ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்துல இருந்து ஒரு குட்டி டீஸர்
ஐந்து வருடங்களுக்கு முன் எப்படி இருந்தாளோ அதே குழந்தை முகம். கண்கள் தான் ஒளியிழந்து, ஈரத்தால் நனைந்திருந்தது. கண்ணை சுற்றி கருவளையம் கூட. அன்று விட சற்று மெலிந்து இருக்கிறாள். சரியாக சாப்பிடவில்லையா? அந்த அரையிருட்டில் அவளின் மூக்கின் மேல் வீற்றிருந்த மூக்குத்தி ஜொலித்து அவள் முகத்துக்கே ஒரு பிரகாசம் கொடுத்தது. அவளின் மேனியை விட்டு ரிஷியின் கண்கள் வேறெங்குமே செல்லவில்லை. அவளை கண்களால் பருகியவனின் சிந்தனையில் இக்கணம் இப்படியே உறைந்து விடக் கூடாதா என்றிருந்தது.
அது அவன் தான் அவள் கணவன் தான். அதே பார்வை கண்களில் வழியும் காதலை முகத்தில் காட்டாது பிடிவாதமாய் இருக்கும் முகம். ரிஷி மெதுவாக ஒவ்வொரு அடியையும் அவள் புறம் எடுத்து வைக்க, கயல்விழியின் இதயம் தொண்டையில் வந்து துடிக்க ஆரம்பித்தது. சத்தம் கூட அவனுக்கு கேட்டிருக்கும். அவனை விழிகளில் நிரப்பி பாத்திருந்தவளின் இதயமும் நிறைந்து வழிந்தது.
அவள் அருகில் வந்த ரிஷி "வார் மை பேபி" என்றவன் அவளை இறுக அணைத்திருக்க, அதே அணைப்பு அவள் ஏங்கித் தவித்த அதே அணைப்பு. தனக்கு என்றுமே இல்லாமல் போய் விட்டதென்று நினைத்த அதே நெருக்கம். கணவனின் மார்போடு கன்னம் பதித்தவள் மெளனமாக கண்ணீர் வடிக்க, அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்த ரிஷியின் உதடுகள் "வார், வார்" என்றவாறே முத்தம் பதிக்க, அவளின் தேகம் சிலிர்த்தது.
தனது நிலையால் அவளை விட்டு விலகி இருந்தவன், அவளை கண்ட நொடி தன்னிலை மறந்து, இவள் என்னவள், எனக்கானவள், என்ற எண்ணம் மட்டுமே அவன் சிந்தையில். அவளின் பிரத்தியேகமான வாசம் அவனின் நெஞ்சம் நிரப்ப இழுத்து அணைத்து உரிமையை நிலைநாட்டி அதை செயலில் காட்டிக் கொண்டிருந்தான் ரிஷி.
அவன் கைகளோ அவளை உணர்ந்து கொள்ளும் முயற்சியில் இறங்க, "என்ன விட்டுட்டு எங்க போனீங்க? எங்க போனீங்க" அவன் மார்பிலும், தோளிலும் சில அடிகளை கொடுத்தவாறே விட்டுட்டு போனவளே அவனை குற்றம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சுகமாய் வாங்கி கொண்டவன் அவளின் முகம் நிமிர்த்தி இத்தனை வருட பிரிவின் வேதனையை கொடுத்ததற்காக அவளின் இதழ்களுக்கு தண்டனை வழங்க ஆரம்பித்தான்.
அவனின் மனநிலை நொடிக்கொருதரம் மாற, மாற வன்மையாகவும், மென்மையாகவும், அவனின் இதழ்கள் முத்த யுத்தம் செய்ய மங்கையவளின் உதடுகள் தான் மூச்சுக் காற்றுக்காக ஏங்க கணவனை தடுக்கக் கூட பிடிக்காமல் அவனோடு இழைந்தவள், நெஞ்சம் முழுக்க இருந்த பாரம் விலக அவன் கைகளிலேயே! மயங்கிச் சரிந்தாள்.
