அழைப்பு மணி அடித்துக் கொண்டே இருக்க கோபமாக கண்விழித்த பிரதீபன் கதவை திறக்க கையில் உணவு பாத்திரங்களோடு நின்று கொண்டிருந்தாள் மலர்விழி.
தான் எங்கே இருக்கோம், யார் இவன் என்று தூக்க கலக்கத்தில் பிரதீபன் இருக்க
"யார் நீ? நந்தி மாதிரி குறுக்க வந்து நிக்குற? தள்ளு..." என்றவாறு ப்ரதீபனை தள்ளி விட்டு உள்ளே வந்த மலர்விழி உணவு பாத்திரங்களை மேசையில் வைக்க
"என்ன டிலிவரி பாய்க்கு இவ்வளவு திமிரு என்றவாறு கண்ணை கசக்கி பார்த்தவன் மலர்விழியை கண்டு பொண்ணு..." என்ற பார்வையை தாங்கி நிற்க
"அமுதன் எங்க?"
"குளிக்கிறான்"
"நீ யாரு?"
"பிரென்ட்"
"தேங்க்ஸ்" என்றவள் நகர
"என்ன சொன்னேன்னு தாங்க்ஸ் சொல்லிட்டு போறா" முற்றாக தூக்கம் தூர ஓட முகத்தை கழுவியவன் சாப்பிட ஆரம்பித்தான்.
குளித்து விட்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்த அமுதன் "என்னடா... காலைலயே எந்திருச்சு சமைச்சி இருக்க, உனக்கு சமைக்க தெரியும் னு எனக்கு தெரியாதே!"
"நானே நைட் லேட்டா வந்ததுல பசி வெரீல பல்லு கூட விளக்காம சாப்பிட்டு கிட்டு இருக்கேன். எனக்கு சமைக்க எல்லாம் தெரியாது. உன் கேர்ள் பிரெண்டு தான் கொண்டு வந்தா..." சொல்லியவாறே இன்னொரு இட்லியை தட்டில் வைத்து சாம்பாரை ஊற்ற
"யாரு மலர் வந்தாளா?"
"பேரெல்லாம் தெரியல பாண்ட் ஷர்ட்ல இருந்தா. ரொம்ப திமிரு புடிச்சவளா இருக்கா... சொல்லிவை ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் நா இருக்க மாட்டேன்" சொல்லியவாறே பிரதீபன் வாயில் சாப்பாட்டை திணிக்க போக அவனின் கையை பிடித்து தடுத்த அமுதன்
"முதல்ல எந்திரிச்சு கைய கழுவு, அவளை நான் உள்ளேயே விடமாட்டேன். நீ என்னடானா அவளுக்கு கதவை திறந்துவிட்டதுமில்லாம அவளை திட்டி கிட்டே அவ கொண்டு வந்த சாப்பாட்டை சாப்புடுற" அமுதன் கோபமாக
"உனக்கு கொண்டு வந்தது தான் பசில சாப்புட்டேன். இதுக்கு போய் கோபிச்சு கிட்டு, உனக்கு ஒரு நல்ல ஹோட்டல்ல வாங்கித்தாரேன்"
"டேய் அறிவு கெட்டவனே! அவ யார்னு தெரியுமா? தெரிஞ்சா நீ சாப்பிட்டதை வாந்தி எடுப்ப"
"யார் அவ?"
"மலர்விழி ரத்னவேல்"
"சரிடா.. அதுக்கென்ன"
"மினிஸ்டர் ரத்னவேலோட பொண்ணு"
"என்னடா சொல்லுற?" கையை உதறியவாறே எழுந்துக் கொண்டவன் "அவ எதுக்கு உன் பின்னாடி சுத்திக்கு கிட்டு இருக்கா?" கோபம் கணக்க
"என்ன காதலிச்சு கல்யாணம் பண்ணனும் னு சொல்லுறா.. நா வீட்டுக்குள்ளேயே சேர்க்க மாட்டேன் நீ கதவ திறந்து உள்ள விட்டிருக்க"
"ஓஹ்.. அதான் தாங்க்ஸ் சொல்லிட்டு போனாளா?" மலர்விழியின் தாங்க்ஸ் நியாபகத்தில் வர ப்ரதீபனின் முகத்தில் கொஞ்சம் புன்னகை எட்டிப் பார்த்தது.
சனிக்கிழமை காலையிலையே சென்னையை நோக்கி பயணிக்கும் பிரதீபன் தன்னை வேலைகளில் மூழ்கடித்துக் கொண்டு நடு இரவில் தான் அமுதனின் வீட்டுக்கு செல்கின்றான். ஞாயிறு காலை பத்து மணியளவில் கடைக்கு செல்பவன் அங்கிருந்தே மும்பை புறப்பட்டு செல்வான்.
அதனாலயே மலர்விழியை அவனால் சந்திக்க முடியவில்லை. அமைச்சர் ரத்னவேலின் பொண்ணு பெயர் மலர்விழி என்பதோடு சரி அவளை அவனுக்கு தெரியாது. அமுதனின் பாதுகாப்புக்கு ஏற்படுத்தகியிருந்த இருவரும் அமுதன் குடியிருக்கும் ஏரியாவுக்குள் வராததால் மலர்விழி அங்கே இருப்பதும் அவர்களுக்கு தெரியவில்லை.
அமுதனோடு ஜாகிங் செய்யும் மலர்விழி ஒரு ஹூடி அணிந்தது தலையை மறைத்திருப்பதால் தூரத்திலிருந்து பார்த்தாலும் அவளை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. இதனாலயே அமுதனின் வாழ்வில் மலர்விழி என்பவளின் குறுக்கீடு ப்ரதீபனின் பார்வைக்கு வராமலையே போனது.
கிட்டத்தட்ட ப்ரதீபனும், மலர்விழியும் ஒரே மாதிரியான குணமுடையவங்க, ரெண்டு பேரும் மோதிக்கிட்டா ஓகே வா? ராசியான ஓகே வா?
Last edited: