என்னை தீண்டிவிட்டாய் 7

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
தீண்டல் 7

யாரென்று
எண்ணி
தஞ்சமடைந்தாய்
என்னை....

ஒருவாரம் கடந்த நிலையில் ஞாயிறன்று காலை ஷாகரின் அத்தைகள் பெண்கள் ஷாகரின் மாளிகைக்கு படையெடுத்தனர்.... மாதம் ஒரு ஞாயிறன்று இந்த படையெடுப்பு நடைபெறுவது வாடிக்கையே..... அன்று முழுவதும் அந்த மாளிகையில் ஒரே ஆர்பாட்டமாகத்தான் இருக்கும்....
காலையிலேயே ஆஷிகா,ஆத்விகா, கேஷிகா, ரித்திகா,க்ருத்திகா ஐவரும் வந்துவிட அவர்களை என்றும் போல் வசுமதி கவனிக்க அவர்களோ எப்போதும் போல் தங்களின் அத்தானின் அறைக்கு படையெடுத்தனர்....
அங்கு சென்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது...
ஷாகரின் அறைக்கதவை தட்டிய போது அது தானாக திறந்துகொள்ள உள்ளே எட்டி பார்த்த ஐவரும் வியந்துநின்றனர்...
“கேஷி நாம சரியான அட்ரசுக்கு தானே வந்திருக்கோம்..” என்று ஆத்விகா கேட்க ஆஷிகா
“உனக்கு ஏன் என்றைக்கும் இல்லாமல் இன்னைக்கு இப்படியொரு சந்தேகம்??” என்று கேட்க ரித்திகாவோ
“எனக்கும் அதே டவுட் தான்பா... நாம ஷாகர் அத்தான் வீட்டுக்கு தான் வந்திருக்கோமா??? இல்லை லேட்டா வந்துட்டோமா??” மேலுமொரு கேள்வியை எழுப்ப அதில் கடுப்பான ஆத்விகா
“எதுக்குடி இப்படி லூசுத்தனமா கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?? நாம ஷாகர் அத்தான் வீட்டுல தான் இருக்கோம்.. வழமையை விட இன்றைக்கு கொஞ்சம் ஏர்லியா வந்துட்டோம்.. அதுக்கு என்னடி இப்போ...??”
“இது ஒரு டியூப் லைட்டு.... லேட்டா தான் பத்தும்... ஏன்டி எப்பவும் அத்தான் இந்த நேரத்துல சயனநிலையில தானே இருப்பாரு.. இன்னைக்கு என்ன புதுசா அதுவும் இவ்வளவு சீக்கிரம் எழுந்து வெளிய போயிட்டாரு.... என்னவா இருக்கும்??”என்று கேஷிகா யோசனையில் இறங்க
“ஏதாவது அவசர வேலையா இருக்கும்.. அதான் போயிருப்பாரு.. இதுல என்னடி யோசனை வேண்டியிருக்கு??” என்று அறிவுபூர்வமாய் பதிலளித்த ஆத்விகாவை மற்ற நால்வரும் முறைத்தனர்...
அவர்கள் அவ்வாறு முறைப்பதற்கு காரணமும் இருந்தது..
இவ்வாறு இவர்கள் ஒன்றுகூடல் நாளை முடிவு செய்யும் போது ஷாகர் வீட்டில் இருப்பதை அவனிடம் உறுதி செய்துகொள்வர்.. இதுநாள் வரை ஒன்றுகூடல் நாளில் அவர் ஐவரும் வந்து தான் அவனை துயிலெழுப்புவர்... இன்றோ ஷாகர் அறையில் இல்லாது இருந்ததே அவர்களது யோசனைக்கு காரணம்...
க்ருத்திகா “ இப்படி இங்க நின்று யோசிக்கா அத்தைகிட்டயே கேட்போம்....” என்று யோசனை சொல்ல அனைவரும் மாடியிலிருந்து இறங்க தயாரான சமயத்தில் ஆஷிகா
“ஹேய் வெயிட்.. அங்க பாருங்க...” என்று அந்த தளத்தின் இறுதியிலிருந்த ஒரு அறையை காட்ட அனைவரும் அங்க பார்க்க அந்த அறையின் வாசலில் சுற்றில் சாய்ந்தபடி உள்ளே எதையோ பார்த்தபடி நின்றிருந்தான் ஷாகர்...