ஐந்து வருடங்களுக்கு முன் எப்படி இருந்தாளோ அதே குழந்தை முகம். கண்கள் தான் ஒளியிழந்து, ஈரத்தால் நனைந்திருந்தது. கண்ணை சுற்றி கருவளையம் கூட. அன்று விட சற்று மெலிந்து இருக்கிறாள். சரியாக சாப்பிடவில்லையா? அந்த அரையிருட்டில் அவளின் மூக்கின் மேல் வீற்றிருந்த மூக்குத்தி ஜொலித்து அவள் முகத்துக்கே ஒரு பிரகாசம் கொடுத்தது. அவளின் மேனியை விட்டு ரிஷியின் கண்கள் வேறெங்குமே செல்லவில்லை. அவளை கண்களால் பருகியவனின் சிந்தனையில் இக்கணம் இப்படியே உறைந்து விடக் கூடாதா என்றிருந்தது.
அது அவன் தான் அவள் கணவன் தான். அதே பார்வை கண்களில் வழியும் காதலை முகத்தில் காட்டாது பிடிவாதமாய் இருக்கும் முகம். ரிஷி மெதுவாக ஒவ்வொரு அடியையும் அவள் புறம் எடுத்து வைக்க, கயல்விழியின் இதயம் தொண்டையில் வந்து துடிக்க ஆரம்பித்தது. சத்தம் கூட அவனுக்கு கேட்டிருக்கும். அவனை விழிகளில் நிரப்பி பாத்திருந்தவளின் இதயமும் நிறைந்து வழிந்தது.
அவள் அருகில் வந்த ரிஷி "வார் மை பேபி" என்றவன் அவளை இறுக அணைத்திருக்க, அதே அணைப்பு அவள் ஏங்கித் தவித்த அதே அணைப்பு. தனக்கு என்றுமே இல்லாமல் போய் விட்டதென்று நினைத்த அதே நெருக்கம். கணவனின் மார்போடு கன்னம் பதித்தவள் மெளனமாக கண்ணீர் வடிக்க, அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்த ரிஷியின் உதடுகள் "வார், வார்" என்றவாறே முத்தம் பதிக்க, அவளின் தேகம் சிலிர்த்தது.
தனது நிலையால் அவளை விட்டு விலகி இருந்தவன், அவளை கண்ட நொடி தன்னிலை மறந்து, இவள் என்னவள், எனக்கானவள், என்ற எண்ணம் மட்டுமே அவன் சிந்தையில். அவளின் பிரத்தியேகமான வாசம் அவனின் நெஞ்சம் நிரப்ப இழுத்து அணைத்து உரிமையை நிலைநாட்டி அதை செயலில் காட்டிக் கொண்டிருந்தான் ரிஷி.
அவன் கைகளோ அவளை உணர்ந்து கொள்ளும் முயற்சியில் இறங்க, "என்ன விட்டுட்டு எங்க போனீங்க? எங்க போனீங்க" அவன் மார்பிலும், தோளிலும் சில அடிகளை கொடுத்தவாறே விட்டுட்டு போனவளே அவனை குற்றம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சுகமாய் வாங்கி கொண்டவன் அவளின் முகம் நிமிர்த்தி இத்தனை வருட பிரிவின் வேதனையை கொடுத்ததற்காக அவளின் இதழ்களுக்கு தண்டனை வழங்க ஆரம்பித்தான்.
அவனின் மனநிலை நொடிக்கொருதரம் மாற, மாற வன்மையாகவும், மென்மையாகவும், அவனின் இதழ்கள் முத்த யுத்தம் செய்ய மங்கையவளின் உதடுகள் தான் மூச்சுக் காற்றுக்காக ஏங்க கணவனை தடுக்கக் கூட பிடிக்காமல் அவனோடு இழைந்தவள், நெஞ்சம் முழுக்க இருந்த பாரம் விலக அவன் கைகளிலேயே! மயங்கிச் சரிந்தாள்.