கற்பூர முல்லை Episode 14

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 14
அகிலனின் காலை பொழுது அழகாக புலர்ந்தது. பொழுது விடிந்ததும் அகிலனின் மனது முழுவதும் தமிழ் நிறைந்திருந்தாள். எப்படியாவது அவன் காதலை, அவளிடம் சொல்லி விட மனது துடித்தது. அதற்கு தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தான். இந்த நிலையில் இன்று போய் சொல்லி விடலாமா..... என்று மனது துடித்தது ஆனால், இன்னொரு புறம் மனது வேண்டாம் என்று கூறியது. சரி எதுவாக இருந்தாலும் இன்று தமிழை பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் நினைத்தது மட்டுமல்லாமல் அதோடு கிளம்பி தமிழின் ஆபிசுக்கு சென்றான்.

தமிழின் ஆபீஸ்க்கு சென்றவுடன் வழக்கம்போல் வரவேற்பறையில் விசாரித்துவிட்டு அவளின் அறைக்கு சென்றான். அன்று அவள் சேலையில் இருந்தாள்.... அந்த சேலை அவளுக்கு மிகவும் அழகு ஊட்டியது. அவன் கண்ணுக்கு எப்போது பார்த்தாலும் அவள் புதிதாகவே தெரிந்தாள்...

உள்ளே சென்றவனை அவள் அமர சொன்னாள்... வழக்கம் போல் நலம் விசாரித்து விட்டு என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்டாள்.
விஷயம் எதுவும் பெரிதாக இல்லை இன்று மாலை கொஞ்சம் என்னுடன் வெளியில் வர முடியுமா என்று கேட்டான்.
அதற்கு அவள் யோசித்து விட்டு ஏன் வெளியே ஏதாவது பொருள் வாங்க வேண்டுமா.... என்று கேட்டாள் .அவன் அதற்கு, இல்லை இது வேறு விஷயம் என்று கூறினான். அவன் கூறியதும் சரி ஏதாவது வேறு வேலையாக இருக்கும் என ஒப்புக்கொண்டாள்... விஷயத்தை அவளிடம் சொன்னதும் அவன் விடை பெற்று சென்று விட்டான் மாலையில் வருவதாக கூறி சென்றான்.

மாலை வந்ததும் அவளை அழைத்துச் செல்ல அவனே வந்தான். பின் அவள் வேலை முடிந்ததும் இருவரும் ஒன்றாக வெளியில் கிளம்பினார்கள். வண்டியை நேராக பீச்சுக்கு விட்டான். பிறகு இருவரும் மணலில் அமர்ந்தார்கள் . பின் வெகு நேரம் இருவரும் மௌனமாகவே அமர்ந்து கடலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பிறகு அவனே முதலில் ஆரம்பித்தான்.

தமிழ் உங்களிடம் ஒன்று கூற வேண்டும் ஆனால் அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என என தெரியவில்லை ஆனாலும் அதை கூறாமல் இருக்க முடியாது என்று கூறினான். அதற்கு அவள் இவ்வளவு பீடிகை எதற்கு நேராக விஷயத்துக்கு வர வேண்டியதுதானே என்று கூறினாள் . பிறகு அவன் ஒரு வழியாக அவன் வாய் திறந்து உங்களை மனதார காதலிக்கிறேன் என்று கூறினான் . அவள் அவன் சொன்னதை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தாள் . ஆனாலும் அதை அவ்வளவாக காட்டிக்கொள்ளாமல் இதை மனதில் வைத்துக் கொண்டுதான் இவ்வளவு நாள் என்னிடம் பழகினீர்களா என்று கேட்டாள் , அதற்கு அவன் காதலை மனதில் வைத்து தான் பழகினேன் ஆனாலும் அதில் கண்ணியம் தவறவில்லை என்று கூறினான். அவனின் இந்த பதிலுக்கு அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் சட்டென மௌனமானாள்.

அவளின் பதிலை அறிய அவள் கண்களை நோக்கினான் ஆனாலும் அவள் கண்கள் தரையை பார்த்தவாறு இருந்தது. என்ன தமிழ் நான் ஏதாவது தவறாக கேட்டு விட்டேனா என்று கூறினான் அதற்கு அவள் மறுத்து விட்டு இல்லை என கூறினாள்.

பின் அவள் சட்டென எழுந்தாள் .அவள் எழுந்ததும் அவனும் எழுந்தான். என்ன தமிழ் நான் கேட்டதுக்கு பதில் ஏதும் சொல்லவில்லையே என்று கேட்டான். தாங்கள் எதிர்பார்க்கும் பதிலை என்னால் தர முடியாது என்று கூறினாள் அவள் .ஆனாலும் வாய் தான் அப்படி சொன்னதே தவிர அவளின் அடி மனதில் அவனை நினைப்பு பாகாய் இனித்தது. ஆனால் அவள் அதை காட்டிக் கொள்ளவில்லை சரி நான் செல்கிறேன் என்று கூறி வேகமாக நடந்தவளை பின்தொடர்ந்தான்
சரி தமிழ் காதலில் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை இரவு வெகு நேரம் ஆகிவிட்டது வா நான் ட்ராப் செய்கிறேன் என கூறினாள் .ஆனால் அவள் மறுத்தால் பிறகு அவன் அதிகார தொனியில் கூப்பிடவே வேறு வழி இன்றி அவனுடன் பைக்கில் ஏறி அமர்ந்தாள். பைக்கை அவள் வீட்டின் முன்பு நிறுத்தினான். அவன் இறங்கி எதுவும் பேசாமல் சென்றாள்.

வீட்டிற்கு சென்றவுடன் சமையல் அம்மா செய்த சமையலையும் சாப்பிட மனம் இல்லாமல் படுக்கையில் விழுந்தாள் . காயூவிற்கு கூட போன் செய்யவில்லை ஆனாலும் இவளின் போன் அடித்தது எடுத்துப் பார்த்தால் காயூ...

போன் எடுத்ததும் சூழ்நிலையை மறந்து வழக்கம் போல் பேசினாள். பின் காயூ நாளை ஆபீஸிற்கு உன்னை பார்க்க ஒருவர் வருவார் என கூறினாள் அவள் இருந்த மனநிலையில் அது யார் என கேட்காமல் சரி என்று கூறிவிட்டு குட் நைட் சொல்லியவாறு இணைப்பை துண்டித்தாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top