அழைத்தது யாரோ! P6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
HI friends அடுத்த அத்தியாயம் இப்போதான் எழுத ஆரம்பிச்சி இருக்கேன். டீஸர் போடக் கூடாது என்று இருந்தேன். ஆனாலும் உங்கள குழப்பாம இருக்க என்னால முடியல சோ..:p:D:LOL:

images (9).jpg

இதோ மண்டபத்திலிருந்து மணமக்கள் மணமகனின் வீட்டுக்கு புறப்பட தயாராகி விட்டார்கள். கோதையின் துணிப்பெட்டி கூட கிருஷ்ணாவின் வண்டியில் ஏத்தியாச்சு. வந்தவர்கள் அனைவரிடமும் கோதை விடைபெற்றுக்கொண்டாள். ஆனால் பெற்ற அன்னை அபரஞ்சிதாவிடம் ஒரு வார்த்தைக்கு கூட இன்னும் பேச வில்லை.



அபரஞ்சிதா கோதையை சாப்பிட அழைத்த போதும் அன்னையை கண்டுகொள்ளாது "ஏய் வாங்க டி பசிக்குது" என்று அவர்களை இழுத்து சென்றிருந்தாள். அதன் பின்னும் அபரஞ்சதா மகளிடம் பேசியவைகளை காற்றில் பறக்க விட்டு அருகிலிருந்தவர்களோடு உரையாடினாலே! தவிர அன்னையோடு பேசவில்லை.



இதை கவனித்த வசந்த் "அக்கா உனக்கு என்னதான் அம்மா மேல கோபம் இருந்தாலும் அதற்கான காரணம் இப்போ ஒன்னும் இல்லனு ஆகிருச்சுல. இப்போவாச்சும் அம்மா கூட பேசேன். பாவம் அம்மா" என்று கெஞ்ச



"என்ன பாவம்? அப்பா ஒன்னும் அவங்கள ஏமாத்தளையே! எல்லா உண்மையையும் தெரிஞ்சி கிட்டு அவங்களும் அமைதியா தானே! இருந்திருக்காங்க. இதுல பாவப்பட்ட ஜென்மங்க நாங்கதான் அம்மா அப்பாவோட ரெண்டாவாவது சம்சாரம் என்று தெரிஞ்சப்போ எவ்வளவு மனக்கஷ்டத்துக்கு உள்ளானோம்.



இந்த விஷயம் நம்ம சொந்தபந்தங்களுக்கோ! நம்ம ப்ரெண்ட்ஸுக்கோ! தெரிஞ்சா அசிங்கமா பேசுவாங்கனு எவ்வளவு பயந்தோம். உன்ன விடு அம்மாக்கு மொத குழந்தையா பிறந்துட்டேன் அப்பா கூட தப்பான உறவுல பிறந்திட்டேன்னு..."



"அக்கா..." வசந்த் அதிர்ச்சியடைய



"ரெண்டாம் தாரமா ஒரு பொண்ணு கல்யாணமான ஒருத்தர கட்டிக்கிறதுனா ஆயிரம் காரணம் இருக்கும். அந்த குழந்தையோடு சைட்டுல இருந்து யாரும் யோசிக்க மாட்டாங்க. எனக்கு அப்படிதான் தோணிருச்சு. கூனிக்குறுகி நின்னேன்"



"உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருந்ததுன்னு என் கிட்ட சொல்லவே! இல்லையேக்கா... அட்லீஸ்ட் அம்மா கிட்டயாவது கேட்டிருந்திருக்கணுமே!" கோதை எவ்வளவு மனவேதனைக்கு தள்ளப்பட்டிருப்பாள் என்று வசந்தின் கண்கள் கலங்க



"கேட்டேன். ஒருநாள் பொறுக்க முடியாம கேட்டுட்டேன். மனசுல வச்சிக்கிட்டு தவிக்க முடியாம கேட்டுட்டேன்" என்ற கோதை மெளனமாக



அன்னை என்ன பதில் சொல்லி இருப்பாள் என்று வசத்தால் சுத்தமாக கணிக்க முடியவில்லை. "என்ன சொன்னாங்க?" அச்சம் கொண்டவனாகத்தான் அக்காளை ஏறிட்டான்.



"அப்போவாச்சும் உண்மைய சொல்லி தொலைச்சி இருக்கலாம்ல. அப்பா ஒன்னும் இஷ்டப்பட்டு அவங்கள கட்டிகளையே! எதோ ஒரு சூழ்நிலை கல்யாணம் பண்ண வேண்டியதாச்சுனு உண்மைய சொல்ல வேண்டியது தானே! சொல்லல. என்னமோ! அப்பாகும் அவங்களுக்கும் நான் தான் எதிரி போல, நீ எங்களுக்கு பிறக்கவே! இல்ல. உன்ன ரோட்டுல இருந்து கண்டெடுத்தோம்னு சொன்னாங்க"



"என்னக்கா சொல்லுற?" வசந்த் அதிர்ச்சியின் உச்சத்துக்கே! சென்றான்.
 
Last edited:

MaryMadras

Well-Known Member
என்னது...கோதைய ரோட்டுல இருந்து எடுத்ததா சொன்னாங்களாo_Oo_Oo_Oo_O.
அப்போ கோதை அபரஞ்சிதா,கண்ணபிரான் பொண்ணு இல்லையா:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
பஸ்மிலா டியர்

அட ராமா
அடுத்த டுவிஸ்ட்டா?
கோதை அபரஞ்சியின் மகளில்லையா?
ம்ம்ம்.........நடத்துங்க நடத்துங்க மிலா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top