இப்போ தான் எழுத ஆரம்பிச்சேன் கியூட்டிபாய்ஸ் நாளை அல்லது மறுநாள் UD தரேன். உறவால் உயிரானவள் கதையை மெல்லிய காதல் பூக்கும் முடிச்சிட்டு தொடரவா? இல்ல ரெண்டு கதையையும் ஒன்னாவே கொண்டு போகவா?
அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள் மலர்விழி. அவள் அமர்ந்திருப்பதற்கு காரணம் அவளின் தந்தை அவளுக்காக பாதித்திருக்கும் மாப்பிளையை சந்திப்பதற்க்கே! ஆனால் அந்த காபி ஷாப்போ அமுதனின் சூப்பர்மார்க்கட்டின் முன்னால் இருந்தது.
அமுதனின் அறையில் இருந்து பார்த்தால் காபி ஷாப்பின் உள்ளே இருப்பவர்கள் நன்றாக தெரியும் என்பதால் அவளின் முகம் அவனுக்கு நன்றாக தெரியும் படி அமர்ந்துக் கொண்டாள்.
அவள் சந்திக்க வேண்டிய ராஜேஷும் லம்போகினியில் ஸ்டைலாக வந்திறங்க அவனையே பாத்திருந்த மலர்விழிக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.
"ஆளும் மண்டையும், சரியான அப்பா கொண்டா இருப்பான் போல, இவன எப்படி கழட்டி விடுறது" என்ற யோசனையிலையே அவனை பாத்திருக்க அவனும் "ஹாய்" என்றவாறே அவளின் எதிர்புறம் வந்தமர்ந்தான்.
"ஹாய் மலர்விழி. ஐம் ராஜேஷ். நைஸ் டு மீட் யு" என்று கையை நீட்ட எழுந்து நின்று வணக்கம் வைத்தாள் மலர்விழி.
மலர்விழி அணிந்திருந்த பாண்ட், ஷர்ட்டுக்கும் அவள் வைத்த வணக்கத்துக்கு சம்பந்தமே இல்லாதது போல் முகபாவனை செய்தவன் திருப்பி வணக்கம் வைத்து விட்டே அமர்ந்தான்.
மலர்விழி வந்ததிலிருந்து அவளையே பாத்திருந்த அமுதன் ஒருவன் வந்து அவளோடு அமர்ந்து பேசுவதைக் கண்டு புருவம் சுருக்கி யோசிக்க கால்களோ தானாக அவனை அந்த காபி ஷாப்பை நோக்கி அழைத்து செல்ல அவளுக்கு பின்னால் உள்ள மேசையில் அமர்ந்து கொண்டான்.
"உன்ன பத்தி விசாரித்ததுல நீ ரொம்ப ப்ரீ டைப் னு சொன்னாங்க, ஆனா வணக்கம் வைக்கிற?"
"அட... உடை, நடை, பாவணைல என்ன இருக்கு நான் பக்கா தமிழ் பொண்ணு"
"ஒஹ்.. ஐ சீ.." அவளை நம்பாத பார்வை பார்த்தவன் "லெட்ஸ் கெட் மேரிட்" தன்னுடைய முடிவை உடனே சொல்ல
புன்னகைத்தவாறே "வை நோட் பண்ணலாமே. பட் நம்ம திருமணம் எந்த மாதிரியான திருமணம் னு புரியுதா?" வைட்டரை அழைத்து தனக்கு தேவையானதை ஆடர் கொடுத்து விட்டு ராஜேஷை ஏறிட அவனும் தனக்கானதை சொன்னான்.
மலர் பேசும் போதுதான் அமுதன் மலரின் பின்னால் வந்தமர்ந்தான். மலர் திருமணம் செய்யலாம் எனும் போதே "காதலிக்கிறது என்ன, கல்யாணம் பண்ண இன்னொருத்தனா? ஆளும் மூஞ்சியும்" உள்ளுக்குள் கோபம் கனன்றாலும் பல்லைக் கடித்தவாறே பொறுமை காத்தான் அமுதன்.
"இட்ஸ் ஜஸ்ட் லைக் எ பிஸ்னஸ் டீல். உன் வழில நான் குறுக்க வரமாட்டேன். என் வழில நீயும் வராத. நமக்கு இருக்குறது ஒரு லைப் தான். ஐ வாண்ட் என்ஜோய் மை லைப்" உதடு வளைத்து புன்னகைத்தான் ராஜேஷ்.
"இதுக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணனும். கூறு கெட்ட குப்பை" அமுதனின் மனம் கதறிய போதிலும் மலர்விழியின் பதிலுக்காக காத்திருந்தான்.
"பசங்க என்ன ஆட்டம் வேணாலும் போடலாம் பொண்ணுங்க மட்டும் அடங்கி இருக்கணுமா? உன்ன என்ன பண்ணலாம்?" என்று சிந்தித்தவள்
"ஐம் இன் லவ் வித் சம்வன் சோ என்னால உன் கூட வாழ முடியாது. எனக்கு பொறக்குற குழந்தைகள் கூட அவனுடையதாக இருக்கும். உன் சொத்துக்கு அவன் குழந்தைகள் வாரிசாக இருப்பாங்க. பரவால்லையா?" நான் கை குலுக்க கூட நீ லாயக்கில்லாதவன் டா என்ற பார்வையோடு வைட்டர் கொண்டுவந்து கொடுத்த குளிர்பானத்தை அருந்தியவாறு ராஜேஷ் ஏறிட என்ன பதில் சொல்வதென்று புரியாமல் முழிக்கலானான் அவன்.
