First first first
Condition:
1.only one answer
Question:
1.மல்லிமா கதையில் முதன் முதலாய் நீங்கள் படித்த கதை???
2.the fan moment ....டேய் நான் மல்லி ஃபேன் டா....எனும் தருணம் எந்த கதை படித்து உணர்ந்து கொண்டீர்கள்??
1.வீழ்வேனென்று நினைத்தாயோ
இந்த புக் சாந்தின்னு ஒரு தோழி present பண்ணி என் வாழ்வுல லைட் போட்டு பளிச் னு ஆக்குனாங்க..
அட சூப்பரா எழுதுறாங்களே னு மல்லி புக்ஸ்ஸா தேடினேன்..
Online அப்போ பழக்கம் இல்லை..
புக்ஸ் கிடைக்க லேட்டாச்சி..
நமக்கு தான் படிக்கற விஷயத்தில பொறுமை கிடையாதே..
எல்லா மல்லி புக்கும் எங்க கிடைக்கும் னு net ல தேடினா லட்டு மாதிரி நம்ம சைட் கிடைச்சது..
அப்புறம் என்ன..
தொபக்கடீர்னு மல்லிக் கடல் ல குதிச்சிட்டேன்..
SJM முன்னே வரை உள்ள எல்லா கதைகளும் ஒரே மூச்சில் முடிச்சேன்..
Then comes our famous & favorite விஸ்வா & வர்ஷி..
2.சங்கீத ஜாதி முல்லை
என்னைப் பொருத்தவரை இது கதையே கிடையாது.. நிஜம் தான்.
100 எபியும் ரசிச்சி ரசிச்சி...
மல்லி போடற அன்னைக்கே ஒரு ஐந்து முறை படிச்சி..
Next epi போடறவரை முந்தின எபி தினமும் படிச்சி..
மல்லி பிரேக் எடுத்து மாத இதழ் எழுத போனா.. Exam க்கு revise பண்ற மாதிரி நடுநடுவே பிடிச்ச எபி படிச்சி..
புக் வந்ததும் அது ஒரு 10 தடவை மேல படிச்சாச்சி...
இப்போ friends க்குலாம் SJM தான் present பண்றது.
விஸ்வா - வர்ஷி மேல வச்ச பாசத்தை தவிர மற்ற ஒவ்வொருவரும் அவ்வளவு பிடிக்கும்..
அஸ்வின் always special..
தாஸ், ரஞ்சி, முரளி, ஐஸ், மலர், பத்து, லூசு டாக்டர், ராஜாராம், ஜெகன்.. இப்படி எல்லோரும்..
Friends னா friends அவ்வளவு friends கிடைச்சாங்க
Night 2 மணி வரை கூட எபிக்காக வெயிட் பண்ணி... அதுவரை சைட்ல அரட்டை அடிச்சி.. சண்டை போட்டு.
First place க்கு பொன்ஸ் கூட போராடி.. அப்பப்பா.. அதெல்லாம் பொன்னான தருணங்கள்..