அவளே என் தோழனின் வசந்தம் - 3 - அ

Advertisement

surthi

Well-Known Member
ராமிடம் ரிஷி கூறிவிட்டு தன் காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தான் இவன் தன் காரை வீட்டு போர்டிகோவில் நிறுத்திவிட்டு இறங்கினான் இறங்கிய உடன் தான் கவனித்தான் தன்னை நோக்கி ஒரு நபர் ஓடி வருவதைக் அதை கண்டவுடன் ரிஷியை அறியாமலே அவன் உள்ளே பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது அவனும் அந்நபரை நோக்கி நகர்ந்தான் அவன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த நபர் திடீரென்று தான் ஓடி வந்து கொண்டிருக்கும் பாதையில் இருந்து விலகினாள் அவள் உலகமும் விலகவும் ரிஷியின் மேல் தண்ணீர் பீச்சியடிக்கவும் சரியாக இருந்தது

எல்லாம் என்ன நடக்கின்றது என்று மற்றவர் அதாவது அங்குள்ளவர்கள் உணர்வதற்கு முன்பே நிகழ்ந்து விட்டது அங்கு நனைந்தவன் சாதாரணமாக இருக்க அவன் நனைவதற்கு காரணமானவளோ தனக்கும் அதற்கும் எச்சம்பந்தமும் இல்லை என்பது போல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க இதை பார்த்துக்கொண்டு இருந்தோரும் அவ்விடத்தில் இருந்த வேலைக்காரர்களும் தான் இனி என்ன நடக்குமோ என்ற பயத்திலும் பதற்றத்திலும் இருந்தனர். ஆனால் கோபப்பட வேண்டியவனோ பயப்பட வேண்டி அவளோ அதற்கு நேர்மாறாக இருந்தனர்

(சரி இப்போது ரிஷியின் மேல் நீர் ஊற்றியது யார் என்று தெரிய வேண்டுமானால் தெரியனுமா அப்போ ரிஷி அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டில் என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் பார்ப்போமா)

ரிஷியும் ராமும் அலுவலகத்திற்கு சென்றபின் பிரியா மீரா அம்மு மூவரும் உணவு உண்டு விட்டு எழுந்தனர் பின் ப்ரியாவும் மீராவும் அம்முவிடம் அம்மு நாங்க வீட்டுக்கு போறோம் என்று சொல்லி கிளம்பினர் உடனே அம்மு அவ்விருவரிடம் நீங்க ரெண்டு பேரும் ஹரிஷை பார்க்க போகவில்லையா என்று கேட்டார் அதற்கு மீரா அம்மு வானதி அம்மா நான் பார்த்துக்குறேன் நீங்க போயிட்டு வாங்க சொல்லிட்டாங்க ஆனாலும் அவங்களுக்கு வெளி சாப்பாடு ஒத்துக்காது இல்லையா அதனால வீட்டில வந்து சமைச்சு எடுத்துட்டு போகலாம் அப்படின்னு வந்தோம் இங்கே வந்த இடத்துல இந்த ராம் எருமை பண்ணின வேலையால எல்லாம் சொதப்பிடுச்சு என்றாள்

அம்மு உடனே சரி சரி அதெல்லாம் இப்போ பெரிசு பண்ணாத நான் இப்ப இங்கேயே சமைச்சு தரேன் வானதி அக்காவுக்கு கொண்டுபோய் கொடு வானு அக்காக்கு துணி மணி வேணும்னா அவங்களோட டிரஸ் இங்கே 4 செட் இருக்கு அதுல தேவையானதை எடுத்துட்டு போங்க என்று கூறி அம்மு சமையல் அறைக்கு சென்றார் அவர் பின்னோடு மீராவும் ப்ரியாவும் சென்றனர் மூவரும் சேர்ந்து அடுத்தவேளைக்கான உணவை செய்வதில் கவனம் செலுத்தினர் அப்போது திடீரென்று ஏதோ விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டு அடித்து பிடித்து கொண்டு வந்தனர் வேலையாட்களும் அங்கு கூடினர் அப்போது அம்மு மேலே நிமிர்ந்து பார்த்த போது அங்கு அனு அப்போதுதான் தூங்கி விழித்த நிலையில் கண்ணை கசக்கிக் கொண்டு மாடியிலிருந்து இறங்கி கொண்டிருந்தாள் அவள் இறங்கும் போது கைபட்டு அந்த பூ ஜாடி உடைந்து இருக்கலாம் என கணித்தார் இவர்கள் எல்லோரும் அணுவை கவனித்துக் கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ பதினாறு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது அந்த ஸேப்ஃஹர்டு கஃன்ஃகள் (shepherd kangal) வகையை சேர்ந்த நாய் அதைக் கண்டு மீராவும் அம்முவும் பயந்தனர் என்றான் பிரியா அலறிய விட்டாள் (பின் சிறு எறும்புக்குக் கூட விரட்டுபவள் பயப்படுபவன் இந்த பெரிய வேட்டை நாயை கண்டு அலறுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை)

இவர்கள் இவ்வாறு பயப்படுவதை கண்ட அனு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள் அவளின் சிரிப்பு சத்தத்தில் அவளின் இருப்பை உணர்ந்த மற்ற மூவருக்கும் பகீரென்றது (பின்னர் பயம் வராமல் என்ன செய்யும் அனுவிற்கு நடந்த அந்த சம்பவத்தின் பின் அவளுக்கு நாய் பூனை அதாவது செல்லப்பிராணிகளின் அருகில் சென்றால்கூட மூச்சு முட்ட ஆரம்பித்துவிடும்) அதனாலேயே செல்லப்பிராணிகளை அவளருகில் விடாமல் இருந்தனர் அதுதான் அவர்களின் பயத்திற்கும் காரணம் சரி இனி அனு என்ன செய்கிறாள் என்று பார்ப்போமா

(அதோடு இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று அது என்னவென்றால் எப்பொழுதும் அந்த நாய் இல்லை இல்லை அதன் பெயர் டைகர் நான் என்று சொன்னால் அனு என்னை தீர்த்து கட்டி விடுவாள் என்னை மட்டும் இல்லை உங்களையும் தான்)


டைகர் அனுவை சுற்றிச் சுற்றி வந்தது டைகர் உள்ளே வந்ததுமே அதன் பின்னேயே டைகர் மற்றும் அதன் நண்பர்களான டாம் ஜெஃப்ரி ஜாக்கி(Tom, Jeffrey, Jackie) இவற்றை பராமரிப்பவரான வேலு வந்தார் இவர் இக்குடும்பத்தில் இரண்டு தலைமுறைகளாக வேலை பார்ப்பவர் நம்பிக்கைக்குரியவர் கூட குடும்பத்திற்காக இனியும் கொடுக்க தயங்காதவர் இவருக்கு அணு மற்றும் ரிஷி என்றால் பிரியம் அதிகம் தான் ஏனெனில் மற்றவர்கள் அவரை ஒரு வேலையாளாக பார்த்தாலும் அனுவும் ரிஷியும் அவரை தாத்தா தாத்தா இன்று பிரியமாக சுற்றி வருவார்கள்

வேலுவும் உள்ளே நுழைந்தவுடன் அங்கிருந்த சூழ்நிலையை கண்டு தன் கையை பிசைந்தார் அவரை கவனித்து அவரின் நிலையை உணர்ந்த மீரா அம்முவின் காதில் எதையோ ஓதினாள் பின் அவள் மெதுவாக நகர்ந்து சமையலறைக்கு சென்றாள் அவை சமையலறைக்கு நகர்ந்தவுடன் அம்மு பிரியாவை பார்த்து அதாவது அனுவை ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டேன் ப்ரியாவிடம் ப்ரீ இன்னிக்கு இந்த ரிஷி எங்க போனான் தெரியலை சரி அதை விடு இன்னைக்கும் தோட்டத்துல அந்த நீல நிற ரோஸ் பூத்திருக்கு அத பறப்பு தரச் சொல்றேன் நீ அன்னிக்கு கேட்டிருந்த தானே என்று கூறினார் அம்மு ஏன் அப்படி கூறினார் என்றால் அனுவிற்கு பூக்களை கொய்வது அதாவது செடியிலிருந்து பரைப்பது பிடிக்காது அதனாலேயே அப்படி கூறினார்

