என் உறவென வந்தவனே-2

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
I am really sorry for late...frds & SIS's.. Edho en uravena vandhavane epi2.. Padithuvittu comments kodukka marakkadhinga...ine correctly epi post panniren... Happy reading ....




அத்தியாயம் - 2

கண்கள் நீயாகி போனால்...
நான் காணும் பொருள்...
யாவும் நீயே...
நெஞ்சமே...
வழிந்தோடுதே...
புது சொந்தம்...
பிறக்கின்றதே...

ரவியும் பானுவும் ஓரே காரில் வந்ததால் ஜானும் தனுவும் ஒன்றாக சென்றனர்... காரின் முன் சீட்டில் ரவுயும் ஜானும் அமர... பின்சீட்டில் தனுவும் பானுவும் அமர்ந்திருந்தனர்... ஜான் கண்ணாடியின் வழியே தனுவை பார்க்க... ரவியும் பானுவை பார்க்க... இருவரும் மாறி மாறி கண்ணாடியை திருப்பிக்கொண்டிருக்க... தனு இவர்களின் செயலை கண்டு சிரித்தாலும் மனதில் "ரவி பானுவ சைட் அடிக்கிறாரு... இவன் யார பாக்குறான்... ம்ம்ம்.. ஒருவேல நம்மள சைட் அடிக்கிறானோ... சரி இப்போ கன்பார்ம் பன்னிடலாம்..." என்று அவளும் கண்ணாடியை பார்க்க... அதே நேரம் ஜானும் அவளை பார்க்க.. அவனின் கண்களை கண்டவள் முழுதாக ஒரு நிமிடம் இருவரும் பார்வையை அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்...

"ச்ச்ச... நான் என்ன... அவன இப்படி பார்க்கறேன்... முதல்ல அவனோட கண்ண பார்க்கறத அவாய்ட் பன்னனும்..." என்று நினைத்துக்கொண்டாள்... ஜான் "சீக்கிரமா.. உன்கிட்ட என் லவ்வ சொல்லிடுவேன் தனுமா..." என்று சந்தோஷம்பட்டுக்கொண்டான்...

குட்டி அரண்மனை போல இருந்த.. கல்யாண அலங்காரங்களுடன்க்கூடிய ஒரு வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினான் ரவி.. தனு வீட்டை பார்த்துவிட்டு "ஏய்... செம்ம சூப்பரா இருக்குடி..." என்று பானுவின் காதில் சொல்ல... "ம்ம்ம்.. எனக்கும் ரொம்ப பிடிச்சிடுச்சிடி.." என்று பானு சொல்ல... "ம்ம்ம்... அப்போ ரவிய பிடிக்கலயா..." என்று தனு விளையாட்டாக கேட்க... "ஏய்... அவர பிடிச்சதாலதான் எல்லாமே பிடிக்குது.." என்று சொன்னவளின் முகத்தில் செம்மை படர்ந்தது....

அனைவரும் உள்ளே செல்ல... ரவியின் அம்மா "வா.. ஜான் எப்படி இருக்க... நீயே இவ்ளோ லேட்டா வந்தா எப்படி.." என்று கேட்க.. அவர் காலில் விழுந்து வணங்கியவன் "சாரிமா..." என்று சொல்ல.. "சரிடா... ட்ராவல் பன்னினது கலைப்பா இருக்கும்... ரவி ரூம் கூட்டிட்டு போடா..." என்று சொன்னவர்... தனுவை பார்க்க.. "பானு... யாருமா இந்த பொண்ணு..." என்று கேட்க... "என் ப்ரெண்ட் அத்த.. உங்ககிட்ட சொல்லிருந்தேனே தனுன்னு..." என்று பானு சொல்ல... "ம்ம்ம்... வாம்மா... போய் ரெஸ்ட் எடு.." என்று சொல்லிவிட்டு சென்றார்...