"ராட்சசி என்னமா பேசுறா? பொண்ணா இவ?" மலர்விழியை திட்டினாலும் ராஜேஷ் போன்றவர்களுக்கு இவ்வாறுதான் செருப்பால் அடித்தது போல் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தான் அமுதன்.
அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள் மலர்விழி. அவள் அமர்ந்திருப்பதற்கு காரணம் அவளின் தந்தை அவளுக்காக பாதித்திருக்கும் மாப்பிளையை சந்திப்பதற்க்கே! ஆனால் அந்த காபி ஷாப்போ அமுதனின் சூப்பர்மார்க்கட்டின் முன்னால் இருந்தது.
அமுதனின் அறையில் இருந்து பார்த்தால் காபி ஷாப்பின் உள்ளே இருப்பவர்கள் நன்றாக தெரியும் என்பதால் அவளின் முகம் அவனுக்கு நன்றாக தெரியும் படி அமர்ந்துக் கொண்டாள்.
அவள் சந்திக்க வேண்டிய ராஜேஷும் லம்போகினியில் ஸ்டைலாக வந்திறங்க அவனையே பாத்திருந்த மலர்விழிக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.
"ஆளும் மண்டையும், சரியான அப்பா கொண்டா இருப்பான் போல, இவன எப்படி கழட்டி விடுறது" என்ற யோசனையிலையே அவனை பாத்திருக்க அவனும் "ஹாய்" என்றவாறே அவளின் எதிர்புறம் வந்தமர்ந்தான்.
"ஹாய் மலர்விழி. ஐம் ராஜேஷ். நைஸ் டு மீட் யு" என்று கையை நீட்ட எழுந்து நின்று வணக்கம் வைத்தாள் மலர்விழி.
மலர்விழி அணிந்திருந்த பாண்ட், ஷர்ட்டுக்கும் அவள் வைத்த வணக்கத்துக்கு சம்பந்தமே இல்லாதது போல் முகபாவனை செய்தவன் திருப்பி வணக்கம் வைத்து விட்டே அமர்ந்தான்.
மலர்விழி வந்ததிலிருந்து அவளையே பாத்திருந்த அமுதன் ஒருவன் வந்து அவளோடு அமர்ந்து பேசுவதைக் கண்டு புருவம் சுருக்கி யோசிக்க கால்களோ தானாக அவனை அந்த காபி ஷாப்பை நோக்கி அழைத்து செல்ல அவளுக்கு பின்னால் உள்ள மேசையில் அமர்ந்து கொண்டான்.
"உன்ன பத்தி விசாரித்ததுல நீ ரொம்ப ப்ரீ டைப் னு சொன்னாங்க, ஆனா வணக்கம் வைக்கிற?"
"அட... உடை, நடை, பாவணைல என்ன இருக்கு நான் பக்கா தமிழ் பொண்ணு"
"ஒஹ்.. ஐ சீ.." அவளை நம்பாத பார்வை பார்த்தவன் "லெட்ஸ் கெட் மேரிட்" தன்னுடைய முடிவை உடனே சொல்ல
புன்னகைத்தவாறே "வை நோட் பண்ணலாமே. பட் நம்ம திருமணம் எந்த மாதிரியான திருமணம் னு புரியுதா?" வைட்டரை அழைத்து தனக்கு தேவையானதை ஆடர் கொடுத்து விட்டு ராஜேஷை ஏறிட அவனும் தனக்கானதை சொன்னான்.
மலர் பேசும் போதுதான் அமுதன் மலரின் பின்னால் வந்தமர்ந்தான். மலர் திருமணம் செய்யலாம் எனும் போதே "காதலிக்கிறது என்ன, கல்யாணம் பண்ண இன்னொருத்தனா? ஆளும் மூஞ்சியும்" உள்ளுக்குள் கோபம் கனன்றாலும் பல்லைக் கடித்தவாறே பொறுமை காத்தான் அமுதன்.
"இட்ஸ் ஜஸ்ட் லைக் எ பிஸ்னஸ் டீல். உன் வழில நான் குறுக்க வரமாட்டேன். என் வழில நீயும் வராத. நமக்கு இருக்குறது ஒரு லைப் தான். ஐ வாண்ட் என்ஜோய் மை லைப்" உதடு வளைத்து புன்னகைத்தான் ராஜேஷ்.
"இதுக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணனும். கூறு கெட்ட குப்பை" அமுதனின் மனம் கதறிய போதிலும் மலர்விழியின் பதிலுக்காக காத்திருந்தான்.
"பசங்க என்ன ஆட்டம் வேணாலும் போடலாம் பொண்ணுங்க மட்டும் அடங்கி இருக்கணுமா? உன்ன என்ன பண்ணலாம்?" என்று சிந்தித்தவள்
"ஐம் இன் லவ் வித் சம்வன் சோ என்னால உன் கூட வாழ முடியாது. எனக்கு பொறக்குற குழந்தைகள் கூட அவனுடையதாக இருக்கும். உன் சொத்துக்கு அவன் குழந்தைகள் வாரிசாக இருப்பாங்க. பரவால்லையா?" நான் கை குலுக்க கூட நீ லாயக்கில்லாதவன் டா என்ற பார்வையோடு வைட்டர் கொண்டுவந்து கொடுத்த குளிர்பானத்தை அருந்தியவாறு ராஜேஷ் ஏறிட என்ன பதில் சொல்வதென்று புரியாமல் முழிக்கலானான் அவன்.
"ராட்சசி என்னமா பேசுறா? பொண்ணா இவ?" மலர்விழியை திட்டினாலும் ராஜேஷ் போன்றவர்களுக்கு இவ்வாறுதான் செருப்பால் அடித்தது போல் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தான் அமுதன்.