சசி முகை 'சந்தி' ப்பில், 'பிழை' யார் பக்கம் என யோசித்து யோசித்து , மதி மந்தி ஆனது தான் மிச்சம். விது அம்மா, அப்பா யார் என தெரிந்துவிட்டது. ஆரு பெற்றோர் யாரு என மண்டை காய்கிறது. எழுத்தாளரிடம் கேட்போம் என்றால் அவரே யாருன்னு தெரியல.. சொக்கா , இது என்ன சோதனை??? இதுல வேற 'ஒன்றை ஒருவருக்கு தெளிவு படுத்தினால், மற்றொன்றில் மாட்டிக்கொள்ள வேண்டி வரும்' என்று ஒரு பெரிய இக்கு வெச்சாச்சு.... இதுல வேற, MMji எழுதின வானம் தொடாத மேகம் நிகில், அக்ஷரா சாயல் வேற அடிக்கடி தெரியுது... கடவுளே சீக்கிரம் சஸ்பென்ஸ் எல்லாத்தையும் bubble paper burst பண்ணி விடுங்க
ஹா ஹா ஹா
பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனையை விட இப்போ நமக்குத்தான் பெரிய சோதனையா வந்திருக்கு, ஹேமா டியர்
MMji சாயல் அடித்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது
First எடுத்தவுடனேயே வேற ஒருத்தர் எழுதி நான் போஸ்ட் மட்டும்தான் போடுறேன்
நான் அவளில்லைன்னு ஆரம்பத்திலேயே மல்லிகா டியர் சொல்லியாச்சு
முத்து வாப்பா பையனோன்னு கேட்டால் நான் அவளில்லைன்னு க்ஷிப்ரா டியரும் சொல்லியாச்சு
அழகி @ ஜைனப் டியர் எழுதினாங்களோன்னு கேட்டால் அதுவும் இல்லையாம்
சரி எழுத்துக்களின் வாசனையைப் பார்த்தால் ஆதிலக்ஷ்மி டியர்தானோன்னு நினைத்து கேட்டால் இதுவரை நோ ரிப்ளை
வேற நான் என்னதான் பண்ணுறது?
சரி இன்னும் நாலு அப்டேட்ஸ் போனால் பூனைக்குட்டி வெளியில் வந்து விடும்ன்னு சைலன்ட்டா நான் வெயிட் பண்ணுறேன், ஹேமா டியர்