Joher
Well-Known Member
அனைவருக்கும் இனிய திரு கார்த்திகை தீப வாழ்த்துக்கள்.......
Marunthuvazh Malai (கீழே; எங்க ஊர் பக்கம்) is located near Kottaram about 7 km from Kanyakumari town on the Kanyakumari-Nagercoil highway. தீபத்திருவிழாவையொட்டி இன்று (http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=452662) கன்னியாகுமரி அருகே பொற்றையடி வைகுண்டபதியில் அமைந்துள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
எங்க ஊரு முழுதும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இன்றைய ஸ்பெஷல் எங்களுக்கு பனை ஓலை கொழுக்கட்டை தான்........ ரொம்ப tasty கொழுக்கட்டை.....
திருக் கார்த்திகை special பனை ஓலை கொழுக்கட்டை
4:1 ratio-வில்
பச்சரிசி மாவு (அரிசி ஊறவெச்சு mixie-யில் பவுடர் பண்ணிக்கலாம்)
வறுத்த சிறுபயறு உடைத்தது (உடைத்தது கடையில் கிடைக்கும் (1-வது படம்). அதை வாங்கி வறுத்தும் use பண்ணலாம்.......... But no சிறுபருப்பு......)
கருப்பட்டி/வெல்லம் பாகு (வெல்லம் கரைந்து நல்லா கொதித்தது) அவங்க அவங்க taste-க்கேற்ப
(பச்சை அரிசி மாவு என்பதால் தண்ணீர் அதிகம் ஏத்துக்காது. கொஞ்சமா தண்ணீர் போதும் பாகு காய்க்க.......)
துருவிய தேங்காய் தேவைக்கேற்ப
சுக்கு பொடி சிறிதளவு
பனை ஓலை/வாழை இலை
அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, சிறு பயறு, சுக்கு பொடி, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை போடவும். கருப்பட்டி/வெல்ல பாகு வடிகட்டி மாவுடன் சேர்த்து பிசையவும். மாவுக்கு தேவையான பாகு மட்டும் போதும் (mix ரொம்ப லூசா இருக்க கூடாது)
பனை ஓலை (2-வது படத்தில் இருப்பது போல)/வாழை இலையில் பிசைந்த மாவை சிறிதளவு அதன் நடுவில் நீளவாக்கில் வைத்து
(இட்லி பாத்திரத்தில் இட்லிக்கு ஊற்றுவதை விட தண்ணீர் அதிகமா ஊற்றனும்....... தண்ணீர் கொழுக்கட்டை மேல் வராமல் இருக்க மிச்சமான waste பனை ஓலை/வாழை இலை துண்டு அடித்தட்டு மேலே போட்டு அதன் மேல் கொழுக்கட்டையை ஒன்னுக்கொன்னு கொஞ்சம் இடம் விட்டு அடுக்கவும்.....)
நன்றாக ஆவி போன பின்பு எடுத்தால் சுவையான கொழுக்கட்டை ரெடி (4-வைத்து படம்)
மீதம் வந்தால் ஓலையை விட்டு எடுத்து முறம் இருந்தால் அதில் பரப்பி ஒரு மெல்லிய துணியால் மூடிவைத்து அடுத்த நாள் கூட சாப்பிடலாம்........
Marunthuvazh Malai (கீழே; எங்க ஊர் பக்கம்) is located near Kottaram about 7 km from Kanyakumari town on the Kanyakumari-Nagercoil highway. தீபத்திருவிழாவையொட்டி இன்று (http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=452662) கன்னியாகுமரி அருகே பொற்றையடி வைகுண்டபதியில் அமைந்துள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
எங்க ஊரு முழுதும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இன்றைய ஸ்பெஷல் எங்களுக்கு பனை ஓலை கொழுக்கட்டை தான்........ ரொம்ப tasty கொழுக்கட்டை.....
திருக் கார்த்திகை special பனை ஓலை கொழுக்கட்டை
4:1 ratio-வில்
பச்சரிசி மாவு (அரிசி ஊறவெச்சு mixie-யில் பவுடர் பண்ணிக்கலாம்)
வறுத்த சிறுபயறு உடைத்தது (உடைத்தது கடையில் கிடைக்கும் (1-வது படம்). அதை வாங்கி வறுத்தும் use பண்ணலாம்.......... But no சிறுபருப்பு......)
கருப்பட்டி/வெல்லம் பாகு (வெல்லம் கரைந்து நல்லா கொதித்தது) அவங்க அவங்க taste-க்கேற்ப
(பச்சை அரிசி மாவு என்பதால் தண்ணீர் அதிகம் ஏத்துக்காது. கொஞ்சமா தண்ணீர் போதும் பாகு காய்க்க.......)
துருவிய தேங்காய் தேவைக்கேற்ப
சுக்கு பொடி சிறிதளவு
பனை ஓலை/வாழை இலை
அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, சிறு பயறு, சுக்கு பொடி, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை போடவும். கருப்பட்டி/வெல்ல பாகு வடிகட்டி மாவுடன் சேர்த்து பிசையவும். மாவுக்கு தேவையான பாகு மட்டும் போதும் (mix ரொம்ப லூசா இருக்க கூடாது)
பனை ஓலை (2-வது படத்தில் இருப்பது போல)/வாழை இலையில் பிசைந்த மாவை சிறிதளவு அதன் நடுவில் நீளவாக்கில் வைத்து
- பனை ஓலை என்றால் இன்னொரு piece வைத்து 3-வது படத்தில் இருப்பது போல கட்டவும்.....
- வாழை இல்லை என்றால் ஒரு ஓரத்தில் வைத்து இன்னொரு பக்கத்தை வைத்து wrap பண்ணவும்.......
(இட்லி பாத்திரத்தில் இட்லிக்கு ஊற்றுவதை விட தண்ணீர் அதிகமா ஊற்றனும்....... தண்ணீர் கொழுக்கட்டை மேல் வராமல் இருக்க மிச்சமான waste பனை ஓலை/வாழை இலை துண்டு அடித்தட்டு மேலே போட்டு அதன் மேல் கொழுக்கட்டையை ஒன்னுக்கொன்னு கொஞ்சம் இடம் விட்டு அடுக்கவும்.....)
நன்றாக ஆவி போன பின்பு எடுத்தால் சுவையான கொழுக்கட்டை ரெடி (4-வைத்து படம்)
மீதம் வந்தால் ஓலையை விட்டு எடுத்து முறம் இருந்தால் அதில் பரப்பி ஒரு மெல்லிய துணியால் மூடிவைத்து அடுத்த நாள் கூட சாப்பிடலாம்........