என்னில் – 13
தருண் தனது குடும்பம், தொழில் மற்றும் அவனின் அம்மா சொன்னதற்காக வந்தது முதல் பின் தேவியை காதலிக்க தொடங்கியது வரை அனைத்தையும் கூறினான்
அனிதா “அவ்ளோ பெரிய கம்பனிய விட்டுவிட்டு எங்க தேவிக்காக வந்திருக்கீங்களா”
தருண் “எங்க அம்மா சொல்லுக்கு கட்டுப்பட்டு தான் முதலில் வந்தேன் இங்கு வந்து வானதியை பார்த்து அவளிடம் பழகியதில் எனக்கு தேவியை ரொம்ப பிடித்திருக்கு. நான் அவளை மனதார விரும்புகிறேன்”
அனிதா “ஆனா தருண் நீங்க தேவியை திருமணத்திற்கு ஒத்துகொள்ள வைப்பது அவ்வளவு சுலபம் இல்லை, திருமணத்திற்கு என்ன அவளுக்கு உங்களை பிடித்து இருந்தாலும் அவள் சொல்ல மாட்டாள், உங்களை பிடித்துள்ளது என ஒப்புகொள்ளவும் மாட்டாள். அவளுடைய வாழ்க்கையில் அவ நிறைய துன்பங்களை அனுபவித்து இருக்கா. திருமணத்தை பற்றி பேச்சு எடுத்தாலே கோபம் வந்திடும்”
தருண் “அது எதனால் என்று நான் தெரிந்து கொள்ளலாமா”
அனிதா “அதை நான் சொல்வதை விட தேவியே உங்ககிட்ட சொல்கிற மாதிரி நம்பிக்கை அவளுக்கு கோடுங்க.”
தருண் “ஏன் சொல்ல மாட்டேன்றிங்க, வானதி ஏன் அவங்க அம்மா,அப்பா கூட இல்லாமல் தனியா பாட்டி கூட இருக்காங்க”
அனிதா “இதுக்கான பதிலையும் தேவியே சொல்வாள் அதுக்கு நீங்க அவ மனதை வெல்லனும், உங்கமேல் அவளுக்கு நம்பிக்கை வரணும் அவளை விட்டு நீங்க எந்த காரணம்கொண்டும் பிரிந்து போகமாட்டிங்க என்று அவள் நம்பனும் அப்பொழுது அவளே சொல்வாள்
ஆனால் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்.எனக்கு தேவியுடைய வாழ்க்கை நல்லபடியாக அமைந்தால் போதும்.” எனக்கு ஒரு வாக்கு தருவிங்களா தருண்
தருண் “என்ன வாக்கு”
அனிதா “எந்த சுழ்நிலையலையும் தேவிக்கு துணையாக இருப்பேன் என்று”
தருண் “கண்டிப்பா அவளுக்கு துணையாக இருப்பேன்”
தேவியும், தருணும் பேங்க் regional ஆபீஸ் டெண்டர் அறிவிப்பிற்கு சென்றனர் இந்த முறையும் தேவிக்கே டெண்டர் கிடைக்க அருண் மிகவும் டென்சன் ஆனான்
அதோடு தேவியை பார்த்து தகாத வார்த்தைகளை பேசினான் இந்த முறை தேவியை விட தருணிற்கு கோபம் வந்துவிட்டது அவனை அடிக்க தருண் சென்றே விட்டான். தேவி அவனை கட்டுபடுத்தி அந்த இடத்தை விட்டு அழைத்து சென்று காரில் அமர்ந்து காரை இயக்கினாள்
ஏன் வானதி உனக்கு அவன் மேல் கோபம் வரவில்லையா. இதில் என்னையும் எதுவும் செய்ய விடாமல் அழைத்து வந்துவிட்டாய். நீ மட்டும் ஒதுக்கி இருந்தால் அவனுடைய வாயை அங்கேயே உடைத்திருப்பேன் என்ன தைரியம் இப்படி பேச அவனை என்று பல்லை கடித்து கோவத்தை கட்டுபடுத்தினான்.
தேவி “எனக்கு அவனை கொள்கிற அளவு கோபம் இருக்கு ஆனால் நான் கோவபட்டு பேசியோ இல்லை அவனை எதாவது செய்தால் அவன் பேசியது உண்மை என்று ஆகிவிடாதா”
தருண் “லூசடி நீ. என்ன பேசினாலும் எதுவும் பேசாம வந்திடுவியா. ஒன்னும் பேசாமல் வந்தாலும் அவன் சொல்வதை கேட்ட நாலு பேர் உண்மை இருக்கும் போல அதனால் பேசாமல் போறாங்க என்று சொல்வாங்க.
அவன் கேவலமாக பேசுவானம் எந்த அம்மா அதை கேட்டு ஏதும் செய்யாமல் வந்திடுவாங்கலாம்.நான் கேட்கிறேன் என்றாலும் விடாமல் அழைத்து வந்துவிட்டு கேட்டால் உண்மை என்று ஆகிவிடாதா என கேள்வி வேற.
ஏண்டி எல்லாமே நன்றாக தானே manage செய்கிறாய் இவனை உன்னால் அடக்க முடியாது. முடியாது என்று சொல்லிடதே செய்யவில்லை என சொல்லு என அவன் தேவியை திட்டிகொண்டிருந்தான்”
தேவி “இதற்கு என்ன பதில் கொடுப்பது என தெரியாமல் இவன் சொல்வது சரிதானே என எதுவும் பேச முடியாமல் அமைதியானாள்”
சிறிது நேரம் கழித்தே தேவி உணர்ந்தாள் தருண் தன்னை ஒருமையில் பேசியதையும் தன்னை வானதி என்று அழைத்ததையும். அவன் புறம் திருப்பி பார்க்க அவனோ ரோட்டை பார்த்து கொண்டிருந்தான். அதிலே அவளுக்கு தெரிந்தது தன்னை அழைத்த முறையை அவன் உணரவில்லை என்பது
தேவிக்கு இப்பொழுதெல்லாம் தருண் தன்னிடம் அதிக உரிமை எடுத்து கொள்வது போல் தோன்ற ஆரம்பித்திருந்தது
அது ஒருபுறம் பிடிக்கவும் செய்தது அவளை இது வரை யாரும் வானதி என்று அழைத்தது இல்லை. அவன் உரிமை எடுத்து கொள்வதும் பிடித்தது. தேவியிடம் இதுவரை யாரும் உரிமையாக கேள்வி கேட்டதும் இல்லை அதற்காக சண்டை இட்டதும் இல்லை அவளின் பாட்டி,தாத்தா கூட பாசத்தை காட்டுவார்களே தவிர உரிமையாக கேள்வி கேட்டது இல்லை
எனவே அவன் உரிமை எடுத்துகொண்டது அவளுள் ஒருவித உணர்வை கொடுத்தது. அவனின் வானதி என்னும் அழைப்பே மனதை வருடுவது போல் உணர்ந்தாள்.இருந்தும் அவனை இனி இதுபோல் உரிமை எடுத்து கொள்ள விடகூடாது ஒருமுறை பட்டதே போதும் என அவளின் அறிவு ௯றியது.
