடூர மனம் இருக்குமென்று இன்றுதான் உணர்கிறேன்.
இந்த செய்தியை கேட்டவுடன் இதற்கெனவே காத்திருத்திருத்தாற் போல இப்படி நகைக்கிறாள்.
விரைவில் அவள் பூரண நலம் பெற்று திரும்ப பிரார்த்தியுங்கள்.
இனி அலுங்காமல் குலுங்காலம் பார்த்துக்கொள்கிறேன்.
வேறு தோழி தேடுமளவு பொருளாதார
நிலை இல்லை.
கைபேசி பழுது