பின் வேலுவிடம் திரும்பி வேலு அண்ணா சின்னாவை வரச்சொல்லுங்க என்று கூறினார் அதற்கு வேண்டும் வேலுவும் சரிமா வரச் சொல்வேன் என்று அவர் சொல்லி முடிக்கவும் அவரை அனு மின்னல் வேகத்தில் கடக்கவும் சரியாக இருந்தது அனு அங்கிருந்து சென்றவுடன் அம்மு வேலுவிடம் வேலு அண்ணா சீக்கிரம் டைகர் கூட்டிட்டு போங்க எனக் கூறினார் வேலுவும் தலையாட்டிவிட்டு டைகரை இழுத்துச் சென்றார் அவர் பாதி தூரம் எடுத்துச் சென்றிருக்க மாட்டார் அவரின் கையிலிருந்து துள்ளி தன்னை விடுவித்து கொண்டு அதுவும் அனு சென்ற திசை நோக்கி ஒரே பாய்ச்சலில் சென்றது அது துள்ளியதில் தடுமாறிய அவர் சுதாரிப்பதற்குள் எல்லாம் நடந்துவிட்டது உடனே உள்ளே ஓடிச்சென்று மூன்று பெண்களிடமும் இதைக் கூறினார்

இதைக் கேட்ட உடனே மூவருக்கும் பயம் அதிகரித்தது அந்த பயத்துடனே அடுத்த நொடியே அவர்களும் தோட்டத்தை நோக்கி ஓடினர் பின் வேலு அம்மு பிரியா மீரா நால்வரும் சேர்ந்து அனு டைகர் இருவரின் தேடிக்கொண்டே ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையாக சென்றனர் அதில் பிரியா தேடிக்கொண்டே மரத்தடியில் வந்து நிற்கவும் அவளைக் கண்டு மீரா அவளை நெருங்கவும் அவ்விருவர் மேலும் தண்ணீர் விழவும் சரியாக இருந்தது திடீரென தண்ணீர் தன்மேல் விடவும் ப்ரியா அலறிக்கொண்டே துள்ளிக் குதித்தாள் அவள் அலறல் சத்தம் கேட்டு அங்கு தோட்ட வேலைக்காரன் முதற்கொண்டு எல்லோரும் அவ்விடத்தில் கூடிவிட்டனர்

அவர்களின் நிலை கண்டு அனு சிரிக்க ஆரம்பிக்கவும் டைகர் துள்ளிக்குதித்தது என்றால் அங்குள்ளவர்களும் தங்கள் சிரிப்பை கட்டுப்படுத்த இயலாமல் சிரிக்க ஆரம்பித்தனர் ஆனால் இங்கு பாவத்திற்குரிய ஜீவன்களான பிரியாவும் மீராவும் அனுவை முறைத்துக் கொண்டு இருந்தனர்

அப்பொழுது அனு மெதுவாக மரத்திலிருந்து இறங்கினாள் அவள் இறங்கவும் அம்மு அவள் அருகில் வந்து அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தார் அவளுக்கு எதுவும் இல்லை என்றவுடன் தான் அவருக்கு மூச்சே சரியாக வந்தது அனு கீழே இறங்கவும் அதுவரை அனுவை முறைத்துக் கொண்டிருந்த மீராவும் பிரியாவும் அவளை துரத்த ஆரம்பித்தனர் அவர்கள் தன்னை துரத்துவதை கண்ட அனுவும் ஓட ஆரம்பித்தாள் ஓடும் பொழுது பிரியாவிற்கு அங்கிருந்த டியூப் கண்ணில் பட அதை மீராவின் சுட்டிக்காட்டினால் மீராவும் அதை எடுத்துக்கொண்டு அனுவை நோக்கி வைத்து நீரைப் பீச்சுவதற்கும் ரிஷி காலிலிருந்து இறங்கி அனுவை நோக்கி வருவதற்கும் சரியாக இருந்தது ரிஷியின் வரவை கவனித்த அனு கடைசி நிமிடத்தில விலக்கிக் கொள்ளவும் ரிஷியின் வரவை எதிர்பாராத மீரா தண்ணீரை நிறுத்தாமல் பீச்சுவதற்கும் சரியாக இருந்தது


ரிஷியின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்று அடுத்த வசந்தத்தில் பார்க்கலாமா...



வசந்தம் பூக்கும்.......................
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top