தேவி இதை நினைத்து கொண்டிருக்க தருணோ இன்னும் கோவத்தில் இருந்தான். அவனின் மனதில் எப்படி அவன் என்னோட வானதியை அப்படி பேசுவான். தன்னிடம் மாட்டும்போது அவனை ஒரு வழியாக்கணும் என்று எண்ணினான்
அன்று உணவு இடைவேளையின் போது அனிதா தருணை பார்க்க வந்தாள். வந்தவள் தருணிடம் என்ன ஆனது தருண் கலையில் இருந்து மூட்அவுட்டா இருக்க. எப்பவும் டெண்டர்க்கு சென்று வந்தால் தேவிதான் மூட்அவுட்டா இருப்பா இன்னைக்கு நீ அப்படி இருக்க தேவி நல்ல சுறுசுறுப்பா இருக்கா
தருண் “காலையில் நடந்ததை கூறினான்”
அனிதா “அவன் போனமுறையும் டெண்டர் கிடைக்கவில்லை என்று அப்படித்தான் பேசினான். சரி அதை விடு நீ தேவிகிட்ட உன்னோட காதலை சொல்லிவிட்டாயா”
தருண் “எங்க அனிதா நெருங்கவே முடியவில்லை ஆனா நான் அவளை பார்கிறது தெரிகிறது அவளுக்கு நான் அவளை பார்த்து கொண்டிருந்தால் அப்போது மட்டும் ஏதாவது வேலை குடுத்து வெளியே அனுப்பிடறா”
அனிதா “பாட்டி இடம் உங்களை பற்றி சொன்னேன் அவங்க உங்களை பார்க்க வேண்டும் சொன்னாங்க”
சரி அனிதா எப்ப வரணும் கேட்டு சொல்லுங்க வருகிறேன்
நாட்கள் கடந்த நிலையில் ரமேஷ் அறையில் அலுவலக கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தான் பல மணி நேரம் கடந்த நிலையில் தருணை கூப்பிட்டான்
எதுக்கு கூப்பிட்ட ரமேஷ்
இங்க வந்து இந்த கணக்குகளை பாரேன். தருணும் அவன் காட்டிய கணக்குகளை பார்க்க ஆரம்பித்தான்
நேரங்கள் கடந்தது தருண் “நிறைய குளறுபடி இருக்கு அதுக்குதானே பார்க்க சொன்னாய்
ரமேஷ் “ஆமா, அதிகமான அமொண்ட் மிஸ் ஆகிறது”
தருண் “நாளைக்கு கலையில் நீ வானதி கேபினுக்கு வா அங்க வைத்து என்ன செய்யலாம் என தீர்மானிக்கலாம்”
நிறைவாள்..............
Hai friends, என்ன எல்லோரும் ரொம்ப enjoy செய்றிங்களா leaveவை, நானும் தான் அதுவும் எங்க அக்கா, பாப்பா எல்லாம் வந்திருக்காங்க. so அதே enjoyment ஓட இந்த அப்டேட் படித்து விட்டு எப்படி இருக்கு என இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு போங்க paa. என்ன உங்களுக்கு ஓகே தானே?
தருண் தனது குடும்பம், தொழில் மற்றும் அவனின் அம்மா சொன்னதற்காக வந்தது முதல் பின் தேவியை காதலிக்க தொடங்கியது வரை அனைத்தையும் கூறினான்
அனிதா “அவ்ளோ பெரிய கம்பனிய விட்டுவிட்டு எங்க தேவிக்காக வந்திருக்கீங்களா”
தருண் “எங்க அம்மா சொல்லுக்கு கட்டுப்பட்டு தான் முதலில் வந்தேன் இங்கு வந்து வானதியை பார்த்து அவளிடம் பழகியதில் எனக்கு தேவியை ரொம்ப பிடித்திருக்கு. நான் அவளை மனதார விரும்புகிறேன்”
அனிதா “ஆனா தருண் நீங்க தேவியை திருமணத்திற்கு ஒத்துகொள்ள வைப்பது அவ்வளவு சுலபம் இல்லை, திருமணத்திற்கு என்ன அவளுக்கு உங்களை பிடித்து இருந்தாலும் அவள் சொல்ல மாட்டாள், உங்களை பிடித்துள்ளது என ஒப்புகொள்ளவும் மாட்டாள். அவளுடைய வாழ்க்கையில் அவ நிறைய துன்பங்களை அனுபவித்து இருக்கா. திருமணத்தை பற்றி பேச்சு எடுத்தாலே கோபம் வந்திடும்”
தருண் “அது எதனால் என்று நான் தெரிந்து கொள்ளலாமா”
அனிதா “அதை நான் சொல்வதை விட தேவியே உங்ககிட்ட சொல்கிற மாதிரி நம்பிக்கை அவளுக்கு கோடுங்க.”
