Hi.....MM
சங்கீத வர்ஷினி அன்றும்......,இன்றும் .....
அன்று....இவளுக்கு முன்னுரையே தேவையில்லை...
நீலக்கண்களுக்கு அடிமையாகி,தீராத மோகம் கொண்டு
முறை தவறி நடந்தவனையே,
அப்பாவின் உடல் நலம் கருதி,
தனது எதிர்பார்ப்புகளை கூறி மணம் செய்துக் கொண்டாள்....
அவள் மீது கொண்ட தனியா தாகத்தைத் தீர்த்துக்கொண்டவன்
அவளைத் தனிமைப் படுத்தியப் போது
ஆரம்பித்தது அவளின் உள்மனப் போராட்டங்கள்...
அவளுக்கு தேவையான அவனின் அருகாமை கிட்டாத காரணத்தால்
அந்த வெறுமையை விரட்ட போதை மருந்தை நாடுகிறாள்..
அவனை குறித்த தன் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துபோன
நிலையில் தனது வாழ்வை முடித்துக்கொள்ள முயற்சிக்கிறாள்...
அவனிடம் பிடித்தம் இல்லாத நிலையில் ,அவனை கொல்ல வேண்டும்
என்ற எண்ணமும் எழுகிறது...
தேவை இல்லா எண்ணங்களையும்,போதை மருந்து
எடுக்கும் பழக்கத்தையும் விட
அவனிடமிருந்து பிரிவை நாடிச் செல்கிறாள்....
இன்று....
தன் உணர்வுகளை கட்டுக்கொள் கொண்டுவந்து
தனிமைத் துயரம் தாங்காமல்,அவனிடமே
திரும்பி வருகிறாள்....
சில பல மனப் போராட்டங்கள்....
தன்னைத் அவனிடம் உணர்த்துகிறாள்.
அவனையும் தன் மனகதவை திறந்து பேசவைக்கிறாள்....
ஒட்டாத உறவுகளிடம் நேசக் கரம் நீட்டி
உறவுகளை சரிப்படுத்திக் கொள்கிறாள்...
தனக்குரிய அடையாளத்தை ,சுயமாக ஏற்படுத்திக்கொள்கிறாள்....
தன்னால் பாதிக்கப் பட்டவர்களுக்கு,
நல்வாழ்வு ஏற்படுத்திக்கொள்ள வழி செய்கிறாள்....
தன்னை பெரும் விபத்திலிருந்து காப்பாற்றிய
அஷ்வினுடன் நட்பு கொள்கிறாள்...
தன் தீராத வெறுப்புக்குடையவனை
தனக்கு மிகவும், பிடித்தவனாக ஆக்கிக் கொள்கிறாள்...
அவனை கொன்றால் என்ன என்று கோப பட்ட
மனது,இன்று தனது தனிமையை போக்குபவன் அவன் மட்டுமே
என்று உணர்ந்து கொள்கிறது...
அவளின் நிறைவேறிய எதிர்பார்ப்புகள்....இன்று...
அவள் செய்த தப்புக்களோடு ,அவளின் குறைகளோடு...
அவளையே உயிராக காதலிக்கின்றான்,
அவளையே சுற்றி சுற்றி வருகிறான்,
அவளிடம் தன் சுயத்தை இழந்து
அவளுக்காகவே வாழ்கிறான்...
தனது இனிய நல்வாழ்க்கையை தானாகவே செப்பனிட்டுக்
கொண்ட சங்கீத ஜாதி முல்லை....மலர்ந்து
மணம் வீசும் நாட்களுக்காக ஆவலுடன்.....
வாழ்த்துகள் மல்லி....