அவர்களுடைய அறையை நோக்கி செல்ல... பானு "அண்ணா... தனு ரெண்டு பேருக்கும் காஃபி எடுத்துட்டு வரேன்... நீங்க ப்ரெஷாகுங்க.." என்று சொல்லிவிட்டு திரும்பியவளை "தங்கச்சி... உன் ப்ரெண்டுக்கு காஃபி வேணுமா... இல்ல பால் வேணுமான்னு கேட்டுட்டு போமா..." என்று தனுவை பார்த்து சிரித்துக்கொண்டே ஜான் சொல்ல... தனு அவனை கண்டு முறைக்க... பானுவுக்கு ஒன்னும் புரியவில்லை...
ரவிக்கு ஏனோ நண்பனின் மேல் சந்தேகம் வந்துவிட்டது... "அறைக்கு சென்று அந்த சந்தேகத்தை கேட்கலாம்... " என்று விட்டுவிட்டான்...

"ச்ச்ச.. இவன் முன்னாடி பால் வாங்கி குடிச்சது தப்பாப்போச்சி..." என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு ப்ரெஷ்ஷாகி வந்தவளிடம் "ஏய்.. எதுக்கு இப்படி மூஞ்ச தூக்கிவச்சிக்கிட்டு இருக்க.. இந்தா காஃபி குடி..." என்று பானு கப்பை கொடுக்க.. "அவ்ளோ டல்லாவா தெரியுது..." என்று கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டே தனு கேட்க.. "ம்ம்ம்... சரிடி.. காஃபி குடிச்சிட்டு... ரெஸ்ட் எடு... இவ்னிங் வெளிய போகலாம்... ஓகே..." என்று சொல்லிவிட்டு சென்றாள்...

ஜான் தனது அறையில் ப்ரெஷ்ஷாகி வந்து இருக்கையில் அமர... ரவி தன் இருகன்னங்களிலும் கை வைத்துக்கொண்டு அவனையே பார்க்க... "டேய்... என்னடா தங்கச்சிய சைட் அடிக்கறத விட்டுட்டு... என்ன சைட் அடிக்கிற..." என்று ஜான் கிண்டலாக கேட்க... "டேய்.. நீ எந்த பொண்ணுகிட்டயும் அவ்வளவா பேசகூடமாட்ட... ஆனா நானும் வந்ததுலருந்து பார்க்குறேன்... தனுவயே பார்க்குற.. அவகிட்ட வம்புபன்ற... என்னடா நடக்குது.." என்று ரவி கேட்க... ஜான் "கண்டுபுடிச்சிட்டியா மச்சான்... ஆமாடா.. ஐலவ் ஹர்..." என்று சொன்னவனை... ரவி கொலைவெறியோடு பார்த்து "எனக்கு தெரியாம எப்படா இது நடந்தது..." என்று கேட்க... "அது நடந்து ரெண்டு வருஷம் ஆகுதுடா..." என்று ஜான் சொல்ல... என்னது "ரெண்டு வருஷமா..." என்று வாயைபிளந்தான் ரவி... "ம்ம்ம்... ஆமாடா... நம்ப டூ இயர்ஸ்கு முன்னாடி ஊட்டி போனோம்ல..." என்று ஆரம்பித்து இன்று நடந்தவரை அனைத்தையும் சொன்னான்... "ம்ம்ம்... சீக்ரெட் லவ்... ஆறு வருஷமா கூட இருக்க என்கிட்டக்கூட சொல்ல தோணல.. சரிடா மச்சான்... வாழ்த்துக்கள்..." என்று சீரியஸாக ரவி பேச... ஜான் "டேய்... சாரிடா மச்சான்... அப்போ எனக்கு அவளோட எந்த டீடெய்ல்சும் தெரியாதுடா... நானே அவளப்பாப்பேன்னு நினைக்கல... அப்புறம் எப்படிடா உன்கிட்ட சொல்லமுடியும்... ஆனாலும் மச்சான் நீ ரொம்ப புத்திசாலிடா... வந்தவுடனே எப்படிடா கண்டுபுடிச்ச..." என்று கேட்க... "ம்ம்ம்.. அதான் கார்ல நடந்த லுக்க பார்த்தேனே... சரிடா.. ரெஸ்ட் எடு இவ்னிங் வெளிய போகலாம்.. ஓகே..." என்று சொல்லிவிட்டு சென்றான்...

ரவி சென்றதும்... ஜான் தன் தந்தைக்கு போன் செய்தான்... தன் மனைவி சகுந்தலாமேரியுடன் சமயலில் ஈடுபட்டுருந்த ராஜ்... போன் ஒலிக்கவும் தன் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துகொண்டே போனை அட்டண்ட் செய்தார்... "அப்பா... உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசனும்... அம்மா பக்கத்துல இருந்தா ரூம் போய்.. என்கிட்ட பேசுங்க..." என்று ஜான் சொல்ல... "இருடா... ரூம் போய் பேசறேன்..." என்று ஹஸ்கி வாய்சில் பேசிவிட்டு ரூம் சென்று பேச... "என்னடா... ஊருக்கு போய்ட்டு ஒரு கால்கூட பன்னல... உங்கம்மா என்கிட்ட புலம்பிதள்ளிட்டாட... முதல்ல அவளுக்கு பேசுடா...ஹான்.. ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னியே என்னடா..." என்று அவர் கேட்க... "அதுவந்துப்பா... என்னோட லவ்வர நான் மீட் பன்னிட்டேன்... நீங்க சொன்னீங்கள்ள உன்னுடைய உண்மையான காதல் அவள உன்கிட்ட காமிக்கும்னு... அதுபோலவே நடந்துடுச்சிப்பா..." என்று ஜான் சொல்ல... "ஓஓ... ரொம்ப சந்தோஷம்டா... என் மருமக எப்படி இருக்கா.. " என்று அவர் சந்தோஷத்துடன் கேட்க... "ம்ம்ம்.. நல்லா இருக்கா.. பட் நான் இன்னும் என்னோட லவ்வ சொல்லலப்பா..." என்று ஜான் சொல்ல... "ஜான்... எதவேனாலும் தள்ளிப்போடு.. லவ்வ சொல்றத மட்டும் தள்ளிப்போடாதடா... சீக்கிரம் சொல்லிடு... ம்ம்ம்.. அப்புறம் மறக்காம உங்கம்மாவுக்கு கால்பன்னி பேசுடா..." என்று சொல்லிவிட்டு மீண்டும் சமயல்கட்டுக்கு சென்றார்...

ஜானின் ரோல் மாடல் அவனின் அப்பா ராஜ் தான்.. இவனை பற்றிய எல்லாம் அவருக்கு தெரியும்... நல்ல அப்பா,நல்ல நண்பன்,வெல்விஷர் எல்லாமே... அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்... பட் ரொம்ப நல்லவங்க, செல்லதங்கை சரோ.. ஆறுமாதத்திற்கு முன்தான் கல்யாணம் நடந்தது...

"என்னங்க... யார் போன்ல..." என்று சகுந்தலா கேட்க... "ம்ம்ம்... உன் பையன்தான்... நல்லபடியா ஊருக்கு போய்ட்டானாம்... உங்..." என்று சொல்லவந்தவரை சகுந்தலாவின் போன் வந்து தடுத்தது... அட்டண்ட் செய்தவர்... "டேய்... எவ்ளோ நேரம்டா... ஒரு போன் பன்னிப்பேசக்கூட நேரம் இல்லயா உனக்கு..." என்று அவர் பொரிய.. "அம்மா.. சாரிம்மா... அதான் இப்ப போன் பன்னிட்டேன்ல..." என்று எதையோ எதையோ சொல்லி சமாளித்து போனை வைத்தவன்... நிம்மதியாக தூங்கினான்...

