உயிரே உன் உயிரென நான் இருப்பேன் teaser 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஆரோஹிய கூட்டிட்டு வந்துட்டேன். டீஸரை படிச்சாவே இது எந்த தீரன்னு கண்டு பிடிச்சுடுவீங்க:geek:
images (8).jpg

ட்ராபிக் சிக்னலில் சிக்கியவாறே வண்டியில் இருந்து அலைப்பேசி மூலம் உத்தரவிட்டுக் கொண்டிருந்த தீரனின் கழுகுப் பார்வை தனது வலது புறமுள்ள வண்டியினுள் செல்ல அங்கே அமர்ந்திருந்தவளை கண்டு புருவம் சுருக்கினான்.



"ஆரோஹி இங்க என்ன பண்ணுறா? டில்லியிலிருந்து எப்போ வந்தா?" என்று யோசித்தவன் அவளின் வண்டியின் என்னை குறித்துக் கொண்டு யாருக்கோ அனுப்பி வைத்தவன் "இந்த வண்டி யாருடையது? அந்த நபர், அவருடைய குடும்பம், எல்லா டீடைலும் என் டேபிளுக்கு உடனே வந்தாகணும்" என்று உத்தரவிட்டவன்.

"வாடி என் மாஜி பொண்டாட்டி. உன்ன விட்டுடலாம்னு தான் நினச்சேன். உன்ன பார்த்தாலே நீ எனக்கு பண்ண துரோகம் தான் கண் முன் வருது. நீ டில்லில இருக்கிறதா நினைச்சி அமைதியாக இருந்தேன் எப்போ நீ என் ஊருக்கே வந்தியோ உன்ன வச்சி செய்றேண்டி" என்று கருவிக்கு கொண்டவன் சிக்கினல் விழ வண்டியை கிளப்பினான்.

அன்று மாலையே ஆரோஹியின் கோப்பு தீரனின் கையில் ஆரோஹி ஏஜ் 26 , சிங்கள் மதர் என்று இருக்க உதடு வளைத்து புன்னகைத்தவன்



"வசதியா போச்சு, புருஷன விட்டுட்டு வந்துட்டியா? அதானே பார்த்தேன் அண்ணன்னு சொல்லிக் கொண்டு ஆகாஷ் பின்னாடி சுத்தின, எவனையோ கல்யாணம் பண்ணி இருந்த இப்போ அவனையும் விட்டுட்டியா? இங்க யார பிடிக்க வந்திருக்க?" என்று கோப்பில் உள்ள ஆரோஹியின் புகைப் படத்திடம் கேட்டவன்

download (3).jpg

"உன்ன விட மாட்டேண்டி" என்று ஆரோஹி அணைத்துக் கொண்டிருந்த குழந்தைகளின் புகைப் படத்தை பார்த்து நெற்றி சுருக்கி யோசித்தவன் என்ன பண்ணனும் என்று முடிவெடுத்தவனாக



"உன் பசங்கள தூக்குறேண்டி, என் காலுல... இல்ல இல்ல என் படுக்கைல நீ இருப்ப" என்று கர்ஜிக்க

தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த ஆரோஹிக்கு புரையேற அவளின் தலையை தட்டினார் ஆயிஷா பேகம்.



தீரனின் திட்டம் அறியாமல் ஆரோஹி சுதந்திரமாக தனது அன்றாட வாழ்க்கையை தொடர அவள் உயிராய் நினைக்கும் குழந்தைகளின் ஒன்று காணாமல் போக அடுத்த கணமே தீரனின் முன் நின்றாள்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top