கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்பக் காதல் இசை பேசியதும் நீயேயன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த தீபமல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல் பாவமல்லவா
காதல் நெஞ்சின் வேதனைகள் தீருவதுண்டோ
நீ காத வழி சென்றாலும் ஆறுவதுண்டோ
ஆதி முதல் பாடம் சொன்ன பாவலன் அன்றோ (2)
என்னை ஆட வைத்து பார்த்திருந்த நாயகன் அன்றோ
அந்தி வரும் தென்றலுக்கு மாற்றமில்லையே
ஆடி வெள்ளம் ஓடி வர மறப்பதில்லையே
திங்கள் வரும் பாதையிலும் மாற்றமில்லையே (2)
விந்தை கொண்ட காதல் மட்டும் மாறுவதுண்டோ
வேர் ஊன்றி வளரும் என்று விதை விதைத்தேன்
இரு விழி போல காத்திருந்து நீரும் இறைத்தேன்
பூ முடிக்கும் ஆசைக் கொண்டு சோலை அடைந்தேன் (2)
அங்கு புயல் வீசி காதல் கொடி சாய்ந்திட கண்டேன்