@Arya @Tharav specially for both of you..sorry for being late.. had work
இந்த கதை பின்னாடி பெரிய கதையெல்லாம் இல்ல...
பட் ஐராவோட கேரக்டர் பின்னாடி இருக்க inspiration என்னோட senior ஒருத்தங்க...அவங்களோட கட்ஸ்...அந்த நேர்மை.....ஐராவைப் போல துணிச்சல்....நீங்க கூட அப்படி பெண்களைப் பார்த்திருக்கலாம்...பட் எனக்கு அது முதல் முறை..அவங்க ப்ரக்னன்சி முடிச்சு ஒரே வாரத்துல வொர்க் பண்ணினாங்க..அண்ட் ப்ரக்னண்ட் டைம்லயும் கடைசி வாரம் வரை வந்தாங்க...அது போல் என்னோட காலேஜ் டே ல என் மேம் செய்திருக்காங்க...பட் இவங்களோட அந்த ஆளுமை அதெல்லாம் சான்ஸே இல்ல..சிலரை பார்த்த நமக்கு தான ஒரு பயம்..ஒரு மரியாதை வரும்ல...அப்படி இவங்க....
எனக்கு ஜர்னலிசம்னா பிடிக்கும்...ஒரு நாயகி அப்படி ஜர்னலிஸ்டா ஆக்கிடுவோம்னு அவங்களை அப்படி ஆக்கிட்டேன்....பட் அவங்களை மனசுல வைச்சு எழுதல நான்...அவங்களை மீட் பண்ணினது கடந்த ஆறு மாசமாதான்..ஆனாலும் அவங்க எனக்குள்ள ஏற்படுத்தின தாக்கம் தான்..ஐரா போல..
இந்த கதையில எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம்
திருவையாறு... நான் போய் 12 வருசம் ஆனாலும் இன்னும் என் நினைவில் இருக்கும் இடம்...ஸோ ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்..காவிரில மீன் துள்ளி துள்ளி போனதெல்லாம் மனசுல இன்னும் இருக்கு..இத்தனைக்கும் 2 ஹவர்ஸ்க்குள்ள எங்க ஊர்லேர்ந்து போயிடலாம்..ஆனாலும் இத்தன வருசத்துல போகவே முடியல.....
கேண்டில் லைட் ப்ரோபோசல்ஸ் விட....எனக்கு என்னவோ காவிரி ஆத்து ப்ரோபோசல் மனதுக்கு நெருக்கமா போயிடுச்சு...
என் கதையில மிகவும் பிடித்த இடம்....என் கதையில் நாயகி நாயகன் காதல் ப்ரோபோஸல்லாம் ரொம்ப கம்மி....நான் தான் நிறைய அரெஞ்ச் மேரேஜ் செய்து வைச்சிடுவேனே
அதனால அதியன் ப்ரோபோசல் அதீதமாய் எனக்குப் பிடிக்கும்... அந்த இடம் பொருள் காதல்...அத்தனையும்..!!
ஆனாலும் இந்த கதை இவ்வளவு ஸ்பெஷலா மாத்தினது நீங்க எல்லாரும் தான் ப்ரண்ட்ஸ்....ரொம்ப ரொம்ப நன்றிகள்......