தருண் “ஏன் சொல்ல மாட்டேன்றிங்க, வானதி ஏன் அவங்க அம்மா,அப்பா கூட இல்லாமல் தனியா பாட்டி கூட இருக்காங்க”
அனிதா “இதுக்கான பதிலையும் தேவியே சொல்வாள் அதுக்கு நீங்க அவ மனதை வெல்லனும், உங்கமேல் அவளுக்கு நம்பிக்கை வரணும் அவளை விட்டு நீங்க எந்த காரணம்கொண்டும் பிரிந்து போகமாட்டிங்க என்று அவள் நம்பனும் அப்பொழுது அவளே சொல்வாள்
ஆனால் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்.எனக்கு தேவியுடைய வாழ்க்கை நல்லபடியாக அமைந்தால் போதும்.” எனக்கு ஒரு வாக்கு தருவிங்களா தருண்
தருண் “என்ன வாக்கு”
அனிதா “எந்த சுழ்நிலையலையும் தேவிக்கு துணையாக இருப்பேன் என்று”
தருண் “கண்டிப்பா அவளுக்கு துணையாக இருப்பேன்”
தேவியும், தருணும் பேங்க் regional ஆபீஸ் டெண்டர் அறிவிப்பிற்கு சென்றனர் இந்த முறையும் தேவிக்கே டெண்டர் கிடைக்க அருண் மிகவும் டென்சன் ஆனான்
அதோடு தேவியை பார்த்து தகாத வார்த்தைகளை பேசினான் இந்த முறை தேவியை விட தருணிற்கு கோபம் வந்துவிட்டது அவனை அடிக்க தருண் சென்றே விட்டான். தேவி அவனை கட்டுபடுத்தி அந்த இடத்தை விட்டு அழைத்து சென்று காரில் அமர்ந்து காரை இயக்கினாள்
ஏன் வானதி உனக்கு அவன் மேல் கோபம் வரவில்லையா. இதில் என்னையும் எதுவும் செய்ய விடாமல் அழைத்து வந்துவிட்டாய். நீ மட்டும் ஒதுக்கி இருந்தால் அவனுடைய வாயை அங்கேயே உடைத்திருப்பேன் என்ன தைரியம் இப்படி பேச அவனை என்று பல்லை கடித்து கோவத்தை கட்டுபடுத்தினான்.
தேவி “எனக்கு அவனை கொள்கிற அளவு கோபம் இருக்கு ஆனால் நான் கோவபட்டு பேசியோ இல்லை அவனை எதாவது செய்தால் அவன் பேசியது உண்மை என்று ஆகிவிடாதா”
தருண் “லூசடி நீ. என்ன பேசினாலும் எதுவும் பேசாம வந்திடுவியா. ஒன்னும் பேசாமல் வந்தாலும் அவன் சொல்வதை கேட்ட நாலு பேர் உண்மை இருக்கும் போல அதனால் பேசாமல் போறாங்க என்று சொல்வாங்க.
அவன் கேவலமாக பேசுவானம் எந்த அம்மா அதை கேட்டு ஏதும் செய்யாமல் வந்திடுவாங்கலாம்.நான் கேட்கிறேன் என்றாலும் விடாமல் அழைத்து வந்துவிட்டு கேட்டால் உண்மை என்று ஆகிவிடாதா என கேள்வி வேற.
ஏண்டி எல்லாமே நன்றாக தானே manage செய்கிறாய் இவனை உன்னால் அடக்க முடியாது. முடியாது என்று சொல்லிடதே செய்யவில்லை என சொல்லு என அவன் தேவியை திட்டிகொண்டிருந்தான்”
தேவி “இதற்கு என்ன பதில் கொடுப்பது என தெரியாமல் இவன் சொல்வது சரிதானே என எதுவும் பேச முடியாமல் அமைதியானாள்”
சிறிது நேரம் கழித்தே தேவி உணர்ந்தாள் தருண் தன்னை ஒருமையில் பேசியதையும் தன்னை வானதி என்று அழைத்ததையும். அவன் புறம் திருப்பி பார்க்க அவனோ ரோட்டை பார்த்து கொண்டிருந்தான். அதிலே அவளுக்கு தெரிந்தது தன்னை அழைத்த முறையை அவன் உணரவில்லை என்பது
தேவிக்கு இப்பொழுதெல்லாம் தருண் தன்னிடம் அதிக உரிமை எடுத்து கொள்வது போல் தோன்ற ஆரம்பித்திருந்தது
அது ஒருபுறம் பிடிக்கவும் செய்தது அவளை இது வரை யாரும் வானதி என்று அழைத்தது இல்லை. அவன் உரிமை எடுத்து கொள்வதும் பிடித்தது. தேவியிடம் இதுவரை யாரும் உரிமையாக கேள்வி கேட்டதும் இல்லை அதற்காக சண்டை இட்டதும் இல்லை அவளின் பாட்டி,தாத்தா கூட பாசத்தை காட்டுவார்களே தவிர உரிமையாக கேள்வி கேட்டது இல்லை
எனவே அவன் உரிமை எடுத்துகொண்டது அவளுள் ஒருவித உணர்வை கொடுத்தது. அவனின் வானதி என்னும் அழைப்பே மனதை வருடுவது போல் உணர்ந்தாள்.இருந்தும் அவனை இனி இதுபோல் உரிமை எடுத்து கொள்ள விடகூடாது ஒருமுறை பட்டதே போதும் என அவளின் அறிவு ௯றியது.
