கற்பூர முல்லை Episode 15

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 15
அடுத்த நாள் காலை தமிழ் எப்பவும் போல இழந்து ஆபிஸிற்கு தயாராகி கொண்டிருந்தாள். பின் வழக்கம் போல கீழே வந்து காலையில் டிபனை சாப்பிட்டு பின் சமையல் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ஆபீசுக்கு கிளம்பி சென்றாள்.

அங்கே சென்றதும் தன் அன்றாட அலுவல்களை கவனித்து கொண்டிருந்தாள். பின் இன்டர்காம் வழியே ரிசப்ஷன் பெண் தங்களைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார் என கூறியதும் யாராக இருக்கும் என்ற யோசனையில் உள்ளே வர அனுமதி தந்தாள்.

அதைக் கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்த அந்த இளைஞனை பார்த்ததும் இவளுக்கு எங்கோ பார்த்தது போல் இருந்தது. இருந்தாலும் வந்தவனை உபசரித்து இருக்கையில் அமர சொன்னாள். அவனம் நன்றி சொல்லி இருக்கையில் அமர்ந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் . தன் பெயர் ராமச்சந்திரன் என்றும் பின்னர் அவன் தானும் ஒரு பிசினஸ்மேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தன்னுடைய பிசினஸை பற்றி விரிவாக கூறினான். அவளும் அதை கேள்விப்பட்டிருக்கிறாள் ஆனால் இன்று தான் இவனை முதன்முறையாக பார்க்கிறாள். பின்னர் அவள் ஓகே என்று சொல்லிவிட்டு ஏதாவது பிசினஸ் விஷயமாக வந்தீர்களா.... என்று கேட்டாள் அவன் அதை மறுத்துவிட்டு இல்லை பர்சனலாக தான் உங்களை பார்க்க வந்தேன் என்று கூறினான். சரி சொல்லுங்கள் என்று கூறினாள்.

பின்னர் அவன் காயூ மேடம் உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்கள். அதேபோல நானும் உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரே ஒரு முறை மட்டும் நேரில் பார்த்திருக்கிறேன் பார்த்ததுமே உங்களை பிடித்தது . இவ்வளவு நாள் இதை எப்படி சொல்வது என தெரியாமல் மனதுக்குள் வைத்திருந்தேன். பின் காயூ மேடம் ஐ பிஸ்னஸ் விஷயமாக சந்திக்க நேர்ந்த போது இது பற்றி அவர்களிடம் கூறினேன் அவர்களுக்கும் இதில் ஓர் அபிப்பிராயம் இருப்பதாக கூறினார்கள்.பின் எதற்கும் நேரில் பார்த்துவிட்டு வாருங்கள் என்று கூறி என்னை இங்கேஅனுப்பி வைத்தார்கள் என்று கூறினான்.
பின் அவன் தன் குடும்பத்தை பற்றி சொல்லலானான் தனக்கு கீழ் ஒரு தங்கை என்றும் அவளுக்கு திருமணம் செய்து வைத்தாயிற்று என்றும் தான் மட்டும் தான் திருமணத்திற்கு இருப்பதாக கூறினான் தனக்கு அம்மா அப்பாவும் சேர்ந்து பெண் தேடுவதாகவும் கூறினான் இருந்தாலும் தன்னுடைய விருப்பத்தை அவர்களிடம் அவன் இதுவரை சொன்னதில்லை என்றும் உங்களிடம் தெளிவு பெற்று பெண் சொல்லலாம் என்றும் இருப்பதாக கூறினான்.
சொன்னதோடு மட்டுமல்லாமல் தன் கையில் வைத்திருந்த ரோஜா பூவை எடுத்து ஐ லவ் யூ தமிழ் என்று அவள் முன் நீட்டினான் அந்த நேரம் பார்த்து அனுமதி பெறுவதற்காக அறை கதவை திறந்த அகிலனின் கண்களில் அவன் சொன்ன வார்த்தையும் அவன் பூவை வைத்திருக்கும் தோற்றமும் தெரியவே சற்று அதிர்ச்சியானான். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாரி என்று கூறிவிட்டு வெளியே காத்திருந்தான்.

தமிழுக்கும் இந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியவில்லை அவன் காதலை சொன்னதை விட அதை அகிலன் பார்த்து விட்டான் அவன் மனது நோகுமே என்று தமிழின் உள்மனது தவியாய் தவித்துக் கொண்டது.

இருந்தாலும் இப்போது நிலைமையை சமாளிக்க வேண்டுமே என்று அவனிடம் சாரி என்றாள். பின் அவன் இதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா அவசரம் ஒன்றும் இல்லை மெதுவாக யோசித்து சொல்லலாம் என்று கூறியதும் அவள் உடனே மறுத்து இல்லை தான் வேறு ஒருவரை விரும்புவதாக கூறினாள். இது காயூ விற்கு கூட இன்னும் தெரியாது என்றும் கூறினாள் .அவளிடம் தற்போது இதைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் தானே இதைப் பற்றி அவளிடம் நேரம் வரும்போது சொல்லலாம் என்று இருந்தேன் என்றும் கூறினாள். அவனும் சாரி என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

ஒருவாறு அவனை சமாளித்து அனுப்பினாள். இப்பொழுது அவளுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை அகிலனை எப்படி சமாளிப்பது என்றுதான் வந்தவனிடம் ஏதோ பொய் சொல்லி அனுப்பி விட்டாள் .ஆனால் அகிலனிடம் அப்படி பண்ண முடியாதே என்று நினைத்தாள்.

அவன் சென்றவுடன் அகிலன் உள்ளே நுழைந்தான். என்ன மேடம் கொஞ்சம் பிஸியாக இருப்பீர்கள் போலிருக்கிறது நான் வேறு தவறான நேரத்தில் வந்து விட்டேன் என்று கூறினான் ‌. அதற்கு அவள் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தாள். அவளின் மேஜையில் அவன் வைத்து சென்ற ரோஜா பூ இருந்தது. அது அவனை இன்னும் கோபமடைய வைத்தது. நேற்று அவள் பதில் சொல்லாததற்கு இதுதான் காரணம் என்று தவறாக நினைத்துக் கொண்டான். உங்கள் வசதிக்கு தகுந்தது போல தானே தாங்களும் இருப்பீர்கள் என்று கேட்டான்.
அதுவரை அவன் அமரவே இல்லை என்று அவளுக்கு அப்போதுதான் புரிந்தது அந்த அளவுக்கு வந்திருந்த இளைஞன் செய்த செயல் அவனை கோபமடைய வைத்திருந்தது. அதற்கு மேல் அவன் எதுவும் பேசாமல் சென்று விட்டான்.

தமிழிற்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதற்கெல்லாம் காரணமான காயூவின் மேல் கோபமாக வந்தது. இவளுக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்று நினைத்தாள். தான் இவளிடம் இப்போது திருமணம் பற்றி கேட்டோமா என்று கோபமாக வந்தது.


மலரும்....

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top