ஹாய் கியூட்டிபாய்ஸ் அடுத்த அத்தியாயத்துல இருந்து ஒரு குட்டி teaser
டீஸர் போட்டாலே! கட்டைய கைல எடுக்குறீங்க. உங்க அன்புக்கு நன்றி செல்லம்ஸ்.
குளித்து டிசைனர் புடவையொன்றை அணிந்தவள் அவனுக்கு பிடித்தது போல் அலங்காரமும் செய்து கொண்டு அன்றும் அவனுக்காக காத்திருந்தாள் யாழிசை. அவனின் வண்டி உள்ளே வருவது அறிந்திருந்தாலும் கீழே பிரதீபன் இருப்பதால் கீழே செல்லாமல் அவன் வரும் வரை அறையில் அமர்ந்திருந்தவள் அவன் மேலே வர தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இதயம் தாறுமாறாக துடிக்க, பொறுமை காற்றில் பறக்க அறையில் நடை பயின்றாள்.
ரிஷியிடம் எவ்வாறு சொல்வது? சொல்லும் பொழுது அவன் முகத்தில் ஏற்படும் சந்தோச புன்னகை, அதன் பின் அவளை அணைத்து கொஞ்சுவான், வயிற்றில் கைவைத்து குழந்தையோடு பேசுவான், பையனா? பொண்ணா? என்ன பேர் வைக்கலாம் என்று கேப்பானோ! கற்பனையில் மிதக்கலானாள் யாழிசை.
அவன் மாடிக்கு வரும் பொழுது கற்பனையிலேயே கற்பகாலத்தை கடந்து குழந்தையையும் கையில் ஏந்தி அழகு பார்க்கலானாள்.
அறைக்கு வந்த ரிஷி யாழிசையின் தெளிவான முகத்தை கண்டு புருவம் உயர்த்தியவன் எதுவும் பேசாது குளியலறைக்குள் புகுந்திருக்க, அவன் வெளியே வரும் வரை காத்திருந்தாள்.
குளியலறையிலிருந்து துண்டோடு வெளியே வந்தவனோ அவளை கண்டு கொள்ளாது துணிமாற்ற அவனின் முறுக்கேறிய புஜங்களை பார்த்திருந்தவளின் எண்ணமெல்லாம் அவளின் செல்ல மகன் தந்தையை போல் இருப்பான் என்பதே.
தன்னை கண்சிமிட்டாமல் பாத்திருக்கும் மனைவியின் விம்பத்தை கண்ணாடியினூடாக கண்டு கொண்டவன் "இன்னைக்கி என்னவாகிருச்சு இவளுக்கு" என்ற சிந்தனையில் விழ அவனை பின்னால் அணைத்திருந்தாள் யாழிசை.
அவளின் செய்கையால் கவரப்பட்டவன் உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டாலும் "என்ன இன்னைக்கு நீயாகவே வந்திருக்க, ஏதாவது காரியம் ஆகா வேண்டி இருக்கா?" அவனின் குறுக்குப் புத்தி அவனை அவ்வாறு சிந்திக்க வைக்க
அவனின் குரோதமான வார்த்தைகள் அவள் செவிகளில் விழுந்தால் தானே அவன் முதுகில் கன்னம் பதித்தவள் அவன் வயிற்றில் கைவைத்து மேலும் அவனுள் புதைய
"ராட்சசி வேண்டுமே பண்ணுறாளே" என்ற முணுமுணுப்போடு அவளின் கைகளை பிரித்தவன் அவள் புறம் திரும்ப வெக்கப்பட்டு தலை குனிந்தாள் யாழிசை.
வலது கையால் அவளின் முகத்தை நிமிர்த்தி ஆராய சிவப்பேறிய கன்னங்களும், வெக்கப் புன்னகையும் நீண்ட நாட்களுக்கு பின் அவள் முகத்தில் குடிவந்திருக்க, கடந்த நாட்களை விட மிக அழகாகவே தெரிந்தாள் அவனின் மனையாள்.
