சீனுவுக்கு அலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமே இருக்க, இயக்கி காதில் வைத்தால் மறு பக்கம் மௌனமாகவே இருந்தது.
"என்ன என்ன வேல வெட்டி இல்லாதவன்னு நினைப்போ! விளையாட நான் தான் கிடைச்சேனா? வந்தேன்னு வை உன்ன பொளந்துடுவேண்டா"
"என்ன சீனு யார் கிட்ட மல்லுகட்டுற?" என்றவாறே உள்ளே நுழைந்தான் வாசு.
"யார்னே தெரியலடா காலைல இருந்து போன் மேல போன் போட்டு தொல்லை பண்ணுறான். போன் போட்டா பேசணும்ல, பேசாம கடுப்பேத்துறான். அவன் மட்டும் என் கைல மாட்டட்டும் அவனுக்கு இருக்கு. அனைச்சு வைக்கவும் முடியாது. கர்மம் பேசாம இருக்கவும் முடியாது. எம்.எல்.ஏ பி.ஏவா குப்ப கொட்டுறதுக்கு பதிலா மாடு மேய்க்க போலாம்" கருவியவாறே அலைபேசியை வெறிக்க,
"ஏன் டா... எங்கப்பன் தூக்க ஸ்கெட்ச்சு போட்டு கொடுத்த... இப்படி கண்டுக்காம இருக்கீங்க, என் திட்டம் என்ன அவ்வளவு இளக்காரமா இருக்கா"
"சொந்த அப்பனையே கிட்ணப் பண்ண திட்டம் போட்டவனெல்லாம் சூடு சொரணையோடு பேசக் கூடாது. இங்க ஒருத்தன் யோசனைலயே இருக்கான், இன்னொருத்தன் போலீஸ் ஸ்டேஷன் கதின்னு இருக்கான். யார் கிட்ட பேசுறது" சீனு நொந்த குரலில் சொல்ல
"ஏன் டா ஏதாவது புதுப் பிரச்சினையா இருக்குமோ?"
"எனக்கு தெரியாமலையா?" வாசுவை கிண்டலாக பார்த்தவன் "இது வேறடா... புதுசா கல்யாணம் ஆனவங்க இல்ல.. பொண்டாட்டி கூட மொத சண்டை போல அதான் இவனுங்க இப்படி இருக்கானுங்க" நாளும் தெரிஞ்சவன் போல் சீனு பேச அவன் அலைபேசி மீண்டும் அடித்தது.
"இது வேற... மறுபடியும் கூப்டுறான். நீ பேசு" வாசு கையில் கொடுக்க அவனும் "ஹலோ" என்றான்
"யாரடா இது புதுசா? ஆதி மாமா குரல் இல்லையே" தீப்தி யோசிக்க வாசு பலமுறை "ஹலோ" என்றிருந்தான்
"ஹலோ... மிஸ்டர் சீனிவாசன் இருக்கிறாரா?"
"டேய் யாரோ பொண்ணுடா... உன்ன மிஸ்டரெல்லாம் போடுது" வாசு சிரிக்க,
"இங்க கொடு..." அலைபேசியை வாங்கியவன் காதில் வைக்க மறு பக்கத்தில் முத்தமிடும் சத்தம் கேக்கவே
"என்ன இது போன்ல கோளாறா? இல்ல நெட்ஒர்க் ப்ரோப்ளமா? என்ன எழவோ"
"டேய் லூசு கிஸ் பண்ணா அனுபவிக்கனும், ஆராய்ச்சி பண்ணுற?"
"கிஸ்ஸா... யாருமா.. நீ? போனுக்கு கிஸ் பண்ணிட்டு என்னமோ எனக்கே கொடுத்தா மாதிரி பொங்குற"
"நேர்ல வந்தேன் உன் மண்டைலயே போடுவேன்"
"யேன்மா... நீ யாரென்றே தெரியல, இதுல இவ்வளவு கோபப்படுற? உன் புருஷன் பாவம் மா.."
"அந்த விளங்கா மூஞ்சி நீதான்"
"ஐயோ எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல"
"எப்படி ஆகும்? இப்படி தத்தியா இருந்தா கடைசி வரைக்கும் முரட்டு சிங்களாகவே இருந்து சாக வேண்டியதுதான். வை போன"
"யாரடா... போன்ல ரொமான்டிக்கா பேசிக்கிட்டு இருந்த" வாசு வார
"ஆ என் பொண்டாட்டி..." கடுப்பான சீனு
"ஹாஹாஹா இப்போவே சண்டை ஆரம்பிச்சிருச்சா இனி பஞ்சாயத்தை கூட்ட வேண்டியதுதான். அத்து விட வேண்டியதுதான்"
"டேய் அவ யாரென்றே தெரியல, சும்மா என்ன வெறுப்பேத்துறா?"
"கல்யாணத்துக்கு வந்த மைனா ஒன்னு உன் கிட்ட மாட்டிருச்சுனு தோணுது சீனு... சீக்கிரம் கல்யாணமாக வாழ்த்துக்கள்.
