உன் கண்ணில் என் விம்பம் teaser 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Today Sunday என்பதையே மறந்துட்டேன். இல்லனா ஸ்பெஷல் இன்னக்கி போட்டிருப்பேன் சரி வாங்க குட்டி டீஸர் பாக்கலாம்

நா காத பொத்திக்கிறேன் திட்டுறதெல்லாம் திட்டிட்டு போங்க

download (39).jpg

ரிஷி எதையும் திட்டமிட்டு, நன்றாக யோசித்து, சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து செய்து முடிப்பதில் கில்லாடி. யாழிசையை எப்படியாவது அடைந்தே தீரனும் என்று முடிவு செய்து தான் வந்திருந்தான். இதுவரை எந்த பெண்ணிடமும் காதல் என்று போய் நின்றதும் இல்லை. ஐ லவ் யு என்ற வார்த்தையை பாவித்ததும் இல்லை. அவனிடம் காதல் என்று வந்து நிற்கும் பெண்ணிடம் அனுமதியே இல்லாமல் முத்தமிட்டு மொத்தத்தையும் களவாடும் ரகம்.





"இல்ல இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பொறம்" என்று சொல்பவர்களிடம்





"என்னது கல்யாணமா? இதுக்கெல்லாம் லைசன் வேணும்னா யாரும் லவ் பண்ணவே மாட்டாங்க" பேசியே கரைப்பான்.





அப்படியும் சம்மதிக்காத பெண்களை தள்ளியே! நிறுத்துவான்.





இவனிடம் வேலை செய்யும் இவனின் பி.ஏ அழகிகள் தான் பாவப்பட்டவர்கள். எவளாவது இவனை ஆர்வமாய் பார்த்தால் போதும் பச்சையாக கேட்டே விடுவான். சிலர் தெறித்து ஓடினாலும். சிலர் காசாவது கிடைக்கும் என்று நெருங்கினால், அவள் தலையில் துண்டுதான் போடவேண்டி இருக்கும்.





அவனுக்கு தேவை என்றால் மட்டுமே! இழைவான் மற்ற நேரத்தில் தள்ளிய வைப்பான். இவனிடம் காதல் என்று சொல்லி இழைந்தவள் தான் மதுரிகா.





"காதல் எல்லாம் செட் ஆகாது. ரிலேஷன்ஷிப் மட்டும் வச்சிக்கலாம்" என்று சொல்ல





"ஓகே" என்றவள் அவன் அவளுடன் இழைவதை வீடியோ எடுத்து "கல்யாணம் பண்ணிக்க, இல்ல காசு கொடு" என்று மிரட்ட பலமாக சிரித்தவன்





"அத விட சூப்பர் வீடியோ ஆபீஸ் ரூம் சீசீடிவ் ல இருக்கு பேபி. அதுல உன் முகம் தெளிவா தெரியுது. யார் யாரை மயக்கினாங்கனு கிளியரா இருக்கு. நான் ஆம்புலடி இது உண்மைன்னு ப்ரூப் ஆனாலும் என் கூட படுக்க ஆயிரம் பொண்ணுக வருவாங்க, முப்பது வயசு தாண்டினா உன்ன எவனும் திரும்பி பாக்க மாட்டானுங்க. போய் ஏதாவது ஒரு கிழவனை மயக்கி லைப்ல செட்டில் ஆகிட பாரு" நக்கலாக கூற அவள் தான் மூக்குடைப்பட்டு வெளியேறினாள்.



images (9).jpg

ஆனால் யாழிசை வேறு ரகம் அவளை காதல் என்று ஒன்றால் தான் வீழ்த்த முடியும். இரண்டு வருடங்களாக அவனின் சிந்தனையை கொள்ளையிட்டு கொண்டிருப்பவள். அவளை புறம் தள்ள தள்ள தொந்தரவு செய்து கொண்டிருப்பவள். அவளை அடைய கால, நேரம் கூடவேண்டும். முறையான திட்டமில்லாது செய்ய முடியாது.





ஒரே ஒருதடவை யாழிசை அவன் மேல் காதல் கொண்டாள் போதும். அவளை அடைவது அவனுக்கு பெரியவிஷயமே! இல்லை. ஒரே ஒரு தடவை அவளை அடைந்தாள் போதும். துடித்துக் கொண்டிருக்கும் அடங்கா ஆசைஅடங்கி விடும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top