தேவி இதை நினைத்து கொண்டிருக்க தருணோ இன்னும் கோவத்தில் இருந்தான். அவனின் மனதில் எப்படி அவன் என்னோட வானதியை அப்படி பேசுவான். தன்னிடம் மாட்டும்போது அவனை ஒரு வழியாக்கணும் என்று எண்ணினான்
அன்று உணவு இடைவேளையின் போது அனிதா தருணை பார்க்க வந்தாள். வந்தவள் தருணிடம் என்ன ஆனது தருண் கலையில் இருந்து மூட்அவுட்டா இருக்க. எப்பவும் டெண்டர்க்கு சென்று வந்தால் தேவிதான் மூட்அவுட்டா இருப்பா இன்னைக்கு நீ அப்படி இருக்க தேவி நல்ல சுறுசுறுப்பா இருக்கா
தருண் “காலையில் நடந்ததை கூறினான்”
அனிதா “அவன் போனமுறையும் டெண்டர் கிடைக்கவில்லை என்று அப்படித்தான் பேசினான். சரி அதை விடு நீ தேவிகிட்ட உன்னோட காதலை சொல்லிவிட்டாயா”
தருண் “எங்க அனிதா நெருங்கவே முடியவில்லை ஆனா நான் அவளை பார்கிறது தெரிகிறது அவளுக்கு நான் அவளை பார்த்து கொண்டிருந்தால் அப்போது மட்டும் ஏதாவது வேலை குடுத்து வெளியே அனுப்பிடறா”
அனிதா “பாட்டி இடம் உங்களை பற்றி சொன்னேன் அவங்க உங்களை பார்க்க வேண்டும் சொன்னாங்க”
சரி அனிதா எப்ப வரணும் கேட்டு சொல்லுங்க வருகிறேன்
நாட்கள் கடந்த நிலையில் ரமேஷ் அறையில் அலுவலக கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தான் பல மணி நேரம் கடந்த நிலையில் தருணை கூப்பிட்டான்
எதுக்கு கூப்பிட்ட ரமேஷ்
இங்க வந்து இந்த கணக்குகளை பாரேன். தருணும் அவன் காட்டிய கணக்குகளை பார்க்க ஆரம்பித்தான்
நேரங்கள் கடந்தது தருண் “நிறைய குளறுபடி இருக்கு அதுக்குதானே பார்க்க சொன்னாய்
ரமேஷ் “ஆமா, அதிகமான அமொண்ட் மிஸ் ஆகிறது”
தருண் “நாளைக்கு கலையில் நீ வானதி கேபினுக்கு வா அங்க வைத்து என்ன செய்யலாம் என தீர்மானிக்கலாம்”
நிறைவாள்..............
Hai friends, என்ன எல்லோரும் ரொம்ப enjoy செய்றிங்களா leaveவை, நானும் தான் அதுவும் எங்க அக்கா, பாப்பா எல்லாம் வந்திருக்காங்க. so அதே enjoyment ஓட இந்த அப்டேட் படித்து விட்டு எப்படி இருக்கு என இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு போங்க paa. என்ன உங்களுக்கு ஓகே தானே?