"சும்மாவே கொல்லுறா இதுல இப்படி வெக்கப்பட்டா அவளை விட்டு தள்ளி நிற்க முடியாமலே போய்டும்" ரிஷியின் சிந்தனை இவ்வாறிருக்க அவனது இடது கையை அவளது வயிற்றி மேல் வைத்திருந்தாள் யாழிசை.
"வார் பேபி இன்னைக்கு உனக்கு என்னவோ ஆச்சு" என்று அவளை முத்தமிட முயல அவனின் உதடுகள் மீது விரலை வைத்து தடுத்தவள்
"முதல்ல நான் சொல்லிடுறேன் அப்பொறம்" என்றவள் மீண்டும் வெக்கப்பட்டு தலை குனிய
"ஏதோ பெருசா வரப்போகுது" என்று உள்ளுணர்வு சொல்ல "என்ன விஷயம்" கொஞ்சம் கர்ஜனை குரலில் ரிஷி கேக்க
மனம் முழுக்க சந்தோசத்தில் திளைத்தவளோ அந்த குரலை உணராமல் "அது வந்து... அது வந்து நாம அம்மா அப்பாவாக போறோம் னு நினைக்கிறேன்" கண்கள் மின்ன அவனை பார்த்து கூற
"வாட் கம் அகைன்" அதிர்ச்சியாக அவனை பார்த்தவன் மீண்டும் கேக்க
அவனின் அதிர்ச்சியான முகபாவத்தை எதிர்பார்க்காதவளோ! கல்யாணமான பின் ரிஷி மும்பாயில் இருக்கும் பொழுது ஒரு தடவை மாதவிடாய் வந்ததாகவும் மும்பாய் வந்த பின் மாதவிடாய் வரவில்லை. ஒருவேளை கர்ப்பமாக இருக்கலாம் என்று வார்த்தைகளை கோர்த்துக் கோர்த்து திணறியவாறே சொல்ல வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கலானான் ரிஷி.
அவன் எதற்கு சிரிக்கின்றான் என்று புரியாதவளோ! பாவமாய் அவனை பார்க்க அவளின் முகத்தை பார்த்து மீண்டும் சிரிக்கலானான் ரிஷி.
டீஸர் போட்டாலே! கட்டைய கைல எடுக்குறீங்க. உங்க அன்புக்கு நன்றி செல்லம்ஸ்.
குளித்து டிசைனர் புடவையொன்றை அணிந்தவள் அவனுக்கு பிடித்தது போல் அலங்காரமும் செய்து கொண்டு அன்றும் அவனுக்காக காத்திருந்தாள் யாழிசை. அவனின் வண்டி உள்ளே வருவது அறிந்திருந்தாலும் கீழே பிரதீபன் இருப்பதால் கீழே செல்லாமல் அவன் வரும் வரை அறையில் அமர்ந்திருந்தவள் அவன் மேலே வர தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இதயம் தாறுமாறாக துடிக்க, பொறுமை காற்றில் பறக்க அறையில் நடை பயின்றாள்.
ரிஷியிடம் எவ்வாறு சொல்வது? சொல்லும் பொழுது அவன் முகத்தில் ஏற்படும் சந்தோச புன்னகை, அதன் பின் அவளை அணைத்து கொஞ்சுவான், வயிற்றில் கைவைத்து குழந்தையோடு பேசுவான், பையனா? பொண்ணா? என்ன பேர் வைக்கலாம் என்று கேப்பானோ! கற்பனையில் மிதக்கலானாள் யாழிசை.
அவன் மாடிக்கு வரும் பொழுது கற்பனையிலேயே கற்பகாலத்தை கடந்து குழந்தையையும் கையில் ஏந்தி அழகு பார்க்கலானாள்.
அறைக்கு வந்த ரிஷி யாழிசையின் தெளிவான முகத்தை கண்டு புருவம் உயர்த்தியவன் எதுவும் பேசாது குளியலறைக்குள் புகுந்திருக்க, அவன் வெளியே வரும் வரை காத்திருந்தாள்.