"என்ன என்ன வேல வெட்டி இல்லாதவன்னு நினைப்போ! விளையாட நான் தான் கிடைச்சேனா? வந்தேன்னு வை உன்ன பொளந்துடுவேண்டா"
"என்ன சீனு யார் கிட்ட மல்லுகட்டுற?" என்றவாறே உள்ளே நுழைந்தான் வாசு.
"யார்னே தெரியலடா காலைல இருந்து போன் மேல போன் போட்டு தொல்லை பண்ணுறான். போன் போட்டா பேசணும்ல, பேசாம கடுப்பேத்துறான். அவன் மட்டும் என் கைல மாட்டட்டும் அவனுக்கு இருக்கு. அனைச்சு வைக்கவும் முடியாது. கர்மம் பேசாம இருக்கவும் முடியாது. எம்.எல்.ஏ பி.ஏவா குப்ப கொட்டுறதுக்கு பதிலா மாடு மேய்க்க போலாம்" கருவியவாறே அலைபேசியை வெறிக்க,
"ஏன் டா... எங்கப்பன் தூக்க ஸ்கெட்ச்சு போட்டு கொடுத்த... இப்படி கண்டுக்காம இருக்கீங்க, என் திட்டம் என்ன அவ்வளவு இளக்காரமா இருக்கா"
"சொந்த அப்பனையே கிட்ணப் பண்ண திட்டம் போட்டவனெல்லாம் சூடு சொரணையோடு பேசக் கூடாது. இங்க ஒருத்தன் யோசனைலயே இருக்கான், இன்னொருத்தன் போலீஸ் ஸ்டேஷன் கதின்னு இருக்கான். யார் கிட்ட பேசுறது" சீனு நொந்த குரலில் சொல்ல
"ஏன் டா ஏதாவது புதுப் பிரச்சினையா இருக்குமோ?"
"எனக்கு தெரியாமலையா?" வாசுவை கிண்டலாக பார்த்தவன் "இது வேறடா... புதுசா கல்யாணம் ஆனவங்க இல்ல.. பொண்டாட்டி கூட மொத சண்டை போல அதான் இவனுங்க இப்படி இருக்கானுங்க" நாளும் தெரிஞ்சவன் போல் சீனு பேச அவன் அலைபேசி மீண்டும் அடித்தது.
"இது வேற... மறுபடியும் கூப்டுறான். நீ பேசு" வாசு கையில் கொடுக்க அவனும் "ஹலோ" என்றான்
"யாரடா இது புதுசா? ஆதி மாமா குரல் இல்லையே" தீப்தி யோசிக்க வாசு பலமுறை "ஹலோ" என்றிருந்தான்
"ஹலோ... மிஸ்டர் சீனிவாசன் இருக்கிறாரா?"
"டேய் யாரோ பொண்ணுடா... உன்ன மிஸ்டரெல்லாம் போடுது" வாசு சிரிக்க,
"இங்க கொடு..." அலைபேசியை வாங்கியவன் காதில் வைக்க மறு பக்கத்தில் முத்தமிடும் சத்தம் கேக்கவே
"என்ன இது போன்ல கோளாறா? இல்ல நெட்ஒர்க் ப்ரோப்ளமா? என்ன எழவோ"
"டேய் லூசு கிஸ் பண்ணா அனுபவிக்கனும், ஆராய்ச்சி பண்ணுற?"
"கிஸ்ஸா... யாருமா.. நீ? போனுக்கு கிஸ் பண்ணிட்டு என்னமோ எனக்கே கொடுத்தா மாதிரி பொங்குற"
"நேர்ல வந்தேன் உன் மண்டைலயே போடுவேன்"
"யேன்மா... நீ யாரென்றே தெரியல, இதுல இவ்வளவு கோபப்படுற? உன் புருஷன் பாவம் மா.."
"அந்த விளங்கா மூஞ்சி நீதான்"
"ஐயோ எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல"
"எப்படி ஆகும்? இப்படி தத்தியா இருந்தா கடைசி வரைக்கும் முரட்டு சிங்களாகவே இருந்து சாக வேண்டியதுதான். வை போன"
"யாரடா... போன்ல ரொமான்டிக்கா பேசிக்கிட்டு இருந்த" வாசு வார
"ஆ என் பொண்டாட்டி..." கடுப்பான சீனு
"ஹாஹாஹா இப்போவே சண்டை ஆரம்பிச்சிருச்சா இனி பஞ்சாயத்தை கூட்ட வேண்டியதுதான். அத்து விட வேண்டியதுதான்"
"டேய் அவ யாரென்றே தெரியல, சும்மா என்ன வெறுப்பேத்துறா?"
"கல்யாணத்துக்கு வந்த மைனா ஒன்னு உன் கிட்ட மாட்டிருச்சுனு தோணுது சீனு... சீக்கிரம் கல்யாணமாக வாழ்த்துக்கள்.