ஐவரும் இவன் அங்கே என்ன செய்கிறான் என்று அறிய முயல சத்தமின்றி பூனை நடை நடந்து அறை வாசலிற்கு வர ஷாகரோ அறைக்குள் சென்றான்.. இவர்களும் பின்னாலே சென்று பார்க்க அங்கே கட்டிலில் குழந்தையாய் தலையணையை கட்டியபடி உறங்கிக்கொண்டிருந்த ஆதிராவின் மீது பெட்ஷூட்டினை இழுத்து போர்த்திவிட்டவன் எச்சில் படாதவகையில் அவள் முன்னெற்றியில் இதழொற்றிவிட்ட கட்டிலருகே முழந்தாளிட்டவன் அவளை கண்டு ரசித்தபடி அவள் கேசம் கோதிவிட இங்கு ஐவருமே வாயை பிளந்தபடி பேச்சற்று நின்றனர்.... அவர்கள் ஐவரும் கனவு காணவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தம்மை கிள்ளிப்பார்த்துக்கொள்ள அது தந்த வலியில் காண்பது அனைத்தும் உண்மை என்று ஊர்ஜிதப்படுத்தியவர்கள் அங்கேயே செய்வதறியாது நின்றனர்.. ஒருகட்டத்தில் சூழ்நிலை உணர்ந்த ஆஷிகா ஷாகர் தங்களை பார்ப்பதற்கு முன் அங்கிருந்து அகலவேண்டுமென்று எண்ணி மற்றைய நால்வரையும் இழுத்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்தாள்...
அவளது இழுப்புக்கேற்று வந்தவர்களின் மனதில் ஆயிரம் கேள்விகள்... யாரிந்த பெண்?? எதற்காக இங்கு தங்கியிருக்கிறாள்..?? அத்தானுக்கும் அவளுக்குமான உறவு என்ன?? அத்தான் எதனால் இப்படி நடந்து கொண்டார்..?? என்று பல கேள்விகள் படையெடுக்க பதில் தெரியாது ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொள்ள எல்லோரும் அதே குழப்பம் என்று புரிந்தது..
“யாருடி அவங்க?? எதுக்கு நம்ம மாமா வீட்டுல தங்கியிருக்காங்க?? அத்தான் கூட இவங்க இங்க தங்கியிருக்கதை பத்தி எதுவும் சொல்லலையே....” என்று ஆத்விகா தொடங்க க்ருத்திகா
“ஆமாபா... நேத்து பேசும் போது கூட அத்தான் எதுவும் சொல்லலையே... “
“அதுமட்டுமா இன்னும் என்னென்னமோ நடக்குது போலவே....??” என்று கேஷிகா கூற
“ஐயோ பதில் தெரியலைனா மண்டை வெடிச்சுரும் போலயிருக்கே... வாங்கடி அத்தான் கிட்டடேயே கேட்டுடுவோம்..” என்று ஆஷிகா கிளம்ப அவளை தடுத்த ரித்திகா
“என்னனு கேட்ப அத்தான் நீங்க கிஸ் பண்ணீங்களே அந்த பொண்ணு யாருனு கேட்பியா?? யார்டி இவ விவரம் புரியாதவ..... கொஞ்சம் பொறுமையா இரு.. முதல்ல அவங்க யாருனு அத்தைகிட்ட கேட்போம்... பிறகு அத்தானுக்கும் அவங்களுக்கும் என்ன ரிலேஷன்ஷிப்னு தெரிஞ்சிப்போம்.. எனக்கு என்ன தோனுதுனா அத்தானுக்கு அந்த பொண்ணு மேல ஒரு இது இருக்கு போல... ஆனா அது உண்மைக்குமே இருக்கா.. எந்த அளவுக்கு இருக்குனு கண்டுபிடிக்கனும்... அப்படியிருந்தா நம்மகிட்ட அதை சொல்லாததுக்கு பனிஸ்மண்ட் கொடுக்கனும்..” என்று கூற க்ருத்திகாவோ
“இவ என்ன ஏதோ மர்மகொலை கேசை கண்டுபிடிக்க போற சி.பி.ஐ டீம் ஹெட் மாதிரி பேசுறா?? இந்த சப்ப மேட்டருக்கு இவ்வளவு சீன் தேவையில்லடி...” என்று சலித்துக்கொள்ள ரித்திக்காவே
“என் உடன்பிறப்பே இது சப்ப மேட்டாரா உனக்கு?? இது அத்தானோட லவ் மேட்டரு.. அது நமக்கு ரொம்ப முக்கியமான மேட்டரு.. நீ என்ன சப்ப மேட்டருனு சொல்லுற??” என்று கூற ஆத்விகாவே
“இப்போ இந்த விவாதம் ரொம்ப முக்கியம்.. வாங்கடி நடந்தது நடப்பதை நடக்கப்போவதை கண்டுபிடிப்போம்... அது தான் இப்போ ரொம்ப முக்கியம்..” என்று கூற அதை ஆமோதித்த மற்றைய நால்வரும் வீட்டினுள் சென்றனர்..
கிச்சனில் சமையலை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த வசுமதியிடம் வந்த ஐவரும்
“அத்தை பிரேக் பாஸ்டுக்கு என்ன ஸ்பெஷல்??” என்று கேட்க வசுமதி அவர்கள் ஐவருக்கும் பிடித்தபடி ஒவ்வொரு ஐட்டத்தையும் கூறினார்.. வழமைபோல் தம் அத்தையை கட்டிக்கொண்டனர் அந்த ஐவரும்.. அப்போது ஆத்விகா
“அத்தை நம்ம வீட்டுக்கு கெஸ்ட் யாராவது வந்திருக்காங்களா??”என்று விசாரிக்க ஆதிராவின் உடல்நிலை சரியில்லாததால் அவளை இங்கு தங்க வைத்திருப்பதை கூறினார்....
“ஷாகர் எழுந்துட்டானா???”
“ஆமா அத்தை நாங்க போனப்போ அத்தான் ரூம்ல இருக்கல... சும்மா விசிட்டஸ் ரூமுக்கு போகலாம்னு எட்டி பார்க்கும் போது தான் ஆதிரா இருந்ததை பார்த்தோம்... அதான் யாருனு கேட்டோம்...”
“சரிமா... இந்தாங்க காபியை குடிங்க...” என்று ஐவருக்கும் ட்ரேயில் இருந்த தேநீர் கோப்பையை நீட்ட அதனை எடுத்து குடித்த ஐவரும் நடுச்சாலைக்கு வந்தனர்... அப்போது ஷாகர் கீழே வர
“ஹே வாண்டுகளா எப்போ வந்தீங்க???”
“நாங்க வந்து ரொம்ப நேரமாச்சு... நீங்க எப்போ எழும்புனீங்க????” என்று க்ருத்திகா கேட்க...
“இப்போ தான் மா... “
“இல்லையே... நாங்க வந்து பார்த்தப்போ நீங்க ரூம்ல இருக்கலையே...” என்று கேஷி வினவ
“அது.. அது வாஷ் ரூம்ல இருந்திருப்பேன்...”
“இல்லையே அத்தான்.. வாஸ்ரூம் டோர் லாக் ஆகியிருக்கலையே...” என்று ஆஷிகா கேட்க அப்போது அங்கு வந்தார் பிரகஸ்பதி... ஐவரும் அவரைக்கண்டதும் ஒரு சேர காலை வணக்கத்தை தெரிவிக்க அதை ஏற்றுக்கொண்டவர் அவர்களின் நலம் விசாரித்தார்...
ஷாகரும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எழுந்து சென்று தன் அன்னையிடம் தேநீர் கேட்டு பருகியவன் தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.....
பிரகஸ்பதி எங்கேயோ வெளியே செல்லவிருப்பதாய் கூறி விடைபெற ஐவரும் தம் அத்தான் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினர்....
“இந்த அத்தான் நமக்கு தெரியாம என்னமோ திருட்டுதனம் பண்ணுறாரு....”
“ஆமா க்ருத்தி.... இவரை என்ன பண்ணலாம்???”என்று ஆஷிகா கேட்க
“இன்னைக்கு கெட்டுகெதர்ட தீம் அத்தானின் மர்மக் காதல்... இன்னைக்கு அத்தானே அவரோட லவ் மேட்டரை நம்மகிட்ட ஓபன் பண்ணனும்... அது தான் இன்னைக்கான டெஸ்டினேஷன்....” ரித்திகா கூற
“அது சரிபா.... ஆனா இது வண் சைடா டபுள் சைடானு தெரியலையே???” ஆத்விகா கேட்க ஆஷிகாவோ
“வண் சைட்னா டபுள் சைட்டா மாத்திடலாம்... டபுள் சைட்னா இன்னைக்கு புல்லா வச்சி ஓட்டிடலாம்...” என்று சாதாரணமாக கூற மற்ற நால்வரும் அதை ஒப்புக்கொண்டனர்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top