குளியலறையிலிருந்து துண்டோடு வெளியே வந்தவனோ அவளை கண்டு கொள்ளாது துணிமாற்ற அவனின் முறுக்கேறிய புஜங்களை பார்த்திருந்தவளின் எண்ணமெல்லாம் அவளின் செல்ல மகன் தந்தையை போல் இருப்பான் என்பதே.
தன்னை கண்சிமிட்டாமல் பாத்திருக்கும் மனைவியின் விம்பத்தை கண்ணாடியினூடாக கண்டு கொண்டவன் "இன்னைக்கி என்னவாகிருச்சு இவளுக்கு" என்ற சிந்தனையில் விழ அவனை பின்னால் அணைத்திருந்தாள் யாழிசை.
அவளின் செய்கையால் கவரப்பட்டவன் உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டாலும் "என்ன இன்னைக்கு நீயாகவே வந்திருக்க, ஏதாவது காரியம் ஆகா வேண்டி இருக்கா?" அவனின் குறுக்குப் புத்தி அவனை அவ்வாறு சிந்திக்க வைக்க
அவனின் குரோதமான வார்த்தைகள் அவள் செவிகளில் விழுந்தால் தானே அவன் முதுகில் கன்னம் பதித்தவள் அவன் வயிற்றில் கைவைத்து மேலும் அவனுள் புதைய
"ராட்சசி வேண்டுமே பண்ணுறாளே" என்ற முணுமுணுப்போடு அவளின் கைகளை பிரித்தவன் அவள் புறம் திரும்ப வெக்கப்பட்டு தலை குனிந்தாள் யாழிசை.
வலது கையால் அவளின் முகத்தை நிமிர்த்தி ஆராய சிவப்பேறிய கன்னங்களும், வெக்கப் புன்னகையும் நீண்ட நாட்களுக்கு பின் அவள் முகத்தில் குடிவந்திருக்க, கடந்த நாட்களை விட மிக அழகாகவே தெரிந்தாள் அவனின் மனையாள்.
"சும்மாவே கொல்லுறா இதுல இப்படி வெக்கப்பட்டா அவளை விட்டு தள்ளி நிற்க முடியாமலே போய்டும்" ரிஷியின் சிந்தனை இவ்வாறிருக்க அவனது இடது கையை அவளது வயிற்றி மேல் வைத்திருந்தாள் யாழிசை.
"வார் பேபி இன்னைக்கு உனக்கு என்னவோ ஆச்சு" என்று அவளை முத்தமிட முயல அவனின் உதடுகள் மீது விரலை வைத்து தடுத்தவள்
"முதல்ல நான் சொல்லிடுறேன் அப்பொறம்" என்றவள் மீண்டும் வெக்கப்பட்டு தலை குனிய
"ஏதோ பெருசா வரப்போகுது" என்று உள்ளுணர்வு சொல்ல "என்ன விஷயம்" கொஞ்சம் கர்ஜனை குரலில் ரிஷி கேக்க
மனம் முழுக்க சந்தோசத்தில் திளைத்தவளோ அந்த குரலை உணராமல் "அது வந்து... அது வந்து நாம அம்மா அப்பாவாக போறோம் னு நினைக்கிறேன்" கண்கள் மின்ன அவனை பார்த்து கூற
"வாட் கம் அகைன்" அதிர்ச்சியாக அவனை பார்த்தவன் மீண்டும் கேக்க
அவனின் அதிர்ச்சியான முகபாவத்தை எதிர்பார்க்காதவளோ! கல்யாணமான பின் ரிஷி மும்பாயில் இருக்கும் பொழுது ஒரு தடவை மாதவிடாய் வந்ததாகவும் மும்பாய் வந்த பின் மாதவிடாய் வரவில்லை. ஒருவேளை கர்ப்பமாக இருக்கலாம் என்று வார்த்தைகளை கோர்த்துக் கோர்த்து திணறியவாறே சொல்ல வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கலானான் ரிஷி.
அவன் எதற்கு சிரிக்கின்றான் என்று புரியாதவளோ! பாவமாய் அவனை பார்க்க அவளின் முகத்தை பார்த்து மீண்டும் சிரிக்கலானான் ரிஷி.