தனுவால் தூங்கமுடியவில்லை... அவள் சிந்தனை முழுவதும் ஜானை பற்றியே இருந்தது... "அய்யோ.. இவன் என்ன நிம்மதியா தூங்க விடமாட்டான்போல..." என்று நினைத்துக்கொண்டே எழுந்து ஜன்னலின் திரைசீலையை விலக்கியவள்... அங்கு தெரிந்த வயல்வெளிகளை கண்டு ரசித்துக்கொண்டிருந்தாள்... சிறிது நேரத்தில் தூக்கம் வர சென்று படுக்கையில் விழுந்தாள்...

மதிய உணவு முடிந்து... மாலை ஐந்து மணியளவில் நால்வரும் அருகில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என முடிவெடுத்தனர்... அனைவரும் கிளம்பி வர... ஜானும் ரவியும் காரின் அருகில் நின்று பேசிக்கொண்டிருக்க.. தனு அழகான பிங் நிற சில்க்காட்டன் சாரியில் வரவும்... பேசிக்கொண்டிருந்த ஜான் அன்றுபோலவே இன்றும் மெய்மறந்து நின்றான்... "டேய்... சிஸ்டர் வண்டில ஏறி ரொம்ப நேரமாச்சு... இப்ப நீ வரப்போறியா இல்லயா... இங்க இப்படி சிலையாட்டம் நின்னுட்டுருந்த.. கோவில் கட்டி கும்பிட ஆரம்பிச்சிடுவாங்க பாத்துக்க..." என்று ரவி சொல்ல... "ம்ம்ம்... சாரிடா... வா போலாம்..." என்று தலையை கோதிக்கொண்டே சென்று முன் சீட்டில் அமர்ந்தான்... ரவி ஜானின் காதில் "மச்சான்... இன்னும் ரெண்டுநாள்ல என்கல்யாணம்... இன்னைக்கு மட்டும்தாண்டா...உன் தங்கச்சிய பார்க்க முடியும்... இதோட தாலிகட்ற அப்பதான் கண்ல காமிப்பாங்க..சோ.. கண்ணாடிய நானே யூஸ் பன்னிக்கிறேன்... கொஞ்சம் அட்ஜஸ் பன்னிக்கோடா..." என்று கிசுகிசுக்க... "ம்ம்ம்... சரிடா..." என்று ஜானும் ஒத்துக்கொண்டான்...

தனு வரும்போதே ஜானின் பார்வையை கண்டுகொண்டாள்... ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் வண்டியில் ஏறிவிட்டாள்... இப்போது கண்ணாடியை பார்த்தவள் அவன் பார்க்காதது... நிம்மதியாக இருந்தாலும்... ஏதோ ஒரு வகையில் ஏமாற்றமாக உணர்ந்தாள்...

கோவில் வந்ததும் இறங்கியவளின் முகத்தை கண்ட ஜான் "என்னாச்சி இவளுக்கு... வரும்போது நல்லா ஸ்மைலியோட வந்தா... இப்போ கொஞ்சம் டல்லா இருக்காளே..." என்று நினைத்துக்கொண்டே அவளை பார்க்க... எதர்ச்சையாக நிமிர்ந்த தனு அவனை பார்க்க... "என்ன.." என்று ஜான் இருபுருவங்களையும் உயர்த்தி கேட்க... ஒன்றும் சொல்லாமல் அவள்பாட்டிற்கு கோவிலுக்குள் பானுவுடன் சென்றாள்... காரை பார்க் பன்னிவிட்டு வந்த ரவி "டேய்.. ஏன் இங்கயே நிக்கற...வா போலாம்..." என்று சொல்ல... "உனக்காகதாண்டா வெயிட் பன்னேன்...போலாம் வா..." என்று சொல்ல இருவரும் கோவிலின் உள்ளே நுழைந்தனர்...

- தொடரும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top