ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாத்தோட டீஸர்.
சண்டே உறவால் உயிரானவள் first epi தரதா சொன்னேன். இன்னும் complete பண்ணல. bcz ரிஷி செத்துட்டான்னு சொன்னதும். கலவரம் ஆகிருச்சு. நாளைக்கு UD உண்டு. அதன் பிறகு யாரும் UD கேக்க கூடாது. செவ்வாய் தான் யாழ் பேபி வருவா.
கயலை திரும்பிப் பார்த்த ப்ரதீபனின் எண்ண ஓட்டம் யாழிசை அவன் வாந்தி எடுத்து சுத்தம் செய்த நாளுக்கு பயணித்தது.
காலையில் வெகுநேரமாக தூங்கியவன் எழுந்ததே பத்து மணியளவில் அறையின் சுகந்தமும், சுத்தமும், நேர்த்தியும் கண்ணில் பட நேற்று என்ன நாள் என்பதையும், இரவு என்ன செய்தான் என்ற நியாபகமும் வர கூடவே யாழிசையின் முகமும், அவள் அவனுக்காக செய்தவைகளும் ஒன்றன் பின் ஒன்றாக நியாபகத்தில் வரவே!
"ரிஷிக்கு அவள் கணவன் என்ற உரிமையில் செய்தாள் எனக்கு எதற்கு செய்தாள்" மூளை கேள்வி எழுப்பினாலும் எல்லா பெண்களையும் தப்பானவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பவனுக்கு யாழிசையை அந்த பட்டியலில் இட மனம் அனுமதிக்கவில்லை.
ரிஷியிடம் பேச வேண்டும் என்ற முடிவோடு குளித்து தயாராகி வந்தவன் ரிஷியே மாடியிலிருந்து இறங்கி வருவதை கண்டு
"டேய் சென்னையில் இருக்க வேண்டியவன் இங்க என்னடா பண்ணுற? ஏதாவது முக்கியமா மறந்து விட்டுட்டு போனதை எடுக்க வந்தியா? போன் பண்ணி இருந்தா நானே வழி பண்ணி இருப்பேனே!" ஆச்சரியமாக விழி விரித்தவன் நண்பன் அமைதியாக எதையோ யோசிப்பதை பார்த்து
"என்னடா" என்று தோளில் கை வைக்க
"நேத்து உன் பர்த்டே இல்ல" சங்கடமாக ப்ரதீபனை ரிஷி ஏறிட
"நண்பன் நீ இல்லனா என்ன அதான் உன் மனைவி இருந்தாளே!" என்றவன் யாழிசை அவனுக்காக செய்தவைகளை சொல்லி அவளை புகழ்ந்து பேச முதல் முறையாக தான் செய்ததை எண்ணி வருந்தலானான் ரிஷி.
"ரிஷி நா ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்காத அந்த பொண்ணுக்கு நீ கொஞ்சம் கூட பொருத்தமில்லை. அவளை ஊருக்கு அனுப்பிடு. உன்ன உண்மையாகவே நேசிக்கிறா உண்மை தெரிஞ்சா தாங்க மாட்டா"
பிரதீப் பேசப் பேச மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தவன் கடைசி வாக்கியத்தில் உடல் இறுகி நின்றான்.
அதன் பின் இருவரும் ஒன்றாகத்தான் மும்பையிலுள்ள பிரதான நகைக்க கடைக்கு சென்றார்கள். அங்கிருந்து ரிஷி மீண்டும் சென்னை செல்வதாக விடைபெற்று சென்றிருந்தான்.
இரவில் வீடு வந்த ப்ரதீபனுக்கு யாழிசையிடம் பேச வேண்டும் என்று தோன்ற அவளை அழைத்து வருமாறு ராமு தாத்தாவிடம் கூற அவர் சொன்ன பதில் ரிஷி யாழிசையை அழைத்துக் கொண்டு சென்னை சென்றான் என்பதே! அதன் பின் இரண்டு நாட்களில் அவன் நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்னை சென்றாலும் யாழிசையை சந்திக்க முடியவில்லை. அன்றிலிருந்து மூன்றாவது நாள் ரிஷி மும்பை வந்ததும்,யாழிசைதான் கயல் என்று தெரியவந்ததும் உடனே இருவரும் சென்னை கிளம்ப அங்கிருந்து அவள் காணாமல் போய் இருந்தாள்.
ஒரு பெருமூச்சு விட்டவன் யாழிசையை திரும்பிப் பார்க்க அவளோ ஜன்னலுக்கு வெளியே மேகக்கூட்டங்களை வெறித்துக் கொண்டு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தாள்
அத்தோடு ரிஷி அவனோடு கடைசியாக அலைபேசியில் பேசிய வார்த்தைகள் நியாபகத்தில் வந்தது.
"வார் இல்ல...அம்மு.. எப்படியா...வது நீ..தான் அவள தேடி கண்டு பிடிக்கணும். அவள நல்...லா பா...த்துக்க"
"ரிஷி எங்க இருக்க? என்ன ஒரு மாதிரியா பேசுற? என்ன ஆச்சு? குட்டிமாவ பாத்துட்டியா?" அத்தோடு அலைபேசி துண்டிக்கப்பட்டிருக்க ரிஷி சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி இருக்கும் செய்தியே ப்ரதீபனை எட்டியது.
சண்டே உறவால் உயிரானவள் first epi தரதா சொன்னேன். இன்னும் complete பண்ணல. bcz ரிஷி செத்துட்டான்னு சொன்னதும். கலவரம் ஆகிருச்சு. நாளைக்கு UD உண்டு. அதன் பிறகு யாரும் UD கேக்க கூடாது. செவ்வாய் தான் யாழ் பேபி வருவா.
கயலை திரும்பிப் பார்த்த ப்ரதீபனின் எண்ண ஓட்டம் யாழிசை அவன் வாந்தி எடுத்து சுத்தம் செய்த நாளுக்கு பயணித்தது.
காலையில் வெகுநேரமாக தூங்கியவன் எழுந்ததே பத்து மணியளவில் அறையின் சுகந்தமும், சுத்தமும், நேர்த்தியும் கண்ணில் பட நேற்று என்ன நாள் என்பதையும், இரவு என்ன செய்தான் என்ற நியாபகமும் வர கூடவே யாழிசையின் முகமும், அவள் அவனுக்காக செய்தவைகளும் ஒன்றன் பின் ஒன்றாக நியாபகத்தில் வரவே!
"ரிஷிக்கு அவள் கணவன் என்ற உரிமையில் செய்தாள் எனக்கு எதற்கு செய்தாள்" மூளை கேள்வி எழுப்பினாலும் எல்லா பெண்களையும் தப்பானவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பவனுக்கு யாழிசையை அந்த பட்டியலில் இட மனம் அனுமதிக்கவில்லை.
ரிஷியிடம் பேச வேண்டும் என்ற முடிவோடு குளித்து தயாராகி வந்தவன் ரிஷியே மாடியிலிருந்து இறங்கி வருவதை கண்டு
"டேய் சென்னையில் இருக்க வேண்டியவன் இங்க என்னடா பண்ணுற? ஏதாவது முக்கியமா மறந்து விட்டுட்டு போனதை எடுக்க வந்தியா? போன் பண்ணி இருந்தா நானே வழி பண்ணி இருப்பேனே!" ஆச்சரியமாக விழி விரித்தவன் நண்பன் அமைதியாக எதையோ யோசிப்பதை பார்த்து
"என்னடா" என்று தோளில் கை வைக்க
"நேத்து உன் பர்த்டே இல்ல" சங்கடமாக ப்ரதீபனை ரிஷி ஏறிட
"நண்பன் நீ இல்லனா என்ன அதான் உன் மனைவி இருந்தாளே!" என்றவன் யாழிசை அவனுக்காக செய்தவைகளை சொல்லி அவளை புகழ்ந்து பேச முதல் முறையாக தான் செய்ததை எண்ணி வருந்தலானான் ரிஷி.
"ரிஷி நா ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்காத அந்த பொண்ணுக்கு நீ கொஞ்சம் கூட பொருத்தமில்லை. அவளை ஊருக்கு அனுப்பிடு. உன்ன உண்மையாகவே நேசிக்கிறா உண்மை தெரிஞ்சா தாங்க மாட்டா"
பிரதீப் பேசப் பேச மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தவன் கடைசி வாக்கியத்தில் உடல் இறுகி நின்றான்.
அதன் பின் இருவரும் ஒன்றாகத்தான் மும்பையிலுள்ள பிரதான நகைக்க கடைக்கு சென்றார்கள். அங்கிருந்து ரிஷி மீண்டும் சென்னை செல்வதாக விடைபெற்று சென்றிருந்தான்.
இரவில் வீடு வந்த ப்ரதீபனுக்கு யாழிசையிடம் பேச வேண்டும் என்று தோன்ற அவளை அழைத்து வருமாறு ராமு தாத்தாவிடம் கூற அவர் சொன்ன பதில் ரிஷி யாழிசையை அழைத்துக் கொண்டு சென்னை சென்றான் என்பதே! அதன் பின் இரண்டு நாட்களில் அவன் நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்னை சென்றாலும் யாழிசையை சந்திக்க முடியவில்லை. அன்றிலிருந்து மூன்றாவது நாள் ரிஷி மும்பை வந்ததும்,யாழிசைதான் கயல் என்று தெரியவந்ததும் உடனே இருவரும் சென்னை கிளம்ப அங்கிருந்து அவள் காணாமல் போய் இருந்தாள்.
ஒரு பெருமூச்சு விட்டவன் யாழிசையை திரும்பிப் பார்க்க அவளோ ஜன்னலுக்கு வெளியே மேகக்கூட்டங்களை வெறித்துக் கொண்டு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தாள்
அத்தோடு ரிஷி அவனோடு கடைசியாக அலைபேசியில் பேசிய வார்த்தைகள் நியாபகத்தில் வந்தது.
"வார் இல்ல...அம்மு.. எப்படியா...வது நீ..தான் அவள தேடி கண்டு பிடிக்கணும். அவள நல்...லா பா...த்துக்க"
"ரிஷி எங்க இருக்க? என்ன ஒரு மாதிரியா பேசுற? என்ன ஆச்சு? குட்டிமாவ பாத்துட்டியா?" அத்தோடு அலைபேசி துண்டிக்கப்பட்டிருக்க ரிஷி சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி இருக்கும் செய்தியே ப்ரதீபனை எட்டியது.